பொன்மேனி

Monday, January 28, 2019


எல்லோருக்கும் முகத்தில் இருந்து

வியர்வை வடியும்

ஆனால்

இவளுக்கோ முகத்திலிருந்து

தங்கம் அல்லவா வழிகிறது !!

* தினேஷ்மாயா *

பிரதிஷ்டை

Friday, January 25, 2019


சிலையை செதுக்கி உயிர்கொடுத்தது போல

என் கண்முன்னே வந்து நிற்கும் இந்த

பெண் சிலையை - என் உயிருக்குள்

பிரதிஷ்டை செய்துவிட்டேன் !

* தினேஷ்மாயா *

வண்ணத்துப்பூச்சி


மின்மினி பூச்சிகள்

இரவு வானத்தை அழகுறச்செய்யும்...

இந்த வண்ணத்துப்பூச்சி

என் வாழ்க்கையை அழகுற செய்கிறாள் !

* தினேஷ்மாயா *


கரிசல் காட்டில் - ரோஜா


கரிசல் காட்டில் -

ரோஜாக்களுக்கு என்ன வேலை?

ஓ !

கரிசல் காடு நான்

அழகுரோஜா நீ !

நீதானே என்

வனத்தையும்

மனத்தையும்

அழகு படுத்தவந்தவள் !

* தினேஷ்மாயா *

வானத்தின் வெட்கம்


நீரில் தெரியும் உன் பிம்பம் கண்டு

வானம் வெட்கப்படுகிறதாம் !

தென்றல் வந்து சொல்லிவிட்டு சென்றது !

* தினேஷ்மாயா *


மருத்துவ முத்தம்


உன்னழகில் மூழ்கி

மூச்சடைத்து நிற்கிறேன்..

உடனே எனக்கு

மருத்துவ முத்தம் கொடுத்து

உயிர்கொடு !

* தினேஷ்மாயா *

ரவிவர்மன்


நானொன்று ரவிவர்மன் இல்லை

உன்னை ஓவியமாய் தீட்ட !

என் கண்களால் உன்னழகை

படம்பிடித்துக்கொள்கிறேன்..

அதை என் கண்களாலேயே

ஓவியமாய் தீட்டுகிறேன் !

என்னருகில் வந்து என் கண்களை உற்று நோக்கு !

உன் ஓவியத்திற்கு உயிர் கொடுத்து

என் இதயத்தில் நடமாட விட்டிருக்கிறேன் உன்னை !

* தினேஷ்மாயா *

வீணை !


வீணையை மடியில் வைத்து

கைகளால்தான் மீட்ட வேண்டும் என்றில்லை !

தொலைவில் இருந்தபடியே

கண்களாலும் மீட்டலாம் !

* தினேஷ்மாயா *

பூச்செடி


பூச்செடி ஒன்று

பூச்சூடிக்கொண்டு

கண்களால் ஆயிரம் கவிதை சொல்லி

கவிஞனை கிறுக்கனாக்கி

அந்த மைவிழியில்

மயக்கமுற செய்கிறாள் !

* தினேஷ்மாயா *

நான் !

Thursday, January 24, 2019


தனித்துவிடப்பட்டவன் அல்ல நான் !

துணிந்து எழுந்தவன் நான் !

* தினேஷ்மாயா *

விடாமுயற்சி


மேலே செல்வதற்கான முதல் படிதான் எட்டாமல் இருக்கும். அந்த முதல்படியை தொட்டுவிட்டால், உனது வெற்றிக்கான பயணம் வெகு சுலபம்தான்.

* தினேஷ்மாயா *

காதல் காந்தப்பூ



சூரியன் இருக்கும் திசையையே

நோக்கி இருக்குமாம் -

சூரியகாந்திப்பூ !

நீ இருக்கும் திசையையே நோக்கி இருக்கும்

நான் யார் ?

காதல் காந்தப்பூவா !?

* தினேஷ்மாயா *

உலகம் புரியும் !


இந்த நான்கு சுவற்றின் உள்ளே

இருப்பதைவிட - வெளியே குதிப்பது நல்லது..

பயப்படாதே.. உயிர் பிரியாது..

உலகம் புரியும்..

* தினேஷ்மாயா *

ராணி தேனீ


நீ

என் ராணி

என் தேன் - நீ

என் ராணி தேனீ - நீ !

உன் சேவகனாய் நொடிப்பொழுதிலும்

நான்...

* தினேஷ்மாயா *

ஆதி அந்தம்


ஆதி அந்தம் இல்லாதவன்

இறைவன் மட்டுமல்ல..

ஊடலோடு கூடலும்தான்..

எங்கே தொடங்கி எங்கே முடிப்பதென்று

எவராலும் சொல்லிவிட முடிவதில்லையே !

* தினேஷ்மாயா *

தினம் ஒரு முத்தம்


தினம் ஒரு கீரை

இதயத்திற்கு நல்லது

தினம் ஒரு முத்தம்

இதழ்களுக்கு நல்லது !!

* தினேஷ்மாயா *

நாணல் ?


கேள்விக்குறியாய் வளைந்து நிற்கிறாய்..

நாணலைப்போல் !

நாணத்தாலா ?

* தினேஷ்மாயா *

சொந்த இடம் !!


என் கைகளுக்கும் இதயத்திற்கும்

இடையிலான இந்த இடம் -

உனக்கு மட்டுமே சொந்த இடம் !!

* தினேஷ்மாயா *

இன்னிசை


மூங்கிலில் இருந்து வரும் காற்று

இசையாகிறது..

அது உன்னை கடந்து வருகையில்

இன்னிசையாகிறது...

* தினேஷ்மாயா *

நேரில் வந்த வண்ணமீன் !!



மீன்களுக்குள் அழகிப்போட்டி !

தீர்ப்பு சொல்ல என்னவளை அழைத்திருக்கிறது

அந்த மீன்கள் பட்டாளம்...

நீரில் இருக்கும் மீன்களை காண

நேரில் வந்த வண்ணமீன் !!

* தினேஷ்மாயா *

தங்கம்


தங்கம் - மஞ்சள் நிறத்தில் மட்டுமல்ல

கருப்பாகவும் ஜொலிக்கும் ..

இவளைப்போல !


* தினேஷ்மாயா * 

அந்த பயணம்



அந்த பயணம் இனிமையானதுதான்...

அலைகளில்லா அந்த பயணம்...

ஓடத்தின் ஓட்டத்தில்

ஓராயிரம் கனவுகளை சுமந்து..

இக்கரையில் இருந்து

அக்கரைக்கு...

என் மீது அக்கறையுள்ள

என் இயற்கையின்

மடியில் துயில்கொள்ள - நான் போகும்

இந்த பயணம் இனிமையானதுதான்..

* தினேஷ்மாயா * 

மீண்டு வந்திருக்கிறேன்


என் சுயநினைவை இழந்து

இத்தனை நாட்களாய்

நடைபிணமாய் இருந்திருக்கிறேன் !

