மேலும் இரு புதிய உறவுகள்

Friday, March 31, 2017



மேலும் இன்று இரண்டு புதிய மீண்களை வாங்கிவந்தேன்.

இப்போது மொத்தம் நான்கு மீன்கள் புது உறவாக என்னுடன் சேர்ந்துள்ளது.

அடுத்த வாரம் மேலும் வேறுவகை மீன்கள் நான்கு வாங்கலாம் என்றிருக்கிறேன்.

தினமும் எழுந்து இந்த மீன்களுடன் பேசி, அவைகளுக்கு உணவு அளித்து, அவைகள் சண்டைப்போடுவதை செல்லமாக இரசித்துவிட்டுதான் என் நாள் துவங்குகிறது.

ம். சொல்ல மறந்துட்டேன். ஒரு மஞ்சள் நிற மீனுக்கு "மலர்" என்று பெயர் சூட்டியுள்ளேன் !

மத்த மூன்று மீன்களுக்கு இனிமேல்தான் பெயர் சூட்டனும்.

* தினேஷ்மாயா *

அருள்புரிவாய் ஈசா !




என் வாழ்நாளின் ஒரே ஆசை, பேராசை எல்லாம் ஒன்றுதான்..

பலமுறை திருவண்ணாமலை கிரிவலம் சென்று வந்திருக்கிறேன். நினைத்தபோது கிளம்பி ஈசனை தரிசித்து, இடைக்காடரின் ஆசிப்பெற்று, கிரிவலம் வந்திருக்கிறேன். ஆனால், ஒவ்வொரு மாதமும் கிரிவலம் செல்லும் பழக்கத்தை கடந்த 10 மாதங்களாக கடைப்பிடித்து வருகிறேன். எவ்வளவு வேலை இருந்தாலும், நான் எங்கிருந்தாலும், மாதம் ஒருமுறை திருவண்ணாமலை கிரிவலம் வந்து விடுவேன். சில நேரங்களில் ஈசன், ஒரே மாதத்தில் என்னை இரண்டுமுறை எல்லாம் கிரிவலம் வரும்படி வரம் அருள் செய்துள்ளார். என் வாழ்நாள் ஆசை ஒன்றுதான். நான் இவ்வுலகைவிட்டு ஈசனை அடையும் அந்த நொடிவரை, ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலையை கிரிவலம் வரவேண்டும் என்பது மட்டுமே. அதற்கு ஏற்ப எனக்கான வேலையையும், உடல் நலத்தையும், செல்வத்தையும், அன்பும் பண்பும் கொண்ட மனையாளையும் ஈசன் தருவார் என்றும் எனக்கு தெரியும். அவனருளாலே அவன்தாழ் வணங்கி அவனை நினைத்தே உருகி, அவன் என்னை ஆட்கொண்டு, அவன் எம்மை அவனடி சேர்க்கும்வரையில், மலையே உருவான என் ஈசனை வலம்வந்துக்கொண்டே இருக்க வேண்டும்.


அருள்புரிவாய் ஈசா !

* தினேஷ்மாயா *

உணவில் எளிமை:


உணவில் எளிமை:
   வாழ்வில் இயன்றவரை எளிமையை கடைப்பிடித்து வருகிறேன். இப்போது உணவிலும் எளிமையை கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளேன். முதல்படியாக அசைவ உணவுகளை துறந்துவிட்டேன். முன்னர் மூன்று வேளை உணவு உண்டேன். இப்பொது அதை இரண்டு வேளை என குறைத்துக்கொண்டேன். மீதமுள்ள ஒருவேளை உணவை, சமைக்காத உணவுகளாக எடுத்துக்கொள்கிறேன். 

