நாம் பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி !

Tuesday, December 19, 2017


கண்கள் நான்கில்

காணப்படும்

காட்சி - ஒன்றே - அதுதான் நம்

காதல் !!

* தினேஷ்மாயா *

மீண்டும் ஒருமுறை

Friday, December 15, 2017




பல மாதங்களுக்குப் பிறகு

இன்று - மீண்டுமொருமுறை

தூக்கம் தொலைத்திருக்கிறேன் !

#தினேஷ்மாயா

கவிஞானாகிவிட்டேனோ


காரணமுமின்றி

கருவுமின்றி

கவியெழுதுவதால் - நானும்

கவிஞானாகிவிட்டேனோ ?!

#தினேஷ்மாயா




செவி சேரா மௌனங்கள்



   ஒரு நடுத்தர வர்க்கத்தின் ஆண்மகனின் ஆசைகளும் கனவுகளும் உணர்வுகளும், கடைசிவரை சொல்லப்படுவதும் இல்லை, கேட்கப்படுவதும் இல்லை..

#தினேஷ்மாயா

அர்த்தம்



அவள் பேசிய வார்த்தைகளைவிட,

அவன் பேசாத வார்த்தைகளுக்கு

அர்த்தம் அதிகம் !!

#தினேஷ்மாயா

நான்கு கண்களில்



அவளின் அழுகை

நான்கு கண்களிலும்

நீரை வார்க்கிறது !

என் கண்களையும் சேர்த்து..

#தினேஷ்மாயா

UNIVERSE

Tuesday, December 12, 2017



Home..

Street..

Home town..

Native District..

Home State..

Mother Nation..

World...

I thought all these days I belong here..

Nope..

I belong to this entire UNIVERSE !!

Definitely I can say that, if I depart from this world,

I will.land on a very very beautiful place of this UNIVERSE !!

* தினேஷ்மாயா *

Is it so ?



Suicide is not the only option !!

But - if you don't have any other option

This will.be the final option !!

- Anonymous

*  தினேஷ்மாயா *

Sometimes.....


* தினேஷ்மாயா *

காவிய காதல்

Monday, December 11, 2017





நம் முத்தம் ஒரு

ஹைக்கு -

சிறிதாக இருந்தாலும்

சிலிர்க்க வைக்கும் !!

நம் ஊடல், ஒரு

காவியம் -

கொஞ்சம் பெரிதாக இருந்தாலும்

படிக்க படிக்க குதூகலமூட்டும் !!

நம் கூடல், ஒரு

இதிகாசம் -

படிக்க படிக்க சிலிர்க்கும்

படித்து முடித்தாலும்

காலம் காலமாக மனதில் நிற்கும் !!

* தினேஷ்பூர்ணிஷா *

கவிதைகள் சொல்லவா !!


நாணத்தால் நான் நிலம் நோக்க

ஆச்சரியத்தில் நீ வான் நோக்க

நம் இதழ்கள்

கவி பேசிக்கொள்கின்றன !!

* தினேஷ்பூர்ணிஷா *

புதுப்புது அர்த்தங்கள்




என் விரல்கள் எத்தனையோ

கவிதைகள் கிறுக்கி இருக்கிறது..

ஆனால் -

என் விரல்கள் உன் தேகத்தில்

கவியெழுதும்போதுதான்

என் கவிதைகளுக்கு

புதுப்புது அர்த்தங்கள் பிறக்கிறதடி..

* தினேஷ்பூர்ணிஷா *

பத்திரமாக வைத்துக்கொள்



உன்னிடம் தந்துவிட்டு வந்திருக்கிறேன்..

அடுத்த வாரம் வந்து திரும்ப -

வாங்கிக்கொள்கிறேன்..

அதுவரை பத்திரமாக வைத்திரு -

என்னுயிரை !!

* தினேஷ்பூர்ணிஷா *

ஏழாம் சுவை



இதுவரை நான் அறிந்தது

அறுசுவை மட்டுமே..

இன்று உணர்ந்தேன்

ஏழாம் சுவையை !!

உன் இதழ்களின் தேன்சுவையை !!

* தினேஷ்பூர்ணிஷா *

மௌன ஞானி

Thursday, December 07, 2017




என் சிந்தையில் உதித்த ஞான சிறுகதை இது..

" ஒருவன் என்னிடம் கேட்கிறான்..

மூன்று பேர் ஒரு விஷயத்தைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கின்றனர்..

