பேரன்பினால்

Sunday, July 28, 2019



அன்பை நான் அள்ளிக்கொடுக்கும் முன்னரே

தன் பேரன்பினால் என்னை கட்டிப்போட்டுவிடுகிறாள்

என் மகள் !!

* தினேஷ்மாயா *

தாயின்மடியில்


திருமணத்திற்கு முன்

ஒரு பெண்ணுக்கு கிடைக்கும்

தாயின் மடியும் கருவறையும் ஒன்றுதான்

 இரண்டுமே மீண்டும் கிடைக்காது !!

* தினேஷ்மாயா *

எண்ணங்கள் முடிவதில்லை




    சேருமிடம் தெரியாமல் பயணிக்கும் நம் எண்ணங்களில் நாம் மூழ்கிப்போகிறோம்.. மீளவிரும்பாமல் !!

* தினேஷ்மாயா *

இதய கைதி





என் இதயம்

உன் கன்னக்குழியில்

சிக்கித்தவிக்கிறத..

உன் புன்சிரிப்பால்

அதை விடுவிப்பாயா !!

* தினேஷ்மாயா *

தேவகானம்


இன்னிசைதான்..

உன்னுடன் சேர்த்து கேட்கையில் - அது

தேவகானம் ஆகிவிடுகிறது !!

* தினேஷ்மாயா *

நீயும் வரமே




    நம் வாழ்வின் அனைத்து நிலைகளிலும், எந்தவித சூழ்நிலையிலும் நாம் நம்பிக்கையுடன் தோள்சாய ஒருவர் நமக்கென இருப்பது வரமே !!

* தினேஷ்மாயா *

கண்ணன் வந்தான் !!!



நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு
நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு
பசிக்கு விருந்தாவன் நோய்க்கு மருந்தாவன்
பரந்தாமன் சன்னதிக்கு வாராய் நெஞ்சே!
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் – ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் – ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் ஆ..
தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்
தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்
தீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்
கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்
கேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்
தருமம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான்
தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான்
கண்னன் வந்தான்
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் – ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான்....
முடவர்களை நடக்க வைக்கும் பிருந்தாவனம்
மூடர்களை அறிய வைக்கும் பிருந்தாவனம்
முடவர்களை நடக்க வைக்கும் பிருந்தாவனம்
மூடர்களை அறிய வைக்கும் பிருந்தாவனம்
குருடர்களைக் காண வைக்கும் பிருந்தாவனம்
ஊமைகளைப் பேச வைக்கும் பிருந்தாவனம்
குருடர்களைக் காண வைக்கும் பிருந்தாவனம்
ஊமைகளைப் பேச வைக்கும் பிருந்தாவனம்
அடையாத கதவிருக்கும் சந்நிதானம்
அஞ்சாத சொல்லிருக்கும் சந்நிதானம்
சந்நிதானம் கண்ணன் சந்நிதானம் சந்நிதானம்
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் – ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான்... 
கண்ணா.. கண்ணா.. கண்ணா..
கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும்
காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும்
கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும்
காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும்
கனி மழலைக் குரல் கொடுத்துப் பாட வேண்டும்
கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும்
கனி மழலைக் குரல் கொடுத்துப் பாட வேண்டும்
கண் மறைந்த தாயும் அதைக் கேட்க வேண்டும்
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா
கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா
கவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா
கருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா
கண்ணா கண்ணா கண்ணா கண்ணா
கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் – ஏழை
கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்
கண்ணன் வந்தான்  கண்ணன் வந்தான்
திரைப்படம்: ராமு (1966)
இசை: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
வரிகள்: கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்தரராஜன்

* தினேஷ்மாயா *