பெரும்பாலும் இவைதான் என் மதிய உணவு. இவைகளில் சிலவற்றை உண்டு என் மதிய உணவை முடித்துக்கொள்கிறேன்.
1. கேரட்
2. பீட்ரூட்
3. வெள்ளரி
4. வாழைப்பழம்
5. பச்சை வேர்க்கடலை
6. கொத்தமல்லி இலைகள்
7. கருவேப்பிலை இலைகள்
8. ஏதாவது பழம் (கிடைத்தால் மட்டும்)
9. கேழ்வரகு/கம்பங்கூழ்
10. ஊரவைத்த சுண்டல் – பச்சையாக
11. சர்க்கரை/மரவள்ளி கிழங்கு - வேகவைத்தது
12. Dry Fruits

இவற்றில் எது கைவசம் இருக்கிறதோ அதை மதிய உணவாக உட்கொள்வேன். எதுவும் இல்லையா ? இருக்கவே இருக்கிறது தண்ணீர். 

இப்போது இரண்டுவேளை உணவுமுறையை பின்பற்றி வருகிறேன், இன்னும் இதை ஒருவேளை உணவாக மாற்றிக்கொண்டு மீதமுள்ள இரண்டுவேளையும் சமைக்காத பச்சை உணவுகளாக உண்டுவர முயல்கிறேன். 
ஏன் இந்த திடீர் மாற்றம் என்றால், வெகுசில காலமாக என் சிந்தையில் இருக்கும் விஷயம் என்னவென்றால், ஒரு மனிதனின் ஆரோக்கியத்தை கட்டுப்படுத்திவிட்டால் அவனுடைய அனைத்தையும் கட்டுப்படுத்திவிடலாம் என்னும் மிகப்பெரிய திட்டத்தை முதலாளித்துவ பெரு நிறுவனங்கள் கையிலெடுத்து மனிதர்களை நோயாளிகள் ஆக்கி வருகின்றன. அந்த வலையில் ஒருபோதும் சிக்காமல் இருக்கவே இந்த திட்டம். எனக்கும் தெரியும் நான் உண்ணும் பச்சை காய்கனிகளிலும் பூச்சுக்கொல்லி இருக்கலாம். ஆனால், இயன்றவரை இயற்கையான உணவுகளை தேடி செல்கிறேன். 

பல ஆண்டுகளுக்கு முன்னரே பெப்சி, கோக் போன்ற அந்நிய குளிர்பானங்களை தவிர்த்துவிட்டேன். எப்போதாவது நம் தமிழக தயாரிப்பான போவண்டோ பருகி வந்தேன். இப்போது அதையும் நிறுத்திவிட்டேன். இளநீர், பதநீர், நன்னாரி, மோர், எலுமிச்சை சாறு, பழச்சாறு போன்ற இயற்கை பானங்களுக்கு மாறிவிட்டேன். பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யும் எதையும் உண்ணக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். தேநீர், காபி, பிஸ்கட் மற்றும் இதர நொறுக்கு தின்பண்டங்களை தவிர்த்து விட்டேன். தேநீர், காபி பருகுவதை நிறுத்து 17 ஆண்டுகளாகிவிட்டது. 2000-ஆம் ஆண்டு பிறக்கும்போது எதாவது ஒரு பழக்கத்தை விடலாம் என்று முடிவு செய்து தேநீர், காபி பருகுவதை நிறுத்தினேன். தெரிந்தோ தெரியாமலோ நான் செய்த நல்ல காரியம் இது. இன்றுவரை கடைப்பிடித்து வருகிறேன். 

Contains Permitted Preservatives, Contains Added Flavors, Contains Permitted Coloring Agents – இந்த வார்த்தைகள் இருக்கும் எந்த பொருட்களையும் வாங்குவதை தவிர்த்திடுவேன். இவை நம் உடலுக்கு நிச்சயம் தீங்கானதே. இயற்கையன்றி செயற்கையாக உருவாக்கப்படும் உணவு அனைத்தும் நம் உடலுக்கு ஏற்றது அல்ல. 