இன்று மீண்டு வந்துவிட்டேன்..

மீண்டும் வந்துவிட்டேன்..

நான்.... நானாய்.....

* தினேஷ்மாயா *

உன்னையே சுற்றி சுற்றி


வேறெங்கு செல்வேன் சொல் !

திட்டினாலும் குட்டினாலும்

உன்னைத்தானே சுற்றி சுற்றி வருவேன்..

வேறென்ன தெரியும் எனக்கு ?

* தினேஷ்மாயா *

கவனம் தேவை !

கவனம் தேவை !

இந்த பூச்செண்டில் இருந்து

வண்ணத்துப்பூச்சி எட்டிப்பார்க்கிறது காண் !

* தினேஷ்மாயா * 

ஓவியனாகிவிட்டேன்..


உன்னை கவிதையாய் வடிக்க வந்தவன்..

உன்னழகை கண்டு வார்த்தைகள் வராததால்

ஓவியனாகிவிட்டேனடி..

* தினேஷ்மாயா *

நிழல் தருகிறாள் !


மரம் நிழல் தரும்..

ஆனால் இவளோ -

அந்த நிழலுக்கே நிழல் தருகிறாள் !!

* தினேஷ்மாயா *

ஸ்பரிசம் !



அந்த

அதிகாலை பனி தரும்

ஸ்பரிசம் !

இயற்கை என்னும் கருவறையில்

நானிருப்பதை உணர்த்தும் !

* தினேஷ்மாயா *

தனிமை


விரும்பி ஏற்றுக்கொண்டாலும்

விருப்பமில்லாமல் தள்ளப்பட்டாலும்

தனிமை -

என்றுமே கொடுமையானதுதான்...

* தினேஷ்மாயா * 

தள்ளிப்போ


தள்ளிப்போ..

உன் தேகத்தின் வெள்ளொளிப்பட்டு

கண் கூசுகிறது..

* தினேஷ்மாயா *


அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்




    அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
    அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
    காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
    கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும், ஓய் ஓய்
    அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
    அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

    தென்னம் இளங்கீற்றினிலே ஏ..ஏ..ஏ
    தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
    தென்னம் இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
    தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது
    தென்னைதனைச் சாய்த்துவிடும் புயலாக வரும்பொழுது
    அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
    அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

    ஓ ஓ ஓ
    ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
    ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
    காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்தமரம் வீழ்வதில்லை
    காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்தமரம் வீழ்வதில்லை
    அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
    அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

    நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது
    நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது
    நாணம் என்னும் தென்றலிலிலே தொட்டில் கட்டும் மென்மை இது
    நாணம் என்னும் தென்றலிலிலே தொட்டில் கட்டும் மென்மை இது
    அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
    அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
 
    அந்தியில் மயங்கி நின்றால் காலையில் தௌiந்துவிடும்
    அந்தியில் மயங்கி நின்றால் காலையில் தௌiந்துவிடும்
    அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்
    அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்

    அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
    அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
    காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
    காற்றினிலும் மழையினிலும் கலங்கவைக்கும் இடியினிலும்
    கரையினிலே ஒதுங்கி நின்றால் ஆடும், ஓய் ஓய்
    அமைதியான நதியினிலே ஓடும், ஓடம்
    அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

  படம் - ஆண்டவன் கட்டளை
  இசை - விஸ்வநாதன் - ராமமூர்த்தி
  பாடியவர்கள் - டி.எம். சௌந்தரராஜன் - பி. சுசீலா
  வரிகள்: கண்ணதாசன்.

* தினேஷ்மாயா *
 

நினைக்க தெரிந்த மனமே உனக்கு



நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா

மயங்க தெரிந்த கண்ணே உனக்கு
உறங்க தெரியாதா
மலர தெரிந்த அன்பே உனக்கு மறையதெரியாதா
அன்பே மறைய தெரியாதா
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா

எடுக்க தெரிந்த கரமே உனக்கு கொடுக்க தெரியாதா
இனிக்க தெரிந்த தமிழே உனக்கு கசக்க தெரியாதா
படிக்க தெரிந்த இதழே உனக்கு முடிக்க தெரியாதா
படற தெரிந்த பனியே உனக்கு மறைய தெரியாதா…
பனியே மறையதெரியாதா…

நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா

கொதிக்க தெரிந்த நிலவே உனக்கு குளிர தெரியாதா
குளிரும் தென்றல் காற்றே உனக்கு பிரிக்க தெரியாதா
பிரிக்க தெரிந்த இறைவா உனக்கு இணைக்க தெரியாதா
இணைய தெரிந்த தலைவா உனக்கு என்னை புரியாதா…
தலைவா என்னை புரியாதா…

நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா

படம்: ஆனந்த ஜோதி
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
வரிகள்: கண்ணதாசன்
குரல்: P.சுசீலா

* தினேஷ்மாயா *

ஹர ஹர சிவனே அருணாசலனே



நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

ஹர ஹர சிவனே அருணாசலனே
அண்ணாமலையே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

சிவ சிவ ஹரனே சோனாச்சலனே
அண்ணாமலையே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

அணலே நமச்சிவாயம்
அலலே நமச்சிவாயம்
கனலே நமச்சிவாயம்
காற்றே நமச்சிவாயம்

புலியின் தோலை இடையில் அணிந்த
புனிதக்கடலே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

கலியின் தீமை யாவும் நீக்கும்
கருணை கடலேப் போற்றி

ஹர ஓம் நமச்சிவாயா
ஹர ஓம் நமச்சிவாயா

புனலே நமச்சிவாயம் பொருளே நமச்சிவாயம்
புகழே நமச்சிவாயம் புனிதம் நமச்சிவாயம்

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
----------------------------------------
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

சிவனார் கங்கை கரையில் அமர்ந்த
சீதழ ஒளியே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

தவமே செய்யும் தபோவனத்தில்
ஜோதி லிங்கனே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

வேதம் நமச்சிவாயம் நாதம் நமச்சிவாயம்
பூதம் நமச்சிவாயம் கோதம் நமச்சிவாயம்

மணிப்பூர் அகமாய் சூட்சுமம் காட்டும்
அருணாச்சாலனே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

மங்கள சிவனாய் தங்கிடும் வடிவே
செங்கனல் வண்ணா போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

அன்பே நமச்சிவாயம் அணியே நமச்சிவாயம்
பண்பே நமச்சிவாயம் பரிவே நமச்சிவாயம்

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
-------------------------------------------
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

நினைத்த உடனே முக்தியை தந்திடும்
அண்ணாமலையே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

நிம்மதி வாழ்வில் நித்தமும் தந்திட
சன்னிதி கொண்டாய் போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

