“வாய்மையே வெல்லும்...”
எப்போதும் உண்மையே பேசுங்கள்..
நீங்கள் பொய் பேசினால் அந்த பொய்யை நீங்கள் காப்பாற்ற வேண்டும்..
அதேநேரம் நீங்கள் உண்மை பேசினால் அந்த உண்மை உங்களை காப்பாற்றும்..
ஒரு பொய்யை மறைக்க பல பொய்கள் சொல்ல வேண்டும்..
ஒரு உண்மையை சொல்ல அப்படி எதுவும் செய்ய வேண்டியதில்லை..
“தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் தர்மமே வெல்லும்”
இது எல்லோருக்கும் பொருந்தும்.. தாமதமாக கிடைத்தாலும் தர்மத்திற்கு என்றுமே மதிப்பு உண்டு..
உண்மை பேசுவதில் இருக்கும் இன்னொரு சிறப்பு என்னவென்றால்,
நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டியதில்லை.. உண்மை என்றும் மாறப்போவதில்லை..
பொய் சொன்னால்தான், யாரிடம் என்ன சொன்னோம், எங்கே சொன்னோம் என்றெல்லாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்..
இதை என் வேண்டுகோள் என்றுகூட எடுத்துக் கொள்ளுங்கள்..
எப்போதும் உண்மையையே பேசுங்கள்.. உங்கள் மனதிற்கு உண்மையாய் இருங்கள்.. பொய்யாக நடிக்காதீர்கள்.. மனதிற்கு பிடிக்காததை செய்ய வேண்டாம்.. அது அனைவருக்கும் வருத்தத்தையே தரும்..
வாழ்க்கை என்பது ஒருமுறைதான்.. அதை நன்றாக வாழ்ந்தோம் என்ற மன நிம்மதியை நீங்களே உங்களுக்கு தாருங்கள்..
அன்புடன் -



தினேஷ்மாயா 



0 Comments:
Post a Comment