ஆவி பறக்க !

Saturday, September 23, 2017



              நேற்று நான் வழக்கமாக உணவருந்தும் அந்த உணவகம் சென்றேன். மதிய நேரம். நல்ல பசி. சுத்த சைவ சாப்பாடு மட்டுமே அங்கே கிடைக்கும். பசியோடு சாப்பிட அமர்ந்தேன். இந்த உணவகத்தில் பெரும்பாலும் எதைக்கேட்டாலும் சுடச்சுட கிடைக்கும், அப்பளம் தவிர. நான் சாப்பிட்டு முடிக்கும் நேரம், என்னருகில் ஒரு நபர் வந்து அமர்ந்தார். அவர் இலையில் தண்ணீரை தெளித்து, சாப்பிட அமர்ந்தார். பின்னர், தான் கொண்டுவந்த ஆனந்த விகடனை திறந்து தன்னருகே வைத்தார். உணவருந்தியவாரே, அதை படிக்க ஆரம்பித்தார். சொல்லப்போனால், ஆ.வி. படிப்பதில்தான் அதிக கவனமும் சாப்பிடுவதில் கவனம் இல்லாமலும் இருந்தார். இதை நான் எதுவும் சொல்லவில்லை. அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆவி பறக்க பறக்க சாப்பிட்ட காலம் போய், ஆ.வி. படிக்க படிக்க சாப்பிடும் காலம் தான் இதுவோ ?

* தினேஷ்மாயா *

நம் காதல்



என் வார்த்தைகள் உன்னை காயப்படுத்தினாலும்
உன் வார்த்தைகள் என்னை காயப்படுத்தினாலும்
காயம் என்னவோ நம்மில் ஒருவருக்குத்தான்

ஆனால், வலி என்பது நம் இருவருக்குமே !

வலியானாலும் சரி
சந்தோசமானாலும் சரி
நம் காதல் அந்த இரண்டையும் நமக்கு சரிசமமாக பகிர்ந்து அளிக்கும் என் கண்ணே !

* தினேஷ்மாயா *

விடை !!

Tuesday, September 19, 2017




காதல் நம்மை தழுவ

உறக்கம் நம்மை தழுவ

இந்த தழுவல்களிடமிருந்து

நாம் நழுவிக்கொண்டிருப்போம் !!

இல்லாத வினாவிற்கு விடையை

தேடிக்கொண்டிருப்போம் !!

* தினேஷ்மாயா *

நாமாகியிருப்போம்




இன்னும் நான்கு மாதங்களில்

இந்நேரத்தில் -

நீயும் நானும்

நாமாகி இருப்போம் !!

* தினேஷ்மாயா *

அளவில்லா காதல்

Thursday, September 14, 2017


உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று ஒரு கேள்வியை என்னிடம் வைத்திருக்கிறாய் நீ ?

இதற்கு என்னால் பதிலெல்லாம் சொல்ல முடியாதடி.. இதை ஒரு கேள்வியாகவே நான் கருதவில்லை. எல்லையில்லா, அளவில்லா அன்பை கேள்விக்குள்ளாக்குவதை நான் விரும்பவில்லை.

எனக்கு உன்னை பிடிக்கும். உன்னை மட்டுமே பிடிக்கும். ரொம்ப பிடிக்கும். உன் குழந்தைத்தனம் பிடிக்கும். தேவையில்லாத  விடயங்களுக்கு நீ பயப்படுவது பிடிக்கும். உன் சிறு சிறு சண்டைகள் பிடிக்கும். உன் பெரிய பெரிய கோபங்களும் பிடிக்கும். காலை எழுந்தது முதல் இரவு உறங்கும்வரை நாமிருவரும் உரையாடிக்கொண்டே இருப்பது மிக பிடிக்கும். நீ எனக்கு சூட்டிய செல்ல பெயர்கள் பிடிக்கும். உன் கண்கள் பிடிக்கும். உன் இதழ் பிடிக்கும். உன் நடனம் பிடிக்கும். உன் திருட்டு விழி பிடிக்கும் !

