வானவில்

Tuesday, December 23, 2014


வானவில்லில் இருக்கும்

ஏழு வண்ணங்களையும்

உன் ஒருத்தியிடம் மட்டுமே

என்னால் பார்க்க முடிகிறது..

* தினேஷ்மாயா *

கம்பீரம்


ஆண்களுக்கு மட்டுமல்ல

பெண்களுக்கும் கம்பீரம் அழகுதான்..

* தினேஷ்மாயா *

விடுமுறை..

Wednesday, October 15, 2014



தேர்விற்கு தயாரகவேண்டி இருப்பதால், மூன்று மாதங்களுக்கு இந்த வலைப்பக்கத்திற்கு விடுமுறை விட்டு செல்கிறேன்.

தை மாதம் மீண்டும் சந்திப்போம்..

* தினேஷ்மாயா *

அழகி

Sunday, October 12, 2014


இடையழகி

நடையழகி

இப்படி தனித்தனியே பலர் இருந்தாலும் -

மொத்தத்திற்கும் நீதான் அழகி !

* தினேஷ்மாயா *

ஏழு ஸ்வரங்கள்

Thursday, October 09, 2014



ச..ரி..க..ம..ப..த..நி..

ஏழு ஸ்வரங்களைவிடவும்

உன் “ம்” அதிகம் இனிக்கிறது எனக்கு !

* தினேஷ்மாயா *

அழகுக்கான நோபல் பரிசு



அமைதிக்கான நோபல் பரிசைப்பற்றி

எனக்கு கவலையில்லை..

அழகுக்கான நோபல் பரிசு ( நோபல் பரிசுக்கு இணையான பரிசு )

ஒவ்வொரு வருடமும் உனக்கு மட்டும்தான் !

* தினேஷ்மாயா *

மழை


நீ குடைப்பிடித்து நடந்து வருகிறாய்..

உன் மேல் தன் ஒளியை வீசமுடியாமல்

ஏக்கத்தில் வானம் வடிக்கும் கண்ணீர்தானோ -

மழை !

* தினேஷ்மாயா *

கைது செய்யுங்கள்


இவளை கைது செய்யுங்கள் !

தன் பார்வையால் என்னை

திட்டமிட்டு கொல்லப்பார்த்தவள்

இவள்தான் !!

* தினேஷ்மாயா *

புரியவில்லை


ஒருமுறை உன் பெற்றோரை

கடைத்தெருவில் பார்த்தேன்..

அவர்கள் அருகில் சென்று,

“ கவிதை நல்லா இருக்கு” - என்று

சொல்லிவிட்டு வந்தேன்..

நல்லவேலை அவர்களுக்கு புரியவில்லை !!

* தினேஷ்மாயா *

அளவுகோல்


அளவுகோல் இல்லை..

உன்னழகை அளக்க...

* தினேஷ்மாயா*

கொடுப்பாயா ?


பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள் -

கொடுப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறதாம்..

கொடுப்பாயா !?

* தினேஷ்மாயா *

காதலை பிடிக்கும்..



எனக்கு உன்னைவிட

நான் உன்மீது வைத்திருக்கும் காதல் தான்

எனக்கு அதிகம் பிடிக்கும்..

* தினேஷ்மாயா *

கன்னி ராசிக்காரன்



உண்மைதான் போல !

நான் கன்னி ராசிக்காரன்தான் !!

இந்த கன்னி கிடைக்க நிச்சயம் ராசி வேண்டும் !!!

* தினேஷ்மாயா *

பிறந்தநாள்

Monday, September 29, 2014


உன் பிறந்தநாள்..

உன் இதழில் படவேண்டும் என்பதற்காகவே

நேற்றிரவு முதல் காத்துக்கிடக்கிறது

இந்த கேக்குகள் !!

* தினேஷ்மாயா *

படையெடுப்பு


வாசலில் வந்து நிற்கிறாய்..

உன்னைப் பார்த்துவிட்டு செல்ல

படையெடுத்து வருகின்றன -

சைபீரிய பறவைகள்..

* தினேஷ்மாயா *

வேண்டுதல்


என்ன வேண்டுவதென்று தெரியவில்லை..

இவளைக்கண்டுவிட்ட காரணத்தால்,

வேண்டுதலும் வரவில்லை...

* தினேஷ்மாயா *

வெள்ளை நிறத்தொரு..



வெள்ளை நிறத்தொரு தேவதை

என் மனதில் வளருது கண்டீர் !