இயற்கைதான் என்னை படைத்தது. இயன்றவரை இயற்கையின் கோட்பாட்டிலே என் வாழ்க்கைமுறையை கொண்டு செல்ல விரும்புகிறேன். சிலருக்கு என் செய்கைகள் வேடிக்கையாக தெரியலாம், ஆனால், பத்து ஆண்டுகள் கழித்து நீங்கள் மருந்து மாத்திரைகள் உண்ணும்போது நான் அதனிடம் இருந்து தள்ளி ஒரு ஆரோக்கியமான வாழ்வை வாழ்ந்துக்கொண்டிருப்பேன். முடிந்தால் நீங்களும் இந்த வழியில் பயணித்துதான் பாருங்களேன்.

* தினேஷ்மாயா *

கோவைவாசி !





கோவை !

அட.. பேர் சொல்லும்போதே சிலிர்க்கும் ஊர்.. 

பத்து வருடங்களாக சென்னைவாசியாக இருந்தேன். ஏனோ தெரியவில்லை கொஞ்சம் கொஞ்சமாக சென்னை எனக்கு பிடிக்காமல் போனது. சென்னையை விட்டு வெளியேவர ஒரு நல்ல வாய்ப்பை தேடிக்கொண்டிருக்கையில், என் புது வேலை எனக்கு உதவியாய் இருந்தது. நான் சிறிதும் எதிர்பார்க்காவண்ணம் எனக்கு கோவையில் பணி கிடைத்தது. எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஆனால், என்னைச்சுற்றி சென்னையில் சேர்ந்த நண்பர்கள் பட்டாளம் அனைவருக்கும் வருத்தம். நான் சென்னையைவிட்டு கிளம்புகிறேனே என்று. மாற்றம் ஒன்றே மாறாதது. அதை உணர்ந்தவன் நான் என்பதால், இதுபோன்ற இடமாற்றங்கள் என்னை ஒருபோதும் பாதிக்காது. ஆனந்தமாய் கோவைக்கு வந்து சேர்ந்தேன். வந்து ஒரு வாரம் மட்டுமே கோவையில் இருந்தேன். பின்னர் மூன்று மாதங்கள் சென்னைக்கு நிர்வாக பயிற்சிக்கு அனுப்பிவிட்டார்கள். அட என்னடா மீண்டும் சென்னையா என்று நினைத்து ஒருவழியாக சென்னையில் மூன்று மாதங்களை ஓட்டிவிட்டு கோவை வந்து சேர்ந்தேன். இங்கே வந்து சேர்ந்த கையோடு, என்னை ஊட்டிக்கு ஒருமாதம் பணி நிமித்தமாக அனுப்பிவிட்டார்கள். அட, நம்மள கோவையில் இருக்கவே விடமாட்டாங்க போல என நினைத்துக்கொண்டு ஊட்டி கிளம்பினேன். எப்படியோ ஒரு மாசம் அங்கே வேலையை ஓட்டியாச்சு. மார்ச் மாதம் முழுவதும் அங்கே இருந்தேன். குளிர் பரவாயில்லை. ஒருவழியா சமாளிச்சுட்டேன். ஊட்டியில் இருக்கும் பெரிய ஓட்டல் முதல் கையேந்திபவன் வரை எல்லா கடைகளிலும் சாப்பிட்டு பார்த்தேன். ஒரு சில கடைகளில் மட்டுமே உணவு எனக்கு பிடித்த மாதிரி இருந்துச்சு. ஊட்டி – ஒயிட் சாக்லேட் ரொம்ப பிடிச்சு போச்சு எனக்கு. இப்போகூட எப்போலாம் எனக்கு ஒயிட் சாக்லேட் சாப்பிடனும்னு தோனுதோ அப்போ வண்டிய எடுப்பேன். குன்னூர் வரைக்கும் போவேன், இல்லனா ஊட்டியே போய் ஒயிட் சாக்லேட் வாங்கிவந்துருவேன். அப்புறம் ஊட்டியில் கிடைக்கும் கேரட் பிடிச்சது. அங்க கிடைக்கும் சாக்லேட் டீ பிடிச்சது. சுத்தி பார்க்க நிறைய இடங்கள் இருக்கு. இருந்தாலும் என்னை கவர்ந்தது முதுமலைதான். அதுவும் மசினங்குடி வழியா வண்டியில இறங்குறது செம த்ரிலிங்கா இருக்கும். 