உன் கள்ளம் கபடமற்ற மனம் பிடிக்கும். என்னிடம் பேசுகையில் உனக்கு தோன்றும் வெட்கம் எனக்கு பிடிக்கும். உன் காதல் மிக மிக பிடிக்கும். உன் கொஞ்சல் ரொம்ப பிடிக்கும். நீ என்னை குழந்தையாய் பாவிப்பது பிடிக்கும். நீ என் குழந்தையாய் மாறிவிடுவது பிடிக்கும். நம் எதிர்கால திட்டமிடல்கள் பிடிக்கும். உன் அறிவு பிடிக்கும். நாம் சமூக பிரச்சனைகளை விவாதிப்பது பிடிக்கும். சப்தமின்றி நீ தரும் முத்தங்கள் பிடிக்கும். அன்பான உன் அரவணைப்பு பிடிக்கும். நான் தவறிழைத்துவிட்டால், உன் செல்ல திட்டுகள் பிடிக்கும். என்னை கண்டிப்பது பிடிக்கும். சில நேரங்களில் நீ கோபமாய் கத்தினாலும், அதுவும் எனக்கு பிடிக்கும். 

இப்படி சொல்லிக்கொண்டே போனால், எழுத்துக்கள் வற்றிவிடும் கண்ணே. உன்னை மொத்தமாய் எனக்கு பிடிக்குமடி.

இனிமேலும் என்னால் சில விஷயங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது.  கொஞ்சம் பொறுத்திரு என் கண்ணே. உன் கணவனாக நான் உன் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கிறேன், என் ஆருயிர் மனைவியே !

* தினேஷ்மாயா *

அவள் மூச்சுக்காற்று

Sunday, September 10, 2017


பலர் மத்தியில் அவள் இருக்கையில்

அவள் மூச்சுக்காற்று வெறும் சப்தமே..

சற்றுத்தொலைவில் அவள் இருக்கையில்

அவள் மூச்சுக்காற்று மெல்லிசை..

என்னருகில் அவள் இருக்கையில்

அவள் மூச்சுக்காற்று இன்னிசை..

என்னுடன் அவள் இருக்கையில்

அவள் மூச்சுக்காற்று ஓங்காரம் !!

* தினேஷ்மாயா *

இன்னொரு தாய்


தாயை பிரிந்து

என்னுடன் வருகிறாய் என நீ

வருத்தம் கொள்கிறாய்..

நீ இன்னொரு தாயிடம்தான் வருகிறாய் என்பதை மறந்துவிட்டு !

* தினேஷ்மாயா *

தேதி


மனதளவில் நானுனக்கு - என்றோ

மாங்கல்யம் அணிவித்துவிட்டேன் !!

ஊறரிய மாலைசூட்டி மத்தளம்கொட்டி

நம் திருமணம் நடக்க

இப்போதுதான் தேதி  குறிக்கப்பட்டிருக்கிறது !!

இவர்களுக்கு வேகம் போதவில்லையா ?

இல்லை - உன்னையடைய - எனக்கு

பொறுமை இல்லையா கண்ணே ?!

* தினேஷ்மாயா *

அவளும் நானும்

Saturday, September 09, 2017


அவளும் நானும்

நானும் அவளும் !!

* தினேஷ்மாயா *

நம் குழந்தை


திருமணத்திற்கு முன்பு நான் கொஞ்சினேன்

திருமணத்திற்கு பின்பு நீ கொஞ்சினாய்

நீங்கள் கொஞ்சியது போதும் என்று

நம் கொஞ்சல்களுக்கு ஓய்வுகொடுத்து

நம்மை கொஞ்சப்போவது யாரடி ??

* தினேஷ்மாயா *

அந்த தருணம் !!



நான் நானாகவும் , நீ நீயாகவும்

இருந்துவந்தோம்..

நம்மை கணவன் மனைவியாக மாற்றும்

அந்த மூன்று முடிச்சுகளை

நான் போடும் அந்த தருணம் -

இருவரையும் நாணம் தழுவ,

இருவரையும் காதல் தழுவ,

இனிவரும் தழுவல்களுக்கு அடிபோடும் அந்த தருணம் !!

* தினேஷ்மாயா *

நம் குழந்தை

Friday, September 08, 2017

நீயுமொரு குழந்தை..

நானுமொரு குழந்தை..

நினைத்துப் பார்க்கிறேன்

நம் குழந்தை எப்படி இருக்குமென்று !

* தினேஷ்மாயா *

உன்னால் - உனக்காக




நான் மனம்விட்டு சிரிப்பதானாலும்

நான் மனம்விட்டு அழுவதானாலும்

அது -

உன்னால்தான் இருக்கும் !

உனக்காகத்தான் இருக்கும் !

* தினேஷ்மாயா *

என்னுயிர் நீதானே




Sometimes you're my child

Sometimes you're ma best friend

Sometimes you're ma lover

Sometimes you're ma wife

Sometimes you're ma mother

Sometimes you're ma Sakthi

Forever you're ma SOUL 💘

* தினேஷ்மாயா *