அருளே நமச்சிவாயம் அழகே நமச்சிவாயம்
இருளே நமச்சிவாயம் இனிமை நமச்சிவாயம்

சித்தர் பூமியாய் சிவலயம் காட்டும்
அண்ணாமலையே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

பக்தர் நெஞ்சினை சிவமயாமாக்கும்
சிவபெருமானே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

குருவே நமச்சிவாயம் உயிரே நமச்சிவாயம்
அருவே நமச்சிவாயம் அகிலம் நமச்சிவாயம்

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
---------------------------------------------
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

அன்னை உமைக்கு இடமாய் உடலில்
ஆலயம் தந்தாய் போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

சொன்ன வண்ணமே
செய்யும் நாதனே
சோனாசலனே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

ஆதியும் நமச்சிவாயம் அந்தமும் நமச்சிவாயம்
ஜோதியும் நமச்சிவாயம் சுந்தரம் நமச்சிவாயம்

சூரியன் சந்திரன் அஷ்டவ சுட்கன்
ஒதிடும் நாதா போற்றி
சிவ ஓம் நமச்சிவாய

சுந்தரி உண்ணாமலையுடன் திகழும்
அண்ணாமலையே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

சம்பவம் நமச்சிவாயம் சத்குரு நமச்சிவாயம்
அம்பிகை நமச்சிவாயம் ஆகமம் நமச்சிவாயம்

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
---------------------------------------------------------
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

எட்டா நிலையில் நெட்டாய் எழுந்த
வேதலிங்கமே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

பற்றாய் இருந்து பற்றும் எவருக்கும்
பாதை காட்டுவாய் போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

கதிரும் நமச்சிவாயம் சுடரும் நமச்சிவாயம்
புதிரும் நமச்சிவாயம் புவனம் நமச்சிவாயம்

ஜோதி பிழம்பின் சுடரில் கனிந்த
அண்ணாமலையே போற்றி
சிவ ஓம் நமச்சிவாய

ஆதி பிழம்பில் ஆலயம் கொண்ட
அடி அண்ணாமலை போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

குளிரே நமச்சிவாயம் முகிலும் நமச்சிவாயம்
பனியும் நமச்சிவாயம் பருவம் நமச்சிவாயம்

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
------------------------------------------
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

குமரகுருவான குகனே பனிந்த
குருலிங்கேசா போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

இமய மலைமீது வாசம் புரியும்
அமரோர் அரசே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

மண்ணும் நமச்சிவாயம் மரமும் நமச்சிவாயம்
விண்ணும் நமச்சிவாயம் விளைவும் நமச்சிவாயம்

மணிமலையாகிய மந்திர மலையில்
சுந்தரமானாய் போற்றி
சிவ ஓம் நமச்சிவாய

அணியா பரணம் பலவகை சூடும்
அருணாச்சலனே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

மலையே நமச்சிவாயம் மலரே நமச்சிவாயம்
சிலையே நமச்சிவாயம் சிகரம் நமச்சிவாயம்

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
----------------------------------------
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

குமரகுருவான குகனே பனிந்த
குருலிங்கேசா போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

இமய மலைமீது வாசம் புரியும்
அமரோர் அரசே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

மண்ணும் நமச்சிவாயம் மரமும் நமச்சிவாயம்
விண்ணும் நமச்சிவாயம் விளைவும் நமச்சிவாயம்

மணிமலையாகிய மந்திர மலையில்
சுந்தரமானாய் போற்றி
சிவ ஓம் நமச்சிவாய

அணியா பரணம் பலவகை சூடும்
அருணாச்சலனே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

மலையே நமச்சிவாயம் மலரே நமச்சிவாயம்
சிலையே நமச்சிவாயம் சிகரம் நமச்சிவாயம்

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
----------------------------------------
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

கம்பதிலையான் குகனை கண்ணில்
படைத்த சிவனே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

நம்பிய நெஞ்சில் நலமே அளிக்கும்
நாகா பரணா போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

திருவே நமச்சிவாயம் தெளிவே நமச்சிவாயம்
கருவே நமச்சிவாயம் கனிவே நமச்சிவாயம்

அருணை நகர சிகரம் விரிந்த
அக்னிலிங்கனே போற்றி
சிவ ஓம் நமச்சிவாய

கருணை வேண்டி காலடி பணிந்து
சரணம் செய்தோம் போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

பெண்ணும் நமச்சிவாயம் ஆணும் நமச்சிவாயம்
என்னம் நமச்சிவாயம் ஏகம் நமச்சிவாயம்

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
----------------------------------------
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

மூன்று மூர்த்திகளின் வடிவாய் எழுந்த
முக்கண் அரசே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

தோன்றி வளர்ந்து துலங்கிடும் கதிரே
சூல நாதனே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

ஒலியே நமச்சிவாயம் உணர்வே நமச்சிவாயம்
வெளியே நமச்சிவாயம் விசையே நமச்சிவாயம்

மோன வடிவாகி மோஹனம் காட்டும்
மூர்த்திலிங்கனே போற்றி
சிவ ஓம் நமச்சிவாய

ஞானம் வழங்கி நர்கதி அளிக்கும்
நந்தி வாகனா போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

நாகம் நமச்சிவாயம் ரகசியம் நமச்சிவாயம்
யோகம் நமச்சிவாயம் யாகம் நமச்சிவாயம்

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
----------------------------------------
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

அர்த்தநாரியாய் வித்தகம் செய்யும்
அருணாச்சலனே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

நர்த்தன தாண்டவ நாடகம் ஆடும்
ராக நாதனே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

அதிர்வும் நமச்சிவாயம் அசைவும் நமச்சிவாயம்
நிலையும் நமச்சிவாயம் நிறைவும் நமச்சிவாயம்

ரமண முனிக்கு ரகசியம் சொன்ன
ராஜலிங்கனே போற்றி
சிவ ஓம் நமச்சிவாய

இமையோர் தலைவன் பதவியும் வழங்கும்
ஈசமகேசா போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

கோடை நமச்சிவாயம் கொண்டலும் நமச்சிவாயம்
வாடையும் நமச்சிவாயம் தென்றலும் நமச்சிவாயம்

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
----------------------------------------
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

பரணி தீபமாய தரணியில் ஒளிரும்
பரமேஷ்வரனே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

ஹரஹர என்றால் வரமழை பொழியும்
ஆதிலிங்கனே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

சித்தியும் நமச்சிவாயம் முக்தியும் நமச்சிவாயம்
பக்தியும் நமச்சிவாயம் சக்தியும் நமச்சிவாயம்

கார்த்திகை திருநாள் உற்சவம் காணும்
தீபச்சுடரே போற்றி
சிவ ஓம் நமச்சிவாய

தீர்த்தம் யாவிலும் நீராடிடுவாய்
அருணாச்சலனே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

நிலவே நமச்சிவாயம் நிஜமே நமச்சிவாயம்
கலையே நமச்சிவாயம் நினைவே நமச்சிவாயம்

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
----------------------------------------
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