சரி.. நம்ம கோவைக்கு வருவோம். நானும் ஒருவழியா ஊட்டியில் என் அலுவல் வேலையெல்லாம் முடிச்சு கீழே இறங்கிட்டேன். நாம கோவைக்கு புதுசு. ஊரப்பத்தி எதுவும் தெரியாது. OLX-ல் வீடு தேடினேன். முதலில் வந்தது வடவள்ளியில இருக்க வீடு. போன் செஞ்சேன். ஓனர் நல்லா பேசினாரு. வண்டி இருந்தாபோதும் கோவையில் எங்கவேணாலும் சீக்கிரம் போயிரலாம்னு சொன்னார். சரினு நானும் அந்த வீட்டுக்கு ஓ.கே. சொல்லி அதில் புதுமனை புகுவிழா நடத்தியாச்சு. இன்னையோடு நான் ரெகுலர் கோவைவாசி ஆகி ஒரு வருஷம் ஆகிருச்சு. கோவையை விட்டு வெளியே போக தோனல. ஊரும் சரி மக்களும் சரி ரொம்ப பிடிச்சிருக்கு எனக்கு. நிறைய விஷயம் பிடிச்சுருக்கு இங்க. அதுவும் கோவில்கள்தான். மருதமலைக்கு நினைக்கும்போதெல்லாம் கிளம்பிருவேன். கோவையில் அதிகம்போன கோவில் மருதமலைதா. பேரூர் ஒருமுறை போயிருக்கேன். நவாவூர் பஞ்சமுக ஆஞ்சநேயர், ஐ.ஓ.பி. காலனி சாய்பாபா கோவில் இங்க அடிக்கடி போயிருக்கேன். அப்புறம் புளியகுளம் ஆனந்தாஸ், கோர்ட் எதிரில் இருக்கும் அன்னபூர்னா, People’s Choice, S.P.-Office எதிரில் இருக்கும் Grand Café, வடவள்ளி ஆனந்தாஸ், அப்புறம் எங்க ஏரியால இருக்க கையேந்திபவன். இங்கதான் நிறையமுறை சாப்பிட்டிருக்கேன். ஆனந்தாஸ்-ல அப்புறம் Grand Café இங்க மதியம் சாப்பாடு ரொம்ப நல்லா இருக்கும். கோவை வந்துதான் நான் தயிர், மோர் சாப்பிடவே பழகினேன். அசைவ உணவை அடியோடு விட்டாச்சு. முட்டைக்கும் முழுக்கு போட்டாச்சு. சைவ உணவு இவ்வளவு ருசியா இருக்குமா என என்னை வியக்க வைத்தது கோவை மாநகரம். அப்புறம் கோவையின் தட்பவெப்பம் எனக்கு ரொம்பபே செட் ஆகிருச்சு. சென்னையில இருந்த எனக்கு இது 24x7 ஏ.சி.யில இருக்குற மாதிரியே இருக்கு. மதியம் கொஞ்சம் வெயில் வெளுத்துவாங்கினாலும், மாலை, இரவு நேரங்களில் வீசும் குளிர்காற்றும், பனிக்காற்றும் அப்படியே என்னை கடத்தி செல்லும்.. 
கொங்கு தமிழ் ! மலையாளம் மொழியை அதிகம் ரசிச்சேன். அதன் உச்சரிப்பு அதுவும் பெண்கள் மலையாளம் பேசும்போது அவ்வளவு அழகாகவும் இனிமையாகவும் இருக்கும் கேட்க. ஆனால், நம்ம கோவை பாஷை ! கொங்கு தமிழை யார் பேசினாலும் அவ்ளோ இனிமையா இருக்குங்க. அட நம்பமாட்டீங்களா. என்னங்க நீங்க. நேரா கோவைக்கு வாங்க. வந்து கொஞ்சம் பேசி பாருங்க. அப்புறம் நீங்களே புரிஞ்சுக்குவீங்கங்க. 