* தினேஷ்மாயா *

நீதானோ ?


சிலந்திக்கு வலைப்பின்னும் கலையை

கற்றுக்கொடுத்தவள் நீதானோ ?

* தினேஷ்மாயா *

ஒன்று சேரக்கூடாதா ?



நம் இதயங்கள் ஒன்று சேர்ந்தது போல

நம் இதழ்கள் ஒன்று சேரக்கூடாதா என்ன ?

* தினேஷ்மாயா *

பூவின் நடுவே



பூக்களின் நடுவே

ஒரு பூகம்பம் !

* தினேஷ்மாயா *

படபடக்கும்

Saturday, September 20, 2014


நீ அருகில் வருகையில்

என் இதயம் படபடக்கும்..

நீ அருகில் இருக்கும்போது

என் கண்கள் உன்னை படம்பிடிக்கும்..

* தினேஷ்மாயா *

உயிர் தானம்



உயிரில்லா கல்லுக்கு

உயிர் கொடுத்துக்கொண்டிருக்கிறாள் !!

* தினேஷ்மாயா *

உன் காதல்



சென்று வா

என்று எனை வழியனுப்பிவிட்டாய்..

உன் கால்கள் உள்ளே இழுத்தாலும்

உன் காதல் வெளியே இழுக்கிறது -

தெருமுற்றத்தில் என் பின்பம் மறையும்வரை !

* தினேஷ்மாயா *

காதல் கவிதை


எல்லோரும் சொல்கிறார்கள்,

நான் காதல் கவிதை எழுதுகிறேன் என்று ..

ஆனால்,

எனக்கு மட்டுமே தெரியும்

நான் நம் காதலைத்தான்

கவிதையாய் எழுதுகிறேன் என்று !

* தினேஷ்மாயா *

வாழ்க்கை வாழ்வதற்கே !

Thursday, September 18, 2014

ஒரு பூ,

தன் அருகில் இருக்கும்

மற்றொரு பூவிடம்

போட்டியிடுவதில்லை..

அது தன் அழகால் பிரகாசிக்கும்..

@@@@

அதுபோல -

வாழ்க்கை என்பது வாழ்வதற்கே !!

மற்றவருடன் போட்டியிட்டோ ஒப்பிட்டு வாழ்வதற்கோ அல்ல !

* தினேஷ்மாயா *

எவ்வளவு நாட்களாச்சு !!


இயற்கையோடு நடைபழகி எவ்வளவு நாட்களாச்சு !!

* தினேஷ்மாயா *

பெரியார் பொன்மொழி


பிறருக்கு ஒழுக்கத்தைப் பற்றிச்

சொல்லுவதை விட தன்னிடத்தில்

அது எவ்வளவு இருக்கிறது என்று

ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

- பெரியார்

* தினேஷ்மாயா *

உன்னருகில்


உன்னருகில் வேண்டாம்..

உன் நினைவருகில் இருந்தாலே போதும்..

ஓர் ஜென்மம் வாழ்ந்திடுவேன் நான்..

* தினேஷ்மாயா *

உன்னைத்தேடு



கடவுளைத் தேடினேன்..

என்னை மட்டுமே கண்டேன் !

என்னைத் தேடினேன்..

கடவுளை மட்டுமே கண்டேன் !

- சூஃபி தத்துவம்

* தினேஷ்மாயா *

கடைப்பிடிப்போம்

Wednesday, September 17, 2014


நான் எனது வாழ்நாளில் யாருடைய

உடலுக்கும், மனதுக்கும்

துன்பம் தரமாட்டேன்.

துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த

உதவிகளைச் செய்வேன்.

- வேதாத்திரி மஹரிஷி


@ இயன்றவரை இதை கடைப்பிடிப்போம் @

* தினேஷ்மாயா *

நபிகள் வார்த்தை..


இரவில்

பட்டினியாக இருக்காதீர்கள் !

- நபிகள் நாயகம்

* தினேஷ்மாயா *

ஆரோக்யமான வாழ்வு



ஆரோக்யமான வாழ்க்கைக்கு

எடை குறைப்பு மட்டும் போதாது..

நம் மனநிலையையும்

வாழ்க்கை முறையையும்

கட்டாயம் மாற்றிக்கொள்ள வேண்டும்...

* தினேஷ்மாயா *

இயற்கை உணவு


பெட்டியில் அடைத்த உணவை தவிர்ப்போம்..