சுற்றிட சுற்றிட வெற்றிகள் வழங்கும்
சோனாலச்சனே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

பொற்ச்சபைதன்னில் அற்புத நடனம்
புரியும் பரமே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

லிங்கம் நமச்சிவாயம் லீலை நமச்சிவாயம்
கங்கை நமச்சிவாயம் கருணை நமச்சிவாயம்

சோனை நதி தீரம் கோயில் கொண்ட
அருணாசலனே போற்றி
சிவ ஓம் நமச்சிவாய

வானவெளிதனை கோபுரம் ஆக்கி
மலையில் நிறைந்தாய் போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

செல்வம் நமச்சிவாயம் சீரும் நமச்சிவாயம்
வில்வம் நமச்சிவாயம் வேஷம் நமச்சிவாயம்

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
----------------------------------------
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

ஆதிரை அழகா ஆவுடை மேலே
அமரும் தலைவா போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

வேதியர் போற்றும் வென்சடை இறைவா
வேதப்பொருளே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

முதலும் நமச்சிவாயம் முடிவும் நமச்சிவாயம்
இடையும் நமச்சிவாயம் விடையும் நமச்சிவாயம்

நாகமுடியுடன் யோகம் புரியும்
நாகேஸ்வரனே போற்றி
சிவ ஓம் நமச்சிவாய

வேத நடுவிலே திருநீர் அணியும்
அருனேஷ்வரனே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

அம்மையும் நமச்சிவாயம் அப்பனும் நமச்சிவாயம்
நன்மையும் நமச்சிவாயம் நாதனும் நமச்சிவாயம்

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
----------------------------------------
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

அடிமுடி இல்லா ஆனந்த வடிவே
அண்ணாமலையே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

அம்மையப்பனாய் அகிலம் காக்கும்
அமுதேஷ்வரனே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

அதுவும் நமச்சிவாயம் இதுவும் நமச்சிவாயம்
எதுவும் நமச்சிவாயம் எதிலும் நமச்சிவாயம்

விடையாம் காளை வாகனம் ஏறி
விண்ணில் வருவாய் போற்றி
சிவ ஓம் நமச்சிவாய

வேண்டிய கணமே என்னிய கணமே
கண்ணில் தெரிவாய் போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

சூலம் நமச்சிவாயம் சுகமே நமச்சிவாயம்
நீலம் நமச்சிவாயம் நித்தியம் நமச்சிவாயம்

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
----------------------------------------
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

பௌர்னமி நாளில் பிறைநிலவணியும்
மகாதேவனே போற்றி
சிவ ஓம் நமச்சிவாயா

ஔஷதமலையாய்பிணிகள் தீர்க்கும்
அருணாச்சலமே போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

தீபம் நமச்சிவாயம் திருவருள் நமச்சிவாயம்
ரூபம் நமச்சிவாயம் ருத்ரம் நமச்சிவாயம்

பனிகைலாயம் தீ வடிவாகிய
அண்ணாமலையே போற்றி
சிவ ஓம் நமச்சிவாய

பனிவடிவாகிய தென்னாடுடையாய்
திருவருளேசா போற்றி
ஹர ஓம் நமச்சிவாயா

எங்கும் நமச்சிவாயம் எல்லாம் நமச்சிவாயம்
எழிலும் நமச்சிவாயம் என்றும் நமச்சிவாயம்

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா,
நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா

பாடியவர்: டாக்டர்.எஸ்.பி.பி
இசை:திரு.அர்விந்த்


* தினேஷ்மாயா *

தரை மேல் பிறக்க வைத்தான் -



உலகத்தின் தூக்கம் கலையாதோ.. ஓ.ஓ..ஒ....
உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ... ஓ.ஓ..ஓ...
உழைப்பவர் வாழ்க்கை மலராதோ..ஓ.ஓ..ஓ...
ஒருநாள் பொழுதும் புலராதோ.. ஓ.ஓ..ஓ...

தரை மேல் பிறக்க வைத்தான் -
எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான் -
பெண்களைக்கண்ணீரில் குளிக்க வைத்தான்
தரை மேல் பிறக்க வைத்தான்
எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான் -
பெண்களைக்கண்ணீரில் குளிக்க வைத்தான்
தரை மேல் பிறக்க வைத்தான்

கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை
உறவைக் கொடுத்தவர் அங்கே
அலை கடல் மேலே அலையாய் அலைந்து
உயிரைக் கொடுப்பவர் இங்கே
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இதுதான் எங்கள் வாழ்க்கை
இதுதான் எங்கள் வாழ்க்கை

தரை மேல் பிறக்க வைத்தான்
எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான் -
பெண்களைக்கண்ணீரில் குளிக்க வைத்தான்

கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடிநீர் தருபவர் யாரோ
தனியாய் வந்தோர் துணிவைத் தவிர
துணையாய் வருபவர் யாரோ
ஒருநாள் போவார் ஒருநாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒருநாள் போவார் ஒருநாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒருஜாண் வயிறை வளர்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்
ஊரார் நினைப்பது சுலபம்   

தரை மேல் பிறக்க வைத்தான்
எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரை மேல் இருக்க வைத்தான் -
பெண்களைக்கண்ணீரில் குளிக்க வைத்தான்
தரை மேல் பிறக்க வைத்தான்

படம்: படகோட்டி
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
வரிகள்: வாலி
பாடியவர்: T.M.சௌந்தர்ராஜன்

* தினேஷ்மாயா *

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்



கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் ? இல்லை
ஊருக்காகக் கொடுத்தான் !
ஒருத்தருக்கா கொடுத்தான் ? இல்லை
ஊருக்காகக் கொடுத்தான் !

மண்குடிசை வாசலென்றால்
தென்றல் வர வெறுத்திடுமா
மண்குடிசை வாசலென்றால்
தென்றல் வர வெறுத்திடுமா
மாலை நிலா  ஏழையென்றால்
வெளிச்சம் தர மறுத்திடுமா
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை     

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்

படைத்தவன் மேல் பழியுமில்லை
பசித்தவன் மேல் பாவமில்லை
கிடைத்தவர்கள் பிரித்துக்கொண்டார்
உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
பலர் வாட வாட சிலர் வாழ வாழ
ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை     

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்

இல்லை என்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லை என்பார்
மடி நிறைய பொருள் இருக்கும்
மனம் நிறைய இருள் இருக்கும்
எதுவந்த போதும் பொதுவென்று  வைத்து
வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்   

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்

படம்: படகோட்டி
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
வரிகள்: வாலி
பாடியவர்: T.M.சௌந்தர்ராஜன்