LIFT .. சென்னையில் பெரும்பாலும் வண்டியில யாரும் லிப்ட் கேட்டு பாத்ததில்லை. எப்பவாச்சும் யாராச்சும் லிப்ட் கேட்பாங்க. ஆனா, இங்க நிறைய பேர் லிப்ட் கேக்குறாங்க. நிறைய பேர் குடுக்குறாங்க. அதை பார்த்து நானும், நிறைய பேருக்கு லிப்ட் குடுத்திட்டுத்தான் இருக்கேன். லிப்ட் குடுக்குறது ரெண்டு வகையில நல்லது. ஒருவருக்கு உதவினமாதிரியும் ஆச்சு, சுற்றுசூழலுக்கும் உதவின மாதிரியும் ஆச்சு. எப்படினு கேக்குறீங்களா ? கொஞ்சம் யோசிச்சு பாருங்க, நமக்கு நிச்சயம் யாராச்சும் லிப்ட் குடுப்பாங்க, அதுல ஏறி போயிக்கலாம்னு நினைக்குற பேர் இங்க நிறைய இருக்காங்க. அதுவே யார்டா நமக்கு இந்த ஊர்ல லிப்ட் குடுப்பா, ஒருத்தனும் லிப்ட் கேட்டா வண்டிய நிறுத்த மாட்டேங்குறான், பேசாம எப்படியாச்சும் நாம ஒரு வண்டி வாங்கிறனும்னு ஒவ்வொவரும் நினைச்சா இயற்கை என்னாகும் சொல்லுங்க. அதனாலேயே, யார் லிப்ட் கேட்டாலும், என்னால் முடிஞ்சவரைக்கும் லிப்ட் குடுக்குறேன். இந்த நல்ல பழக்கத்தை கோவை மக்களிடம் இருந்துதான் கத்துகிட்டேன்.


ஒருமுறை கொடிசியா போயிருக்கேன். புத்தக கண்காட்சிக்கு. ஒருமுறை வ.உ.சி.பார்க் – ஜல்லிக்கட்டு போராட்டத்துக்காக. பி.எஸ்.ஜி ஆர்ட்ஸ் காலேஜ், பாரதியார் யூனிவ், கோவை குற்றாலம், வால்பாறை, ஆழியார், பொள்ளாச்சி, ஓதிமலை, அடிக்கடி மருதமலை , இப்படி கொஞ்ச இடங்கள்தான் கோவையில் சுத்தியிருக்கேன். Brookefields மட்டும் ஒருமுறை போனேன். அதுவும் பத்து நிமிஷத்துல வந்துட்டேன். இன்னும் மத்த மால்ஸ் போகனும். கிருத்திகா அப்புறம் கற்பகம் தியேட்டர்ல மொத்தம் நாழு படம் பாத்தேன். பாகுபலி-2 வந்தாதான் ஒரு பெரிய தியேட்டர்ல போயிட்டு பார்க்கலாம்னு இருக்கேன். 

இன்னும் கோவையில் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய நிறைய இருக்கு. எல்லாம் பொறுமையா பார்ப்போம். மீதி கதையை அப்புறம் பேசறேன்.

இப்படிக்கு ஒருவருடம் முடித்துவிட்ட கோவைவாசி

* தினேஷ்மாயா *

நடை தளர்ந்து



நடை தளர்ந்து

நரை படந்து

அறுபதுகளில் நாமிருவரும்..