முதலாமவர் அந்த விஷயத்தை வாதம் செய்துக்கொண்டு இருக்கிறார்.

இரண்டாமவர் அந்த விஷயத்தை விவாதம் செய்துக்கொண்டு இருக்கிறார்.

மூன்றாமவர் அந்த விஷயத்தை விதண்டாவாதம் செய்துக்கொண்டு இருக்கிறார்.

இந்த மூவரில், யார் செய்வது சரி என்று என்னிடம் வந்து கேட்கிறான்.

நான் மௌனமாக இருந்தேன். மீண்டும் என்னிடம் இதே கேள்வியை கேட்கிறான். அப்போதும் நான் மௌனமாக இருந்தேன். அவன் இந்த கேள்வியை என்னிடம் பலமுறை கேட்டான். ஆனாலும் நான் ஒவ்வொருமுறையும் மௌனமாகவே இருந்தேன். அவன் பொறுமை இழந்து சென்றுவிட்டான்.

நான் அவனுக்கு சொன்னது அவனுக்கு புரியவில்லை. எந்த ஒரு விஷயமானாலும், அதில் வாதம் செய்வதோ விவாதம் செய்வதோ அல்லது விதண்டாவாதம் செய்வதோ சரியல்ல. அனைத்து நிலையிலும் மௌனம் காப்பதே சிறந்தது என்பதை நான் அவனுக்கு குறிப்பால் உணர்த்தினேன். ஞானம் உள்ளவர்கள் புரிந்துக்கொள்வார்கள். ஞானமற்றவர்களுக்கு ஞானம் வரும்போது மௌனத்தின் சக்தி புரியும் !"

* தினேஷ்மாயா *

கேள்வி பதில்



கேட்கப்படும் அனைத்தும்
கேள்விகள் ஆகிவிடாது..

சொல்லப்படும் அனைத்தும்
பதில்கள் ஆகிவிடாது..

* தினேஷ்மாயா *

காதலும் களவும்

Friday, December 01, 2017



ஆன்றார் உரைப்பர்

மந்திரம் கால் மதி முக்கால்..

நானுரைப்பேன்

களவு கால் காதல் முக்கால் !!

* தினேஷ்மாயா *

சொர்க்க வாசல்



நான் அவள்மேல் கொண்ட

ஆசையின் பாதையில்

பயணப்பட்டேன்..

சொர்க்கத்தின் வாசல் என்னை

அன்புடன் அழைத்தது !!

* தினேஷ்மாயா *

கள்ளி நீ




கனவுகளில்

களவாடிவிட்டு சென்ற

கள்ளி நீ !!

* தினேஷ்மாயா *

நீதானடி



இசைக்கு அடுத்து

இவ்வுலகில் - என்னுயிரை

இதுபோல் துளைத்தது

நீதானடி !!

* தினேஷ்மாயா *

எப்போது ?



உன்னோடு நான்

கைகோர்த்து நடப்பது

எப்போது ?


உன் மடியில் நான்

தலைசாய்த்து கதைபேசுவது

எப்போது ?


உன் கைகளால் நான்

உணவை சுவைப்பது

எப்போது ?


உன் கைகளால் என்

தலை முடி கோதப்படுவது

எப்போது ?


உன் அழகில் நான்

மயங்கப்போவது

எப்போது ?


உன் பார்வையால் நான்

உன்னில் தொலைவது

எப்போது ?


உன் இதழ்களில் நான்

புல்லாங்குழல் வாசிப்பத

எப்போது ?


உன் பெண்மைக்கு நான்

விடை சொல்வது

எப்போது !!!!


* தினேஷ்மாயா * 

வானவில்



என்னவள் -

தன் கைகளில்

கொஞ்சம் கோலப்பொடியை எடுத்து

வானத்தை நோக்கி தூவினாள்...

வானவில் பிறந்தது !!

* தினேஷ்மாயா *

என் காதல்



உன் கைவிரலில் இருக்கும்
நான் அணிவித்த மோதிரத்தைப் பார்..
அதில் என் இதயத்துடிப்பு இருக்கிறது !

உனக்கு நான் பரிசளித்த ஓவியத்தைப் பார்..
அதின் என் உதிரம்
இருக்கிறது !

என் உள்ளமும் உதிரமும்
உனக்கென கொடுத்து விட்டேன்..

அதில் என் காதல் உள்ளதடி !!

* தினேஷ்மாயா *