* தினேஷ்மாயா *

பாட்டுக்குப் பாட்டெடுத்து



பாட்டுக்குப் பாட்டெடுத்து
நான் பாடுவதைக் கேட்டாயோ
துள்ளி வரும் வெள்ளலையே
நீ போய்த் தூது சொல்ல மாட்டாயோ
பாட்டுக்குப் பாட்டெடுத்து
நான் பாடுவதைக் கேட்டாயோ
துள்ளி வரும் வெள்ளலையே
நீ போய்த் தூது சொல்ல மாட்டாயோ

கொத்தும் கிளி இங்கிருக்க
கோவைப் பழம் அங்கிருக்க
தத்தி வரும் வெள்ளலையே நீபோய்
தூது சொல்ல மாட்டாயோ
தத்தி வரும் வெள்ளலையே நீபோய்
தூது சொல்ல மாட்டாயோ

இளம் வாழம் தண்டாக எலுமிச்சம் கொடியாக
இருந்தவளைக் கைப் பிடிச்சு இரவெல்லாம் கண் முழிச்சு
இல்லாத ஆசையில என் மனச ஆடவிட்டான்
ஆடவிட்ட மச்சானே ஓடம் விட்டு போனானே
ஓடம் விட்டு போனானே ஓடம் விட்டு போனானே

ஊரெங்கும் தூங்கையிலே நான் உள்மூச்சு வாங்கையிலே
ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடி போய்ச் சொல்லி விடு

மின்னலாய் வகிடெடுத்து மேகமாய்த் தலைமுடித்து
பின்னலாய் ஜடைபோட்டு என் மனச எடைபோட்டு
மீன் புடிக்க வந்தவள நான் புடிக்க போனேனே
மை எழுதும் கண்ணாலே போய் எழுதிப் போனாளே

ஆசைக்கு ஆசை வச்சேன்
நான் அப்புறந்தான் காதலிச்சேன் ஹோய்
ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடிப்போய் சொல்லிவிடு

வாழைப்பூ திரி எடுத்து வெண்ணையிலே நெய் எடுத்து
ஏழை மனக் குடிசையிலே ஏத்தி வச்சான் ஒரு விளக்கு
ஏத்தி வச்ச கைகளிலே என் மனச நான் கொடுத்தேன்
நெஞ்சு மட்டும் அங்கிருக்க நான் மட்டும் இங்கிருக்க
நான் மட்டும் இங்கிருக்க ...நான் மட்டும் இங்கிருக்க


தாமரை அவளிருக்க இங்கே சூரியன் நானிருக்க
சாட்சி சொல்லும் சந்திரனே நீதான் ஓடிப்போய் தூது சொல்லு


பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ
சாட்சி சொல்லும் சந்திரனே நீ போய் தூது சொல்ல மாட்டாயோ

படம்: படகோட்டி
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
வரிகள்: வாலி
பாடியவர்கள்: T.M.சௌந்தர்ராஜன், P.சுசீலா

* தினேஷ்மாயா *

கண்ணம்மா கண்ணம்மா



பூவாக என் காதல் தேனூறுதோ
தேனாக தேனாக வானூறுதோ
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா

ஆகாயம் சாயாம தூவானமேது
ஆறாம ஆறாம காயங்களேது
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா


உன் காதல் வாசம்
என் தேகம் பூசும்
காலங்கள் பொய்யானதே

தீராத காதல்
தீயாக மோத
தூரங்கள் மடை மாறுமோ

வான் பார்த்து ஏங்கும்
சிறு புல்லின் தாகம்
கானல்கள் நிறைவேற்றுமோ

நீரின்றி மீனும்
சேறுண்டு வாழும்
வாழ்விங்கு வாழ்வாகுமோ


கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா
ஆகாயம் சாயாம தூவானமேது
ஆறாம ஆறாம காயங்களேது

மீட்டாத வீணை
தறுகின்ற ராகம்
கேட்காது பூங்காந்தலே

ஊட்டாத தாயின்
கனக்கின்ற பால் போல்
என் காதல் கிடக்கின்றதே

காயங்கள் ஆற்றும்
தலை கோதி தேற்றும்
காலங்கள் கைகூடுதே
தொடுவானம் இன்று
நெடுவானம் ஆகி
தொடும் நேரம் தொலைவாகுதே

கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா

ஆகாயம் சாயாம தூவானமேது
ஆறாம ஆறாம காயங்களேது
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா

படம்: காலா
இயக்குனர்: பா.ரஞ்சித்
இசை: சந்தோஷ் நாராயணன்

* தினேஷ்மாயா *

உல்லாலா உல்லாலா



ஹே எத்தன சந்தோசம்
தினமும் கொட்டுது உன் மேலே
நீ மனசு வெச்சுபுட்டா
ரசிக்க முடியும் உன்னால

நீ சிந்துற கண்ணீரும்
இங்கு நிரந்தரம் அல்ல
இது புரிஞ்சிக்கிட்டாலே
இங்கு நீ தாண்ட ஆள

ஹே எத்தன சந்தோசம்
தினமும் கொட்டுது உன் மேலே
நீ மனசு வெச்சுபுட்டா
ரசிக்க முடியும் உன்னால

நீ சிந்துற கண்ணீரும்
இங்கு நிரந்தரம் அல்ல
இது புரிஞ்சிக்கிட்டாலே
இங்கு நீ தாண்ட ஆள

கண்ண கட்டிக்கிட்டு
எல்லாம் இருட்டுன்னு
நீ கூவாத கூவாதப்பா

வட்டம் போட்டுக்கிட்டு
சின்ன உலகத்தில்
நீ வாழாத வாழாதப்பா

என்னை பார் நான் கைய தட்ட
உண்டாச்சு உலகம்
ஹே நான் சொன்ன பக்கம்
நிக்காம சுழலும்

டேய் என் கூட சேர்ந்து
கூத்தாடும் நிழலும்
உள்ளாற எப்போதும்
உல்லாலா உல்லாலா

பார் நான் கைய தட்ட
உண்டாச்சு உலகம்
ஹே நான் சொன்ன பக்கம்
நிக்காம சுழலும்

டேய் என் கூட சேர்ந்து
கூத்தாடும் நிழலும்
உள்ளாற எப்போதும்
உல்லாலா உல்லாலா

ரிபர ரிபாரே ரிபாரே ரிபர ரிபாரே
ரிபர ரிபாரே ரிபாரே ரிபர ரிபாரே
ரிபர ரிபாரே ரிபாரே ரிபர ரிபாரே
ரிபர ரிபாரே ரிபாரே ரிபாப்ப ரப பாப்ப

ஹே உனக்காக நில்லு
எதுனாலும் சொல்லு
சந்தோசம் குடுக்காத
எதுனாலும் தள்ளு

அசராத தில்லு
இருந்தா நீ சொல்லு
என் ஆளு ராஜா நீ
என் கூட நில்லு

உனக்காக நில்லு
எதுனாலும் சொல்லு
சந்தோசம் குடுக்காத
எதுனாலும் தள்ளு

அசராத தில்லு
இருந்தா நீ சொல்லு
என் ஆளு ராஜா நீ
என் கூட நில்லு

கையில் கெடச்சது தொலைஞ்சா
இன்னும் ரொம்ப புடிச்சது கிடைக்கும்
ஆனா ஆசை அடக்கிட தெரிஞ்சா
இங்க எல்லாம் கால் அடியில் கெடக்கும்