இயற்கையாக கிடைக்கும் உணவை அதிகம் உட்கொள்வோம்..

* தினேஷ்மாயா *

கடனாய் கொடேன்


எனக்கும் ஒரு காலம் வரும்..

அன்று வட்டியுடன் வாங்கிக்கொள் -

இப்போது கொஞ்சம் கடனாய் கொடேன்

ஒரேயொரு முத்தத்தை !

* தினேஷ்மாயா *

இரண்டு கண்கள் போதாதா



இரண்டு கண்கள் போதாதா ?

ஏன் என்னை

நான்கு கண்களால் கொல்கிறாய் ?

* தினேஷ்மாயா *

காதல் தேர்வு


என் காதல் தேர்விற்கு

நீ எழுதிய கோனார் நோட்ஸ்தான்

தினமும் படிக்கிறேன் !

* தினேஷ்மாயா *

உள்ளுணர்வு


ஏதோ என் உள்ளுணர்வு சொல்கிறது..

மூக்குத்தி அணிந்த பெண்ணொருத்திதான்

என் மாயாவாக இருப்பாள்,

என் துணையாய் வருவாள் என்று...

* தினேஷ்மாயா *

சிறு பிழை


தமிழில் சிறு பிழையொன்றை

நேற்று கண்டுபிடித்தேன்..

முக்கனிகள் -

மா, பலா, வாழை என்றார்கள்..

உன் கன்னத்தை 

கணக்கில் எடுத்துக்கொள்ள மறந்துவிட்டார்கள் !

* தினேஷ்மாயா *

இடையில் வாழ்க்கை



மனிதனின் வாழ்க்கையும்

உந்தன் இடையும் ஒன்றே ..

எத்தனை ஏற்ற இறக்கங்கள் !!

* தினேஷ்மாயா *

பள்ளத்தாக்கு



நீ கடித்து துப்பும்

உன் நகங்கள் பூமியில் விழுந்தே

பள்ளத்தாக்குகள் ஏற்படுகிறதோ !?

* தினேஷ்மாயா *

திகட்டாத காதல்



திகட்டாத காதலை -

என்னால் உனக்கு தரமுடியும்...

* தினேஷ்மாயா *

எழுத்து


நல்லவேளை..

எழுத்தில்லாத காலத்தில் நான் பிறக்கவில்லை..

ஒருவேளை நான் அந்த காலத்தில் பிறந்திருந்தால் -

உன்னைப்பற்றி எழுதமுடியாத பாவியாகியிருப்பேன்..

* தினேஷ்மாயா *

நான் பாவம்


வர வர உனக்கு

அழகு கூடிக்கொண்டே போகிறது..

சொல்லிவை அந்த அழகிடம்..

நான் பாவமென்று !!

* தினேஷ்மாயா *




புதுவகை தாலி !



புதுவகை தாலி !

எப்படி இருக்கிறது ?

* தினேஷ்மாயா *

கவிதை



இதைவிட வேறென்ன கவிதை எழுதமுடியும் சொல்லுங்கள் ?

* தினேஷ்மாயா *

வேண்டுகோள்



உன்னை காணும்போதெல்லாம்

காதலோடு கவிதையும் வந்துவிடுகிறது !

உன் வேண்டுகோளுக்கேற்ப -

நம் முதலிரவன்று மட்டும்,

கவிதையை விட்டுவிட்டு

கவித்துவமாய் இருக்கிறேன் போதுமா ?!

* தினேஷ்மாயா *

வட்ட நிலா



பொட்டு வைக்காத

ஒரு வட்ட நிலா !

* தினேஷ்மாயா *

கிறுக்கன்


எல்லோரும் என்னை

காதல் கிறுக்கன் என்கிறார்கள்..

ஆனால் -

நான் உன்மீது தானே

கிறுக்காய் இருக்கிறேன் ?!

* தினேஷ்மாயா *

சத்தியம்


என் பிறந்தநாள் இன்று..

நாம் செய்த சத்தியத்திற்கு

இன்று மட்டும் விடுமுறை கொடுத்துவிடேன் -

எனக்காக ஒரேயொரு முத்தம் !!

* தினேஷ்மாயா *

திட்டு



நான் உன்னிடம் முத்தம் கேட்கிறேன்..

என்னை கண்டபடி திட்டுகிறாய்..

உன் முத்தத்தைவிடவும்,

உன் திட்டு அதிகம் இனிக்கிறதடி !

* தினேஷ்மாயா *