என்னை பார் நான் கைய தட்ட
உண்டாச்சு உலகம்
ஹே நான் சொன்ன பக்கம்
நிக்காம சுழலும்

டேய் என் கூட சேர்ந்து
கூத்தாடும் நிழலும்
உள்ளாற எப்போதும்
உல்லாலா உல்லாலா

பார் நான் கைய தட்ட
உண்டாச்சு உலகம்
ஹே நான் சொன்ன பக்கம்
நிக்காம சுழலும்

டேய் என் கூட சேர்ந்து
கூத்தாடும் நிழலும்
உள்ளாற எப்போதும்
உல்லாலா உல்லாலா

ஹே எத்தன சந்தோசம்
தினமும் கொட்டுது உன் மேலே
நீ மனசு வெச்சுபுட்டா
ரசிக்க முடியும் உன்னால

நீ சிந்தும் கண்ணீரும்
இங்கு நிரந்தரம் அல்ல
இது புரிஞ்சிக்கிட்டாலே
இங்கு நீ தாண்ட ஆள

ரிபர ரிபாரே ரிபாரே ரிபர ரிபாரே
ரிபர ரிபாரே ரிபாரே ரிபர ரிபாரே
ரிபர ரிபாரே ரிபாரே ரிபர ரிபாரே
ரிபர ரிபாரே ரிபாரே ரிபாப்ப ரப பாப்ப

படம்: பேட்ட
இசை: அனிருத்
வரிகள் : விவேக்
குரல்: அஜீஸ், கெங்கா

என்னை சாய்த்தாளே



என்னை சாய்த்தாளே
உயிர் தேய்த்தாளே
இனி வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல் தரை மோதாமல்
இனி மீள்வேனோ முழுதாக

இதழ் ஓரத்தில் நங்கை பூத்தாளே
என் பாவங்கள் தீர்த்தேன்
ஓ மழை ஈரத்தில் நனையாமல் நான்
வெளியேற தான் பார்த்தேன்
நடக்கிற வரை நகர்கிற தரை
அதன் மேல் தவிக்கிறேன்
விழிகளில் பிழை விழுகிற திரை
அதனால் திகைக்கிறேன்


நேற்று போலே வானம் அட இன்றும் கூட நீலம்
என் நாட்கள் தான் நீளும்

தள்ளிப் போக எண்ணும் கால் பக்கம் வந்து பின்னும்
கேட்காதே யார் சொல்லும்

பறவை நான் சிறகு நீ
நான் காற்றை வெல்ல ஆசைக் கொண்டேன்

பயணம் நான் வழிகள் நீ
நான் எல்லைத் தாண்டிச் செல்லக் கண்டேன்


என்னை சாய்த்தாளே
உயிர் தேய்த்தாளே
இனி வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல் தரை மோதாமல்
இனி மீள்வேனோ முழுதாக


மாலை வந்தால் போதும் ஒரு நூற்றில் பத்தில் தேகம்
செங்காந்தள் போல் காயும்

காற்று வந்து மோதும் உன் கைகள் என்றே தோன்றும்
பின் ஏமாற்றம் தீண்டும்

தவிப்பதை மறைக்கிறேன்
என் பொய்யைப் பூட்டு வைத்துக் கொண்டேன்

கனவிலே விழிக்கிறேன்
என் கையில் சாவி ஒன்றைக் கண்டேன்


என்னை சாய்த்தாளே
ரரரரர
இனி வாழ்வேனோ இனிதாக

தடுமாறாமல் தரை மோதாமல்
இனி மீள்வேனோ முழுதாக


இதழ் ஓரத்தில் நங்கை பூத்தாளே
என் பாவங்கள் தீர்த்தேன்

ஓ மழை ஈரத்தில் நனையாமல் நான்
வெளியேற தான் பார்த்தாய்

நடக்கிற வரை நகர்கிற தரை
அதன் மேல் தவிக்கிறேன்
விழிகளில் பிழை விழுகிற திரை
அதனால் திகைக்கிறேன்

படம்: என்றென்றும் புன்னகை
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
வரிகள் : தாமரை
பாடியவர்கள்: ஹரிஹரன், ஷ்ரியா கோஷல்

* தினேஷ்மாயா *

விழியிலே மணி விழியில்




விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்

விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்
ஓ ஓ ஓ அர்த்த ஜாமங்களில் நடக்கும் இன்ப யாகங்களில்
கனி இதழ்களில் வேதங்கள் நீ ஓதலாம்
விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்

கோடி மின்னல் ஓடி வந்து பாவை ஆனது
கோடி மின்னல் ஓடி வந்து பாவை ஆனது
இவள் ரதியினம் உடல் மலர்வனம்
இதழ் மரகதம் அதில் மதுரசம்
இவள் காமன் வாகனம் இசை சிந்தும் மோகனம்
அழகைப் படைத்தாய் ஓ பிரம்ம தேவனே

விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்
பா பா பா பா…னா னா னா னா

காதல் தேவன் உந்தன் கைகள் தீட்டும் நகவரி
காதல் தேவன் உந்தன் கைகள் தீட்டும் நகவரி
இன்பச் சுகவரி அன்பின் முகவரி
கொஞ்சம் தினசரி என்னை அனுசரி
மழலை அன்னம் மாதிரி மடியில் தூங்க ஆதரி
விடிய விடிய என் பேரை உச்சரி

விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்
ஓ ஓ ஓ அர்த்த ஜாமங்களில் நடக்கும் இன்ப யாகங்களில்
கனி இதழ்களில் வேதங்கள் நீ ஓதலாம்
விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்
விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்

திரைப்படம்: நூறாவது நாள்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
இசை: இளையராஜா

* தினேஷ்மாயா *

ராஜா என்பார் மந்திரி என்பார்



ராஜா என்பார் மந்திரி என்பார்
ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ
ஒரு உறவுமில்லை அதில் பிரிவுமில்லை
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்

ராஜா என்பார் மந்திரி என்பார்
ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ

கல்லுக்குள் ஈரமில்லை
நெஞ்சுக்குள் இரக்கமில்லை
ஆசைக்கு வெட்கமில்லை
அனுபவிக்க யோகமில்லை
கல்லுக்குள் ஈரமில்லை
நெஞ்சுக்குள் இரக்கமில்லை
ஆசைக்கு வெட்கமில்லை
அனுபவிக்க யோகமில்லை

பைத்தியம் தீர வைத்தியம் இல்லை
உலகில் எனக்கு ஒரு வழியில்லை

ராஜா என்பார் மந்திரி என்பார்
ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ

நிலவுக்கும் வானமுண்டு
மலருக்கும் வாசமுண்டு
கொடிக்கொரு கிளையுமுண்டு
எனக்கென்று என்னவுண்டு
நிலவுக்கும் வானமுண்டு
மலருக்கும் வாசமுண்டு
கொடிக்கொரு கிளையுமுண்டு
எனக்கென்று என்னவுண்டு

ஏன் படைத்தானோ இறைவனும் என்னை
மனதில் எனக்கு நிம்மதி இல்லை

ராஜா என்பேன் மந்திரி என்பேன்
ராஜ்ஜியம் உனக்கு உண்டு
ஒரு ராஜகுமாரன் உண்டு
நல்ல உறவுமுண்டு அதில் பரிவுமுண்டு
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுவதேன் நாளும்

தெய்வத்தில் உன்னைக் கண்டேன்
தினம்தினம் பூஜைசெய்தேன்
நிலவுக்குக் களங்கமென்று
உறவுக்குள் விலகி நின்றேன்
தெய்வத்தில் உன்னைக் கண்டேன்
தினம்தினம் பூஜைசெய்தேன்
நிலவுக்குக் களங்கமென்று
உறவுக்குள் விலகி நின்றேன்

மயக்கமும் ஏனோ கலக்கமும் ஏனோ
உலகில் உனக்கு சரித்திரம் உண்டு

ராஜா என்பேன் மந்திரி என்பேன்
ராஜ்ஜியம் உனக்கு உண்டு
ஒரு ராஜகுமாரன் உண்டு
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுவதேன் நாளும்
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுவதேன் நாளும்

திரைப்படம்: புவனா ஒரு கேள்விக்குறி (1977)
இசை: இளையராஜா
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
வரிகள்: பஞ்சு அருணாசலம்


* தினேஷ்மாயா *

விழியிலே மலர்ந்தது




விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே

உன் நினைவே போதுமடி
மனம் மயங்கும் மெய் மறக்கும் ம்... ம்.... ம்....
புது உலகின் வழி தெரியும்
பொன் விளக்கே தீபமே

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே

ஓவியனும் வரைந்ததில்லையே
உன்னைப் போல்
ஓரழகைக் கண்டதில்லையே
காவியத்தின் நாயகி கற்பனையில் ஊர்வசி
கண்களுக்கு விளைந்த மாங்கனி
காதலுக்கு வளர்ந்த பூங்கொடி

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே

கையளவு பழுத்த மாதுளை பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை
கையளவு பழுத்த மாதுளை பாலில்
நெய்யளவு பரந்த புன்னகை
முன்னழகில் காமினி
பின்னழகில் மோகினி
மோக மழை தூவும் மேகமே
யோகம் வரப் பாடும் ராகமே

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே அடடா
எங்கெங்கும் உன்னழகே
எங்கெங்கும் உன்னழகே
ம்... ம்.... ம்....


படம்: புவனா ஒரு கேள்விக்குறி
எழுதியவர்: பஞ்சு அருணாசலம்
இசை: இளையராஜா
குரல் : S.P.பாலசுப்ரமண்யம்

* தினேஷ்மாயா *

என் வானிலே ஒரே வெண்ணிலா




என் வானிலே ஒரே வெண்ணிலா
என் வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதை தாரகை
ஊர்வலம்....
என் வானிலே ஒரே வெண்ணிலா

நீரோடை போலவே என் பெண்மை
நீராட வந்ததே என் மென்மை
நீரோடை போலவே என் பெண்மை
நீராட வந்ததே என் மென்மை
சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே
வார்த்தைகள் தேவையா... ஆ....ஆ....ஆ....

என் வானிலே ஒரே வெண்ணிலா

நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்
நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்
நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்
நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம்
இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே
வெள்ளங்கள் ஒன்றல்லவா... ஆ....ஆ....ஆ....

என் வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதை தாரகை
ஊர்வலம்....

என் வானிலே ஒரே வெண்ணிலா.....

படம் : ஜானி (1980)
இசை : இளையராஜா
பாடியவர் :  ஜென்சி
பாடல் வரி : கண்ணதாசன்

* தினேஷ்மாயா *

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா



பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - குளிர்
புன்னகையில் என்னை தொட்ட நிலா

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - குளிர்
புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா - இது
எட்ட நின்று என்னை சுட்ட நிலா
வாழ் நாள் தோறும் தினம்தான் காதோரம்
பாடல் கூறும்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - குளிர்
புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா - இது
எட்ட நின்று என்னை சுட்ட நிலா

ஆறாத ஆசைகள் தோன்றும் என்னை தூண்டும்
ஆனாலும் வாய் பேச அஞ்சும் இந்த நெஞ்சம்
அவள் பேரை நாளும் அசை போடும் உள்ளம்
அவள் போகும் பாதை நிழல் போல செல்லும்
மௌனம் பாதி மோகம் பாதி
என்னை கொல்லும் என்னாளும்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - குளிர்
புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா - இது
எட்ட நின்று என்னை சுட்ட நிலா
வாழ் நாள் தோறும் தினம்தான் காதோரம்
பாடல் கூறும்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - குளிர்
புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா - இது
எட்ட நின்று என்னை சுட்ட நிலா

யாப்போடு சேராதோ பாட்டு தமிழ் பாட்டு
தோப்போடு சேராதோ காற்று பனி காற்று
வினா தாள் போல் இங்கே கனா காணும் காளை
விடை போலே அங்கே நடை போடும் பாவை
ஒன்றாய் கூடும் ஒன்றாய் பாடும்
பொன்னாள் இங்கு என்னாளோ

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - குளிர்
புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா - இது
எட்ட நின்று என்னை சுட்ட நிலா
வாழ் நாள் தோறும் தினம்தான் காதோரம்
பாடல் கூறும்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - குளிர்
புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா - இது
எட்ட நின்று என்னை சுட்ட நிலா

படம்: இதயம்
இசை: இளையராஜா
குரல்: கே.ஜே.ஏசுதாஸ்


* தினேஷ்மாயா *

பிறவிப்பயன்

Friday, January 04, 2019


இன்றுன்னை வெகு அருகில் காணும், அருட்பேறு பெற்றேன் ...

* தினேஷ்மாயா *

கவனத்திற்கு...

Wednesday, January 02, 2019

Image result for income tax




     பல நாட்களாக இந்த விஷயத்தை நான் பகிரவேண்டும் என்றிருந்தேன். இன்றுதான் சரியான நேரம் கிடைத்திருக்கிறது. வங்கியில் கடன் வாங்க அணுகும்போது, வங்கி மேலாளர் உங்களின் கடந்த மூன்று ஆண்டுகளுக்கான வருமான வரி தாக்கல் செய்த படிவத்தை கேட்பார். அதோடு, உங்கள் வங்கி கணக்கின் பற்று வரவு எப்படி இருக்கிறது என்றும் பார்ப்பார். அதாவது உங்கள் வங்கி கணக்கில், Deposit & Withdrawal transactions எப்படி இருக்கிறது என்பதை பார்ப்பார். நீங்கள் ஏதாவது oரு வியாபாரம் செய்கிறீர்கள் என்றால், உங்கள் கணக்கில் அதை காட்டுகிறீர்களா என்று பார்ப்பார். எவ்வளவுக்கு எவ்வளவு நீங்கள் அதிக transactions செய்கிறீர்களோ அதைப்பொறுத்து உங்களுக்கு தொழில் கடன் வழங்க முன்வருவார். இதை தெரிந்துக்கொண்ட மக்கள், தங்கள் வங்கி கணக்கில் அதிக முறை பணத்தை செலுத்தி, அதை எடுத்து மீண்டும் கணக்கில் செலுத்துவர். பின்னர் அதை எடுத்து மீண்டும் செலுத்துவர். இப்படி செய்வதனால், உங்கள் வங்கி கணக்கில் அதிக பற்று வரவு செய்கிறீர்கள் என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

     இதில் எந்தவித தவறும் இல்லை. ஆனால், இதில் மறைமுகமாக ஒரு சிக்கல் இருக்கிறது. வருமான வரித்துறை என்று ஒன்று இருக்கிறது  அது உங்கள் அனைவரின் கணக்கையும் கண்காணித்து வருகிறது என்பதை எவரும் அறிவதில்லை. வருமானவரித்துறையை பொறுத்தவரையில், வருடத்திற்கு ரூ.2,00,000/--க்கு மேல் உங்கள் சேமிப்பு கணக்கில் வரவு செலவு செய்துவந்தால், அந்த தகவலை வைத்து உங்களை தணிக்கை செய்யலாம்.
உதாரணமாக, வியாபாரி ஒருவர் கடை ஒன்றை நடத்தி வருகிறார். தனக்கு கிடைக்கும் பணத்தை வங்கி கணக்கில் செலுத்துகிறார். அதிலிருந்து எடுத்து மீண்டும் வரவு செலவு செய்கிறார். மீண்டும் தனக்கு வியாபாரத்தின் வாயிலாக கிடைக்கும் வருமானத்தை தன் வங்கி கணக்கில், குறிப்பாக தன் சேமிப்பு கணக்கில் செலுத்துகிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்படி செய்கையில், ஒரு ஆண்டுக்கு, அதாவது வருமானவரித்துறையை பொறுத்தவரை ஏப்ரம் மாதம் முதல் அடுத்த மார்ச் மாதம் வரையில், உங்கள் சேமிப்பு கணக்கில் சுமார் ரூ.25,00,000/- வரையில் பணத்தை செலுத்தியிருக்கிறீர்கள். ஆனால், அந்த வருடத்திற்கான உங்கள் வருமானவரி படிவத்தை நீங்கள் தாக்கல் செய்யவில்லையென்றால், வருமானவரித்துறை உங்களை தணிக்கை செய்ய அதிக வாய்ப்புகள் உண்டு. அதுவும், உடனேயே உங்களை தணிக்கை செய்யாவிட்டாலும், நீங்கள் வரவு செலவு செய்து ஆறு ஆண்டுகள் வரையிலும் எந்நேரத்திலும் உங்களை தணிக்கைக்கு உட்படுத்தலாம். உதாரணமாக. 2010-11 ஆண்டில் உங்கள் வங்கி சேமிப்பு கணக்கில் சுமார் 20 இலட்சம் வரையில் பணமாக செலுத்தி மீண்டும் எடுத்து வரவு செலவு செய்து, அந்த தணிக்கை ஆண்டுக்கான வருமானவரி படிவத்தை குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள் தாக்கல் செய்யாமல் விட்டுவிட்டால், உங்களை 2017-ம் ஆண்டு தணிக்கை செய்யலாம். ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் நீங்கள் செய்த வரவு செலவு கணக்கு இப்போது உங்களுக்கு நினைவில் இருக்க வாய்ப்பில்லை. அந்த 20 இலட்சம் ரூபாய்க்கான வருமான மூலம் என்ன என்பதை நீங்கள் சரியான ஆதாரங்களோடு நிரூபிக்க வேண்டும். இல்லாவிடில், சுமார் 8 முதல் 10 இலட்சம் வரையில் வரி செலுத்த வேண்டிவரும்.


    இதுபோன்ற சிக்கலில் இருந்து உங்களை காத்துக்கொள்ள, சில வழிமுறைகள் இருக்கிறது.

1.     உங்கள் Savings Account / சேமிப்பு கணக்கில் அதிகபட்சம் வருடத்திற்கு 

2 இலட்சம் ரூபாய்க்கு மேல் பணத்தை Deposit செய்ய வேண்டாம்.

2.     அப்படி செய்வதானால், அதற்கான தகுந்த ஆதாரங்களை வைத்திருங்கள்.

3.     நீங்கள் எதுவும் வியாபாரம் செய்கிறீர்கள் என்றால், சேமிப்பு கணக்கில் பரிவர்த்தனைகள் செய்ய வேண்டாம். அதற்காக Current Account தொடங்கி அதில் பரிவர்த்தனைகள் செய்யவும். Current Account  / நடப்பு கணக்கு தொடங்க சில வங்கிகளில் அதிக பணம் கேட்கிறார்கள் என்று நினைத்து சேமிப்பு கணக்கில் பரிவர்த்தனைகள் செய்ய வேண்டாம். இது பின்னாளில் உங்களை சட்ட சிக்கலில் கொண்டு செல்லும்.

4.     வியாபாரம் செய்பவராக இருந்தால், அதற்கான வரவு செலவு கணக்கு புத்தகங்களை பராமரித்து வாருங்கள். Sales Ledger, Purchase Legder, Stock Ledger, Day Book / Cash Book, மற்றும் உங்கள் இதர வரவு செலவு கணக்குகளை பராமரித்து வாருங்கள்.

5.     இவை எல்லாவற்றைவும் விட, உங்களின் ஆண்டு வருமானம் ரூ.2,50,000/--க்கு மேல் இருந்தால் தவறாமல் உங்கள் வருமான வரி படிவத்தை உரிய நேரத்தில் தாக்கல் செய்யவும்.

    உங்களில் நலன் கருதி இதை இங்கே பதிவு செய்கிறேன். அனைத்து தகவல்களையும் பகிர முடியாவிட்டாலும், தேவையான முக்கியமான சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறேன். உங்களின் கேள்விகளுக்கு என்னை மின்னஞ்சல் வாயிலாக தொடர்புகொள்ளவும். dhineshmaya@gmail.com

* தினேஷ்மாயா *