குழந்தைகள், பேரக்குழந்தைகள் பெற்றுவிட்ட போதிலும்,

உனக்கென நான்

எனக்கென நீ..

* தினேஷ்மாயா *

தெய்வீகம்



தெய்வீகம் எங்கும் நிறைந்திருக்கிறது.

அதை உணரும் பக்குவம் சிலருக்கு மட்டுமே இருக்கிறது..

* தினேஷ்மாயா *

புதிய உறவுகள்

Thursday, March 30, 2017



என் வீட்டிற்கு வந்திருக்கும் புதிய உறவுகள்..

நேற்று இந்த இரண்டு அழகிய மீன்களை வாங்கி வந்தேன். 

இன்னமும் இதற்கு பெயர் வைக்கவில்லை. நல்ல பெயர் எதாச்சும் சொல்லுங்களேன்.

* தினேஷ்மாயா *

சொற்பொழிவு

Wednesday, March 29, 2017




பனிப்பொழிவு பார்த்திருக்கிறேன்.

சொற்பொழிவு கேள்விப்பட்டிருக்கிறேன்.

நீ பேசும்போதுதான் அதை நேரில் காண்கிறேன்.

தேன் சொற்கள் பொழிவை !

* தினேஷ்மாயா *

யார் எழுதியதோ?



யார் எழுதியதோ ?

எனக்கென ஓர் கவிதையினை !

"வேறு யார்.. உன் பெற்றோர்தான்"

* தினேஷ்மாயா *

உன் கருணை வெள்ளத்தில்

Sunday, March 26, 2017




உன் கருணை வெள்ளத்தில் மூழ்கடிக்கிறாய் என்னை !

இறைவா !

* தினேஷ்மாயா *

மிகப்பெரிய சொத்து


உன் தந்தை சொன்னார்,

அத்தனை சொத்தும் உனக்குதான் என்று..

அவர்களின் மிகப்பெரிய சொத்தாகிய நீயே எனதானபிறகு,

உன்னைவிட பெரிய சொத்து என்ன இருந்துவிடப்போகிறதடி எனக்கு ?

* தினேஷ்மாயா *

உமையாள் !


நான் சிவனாக இருக்கையில் உன்னை துணையாக பார்க்கிறேன்

நான் முருகனாக இருக்கையில் உன்னை அன்னையாக பார்க்கிறேன்

நான் விஷ்ணுவாக இருக்கையில் உன்னை தங்கையாக பார்க்கிறேன்

நான் தட்சனாக இருக்கையில் உன்னை மகளாக பார்க்கிறேன்

நான் மனிதனாக இருக்கையில் உன்னை எல்லாமுமாக பார்க்கிறேன் !!

* தினேஷ்மாயா *

விழியின் வழியே நீயா வந்து போனது ?






மலரில் விழியா ?

விழியில் மலரா ?

* தினேஷ்மாயா *

அன்பு நிறைந்த உள்ளம்




அன்பு நிறைந்த உள்ளம்தான் சண்டை போடும். விலக அல்ல. விலகிட கூடாது என்பதற்காக..
- படித்ததில் பிடித்தது

* தினேஷ்மாயா *

22.03.2017

Saturday, March 25, 2017


பழனி



திருப்பரங்குன்றம்




பழமுதிர்சோலை


22.03.2017
     இன்றுடன் 28 வயதை அடைந்தாயிற்று. ம்.. அட ஆமாங்க. 4 கழுதை வயசாச்சு. இதுவரை என் வாழ்க்கை எனக்கு தந்த அனுபவங்களுக்கு மிக்க நன்றி. இனிமேல் நான் வாழப்போகும் வாழ்க்கைக்கான பெரிய அஸ்திவாரம் இந்த 28 ஆண்டுகள். என் மனிதத்தன்மையை இழக்காமல் இருக்க எனக்கு இந்த வாழ்க்கை கற்றுக்கொடுத்தது. இந்த வருட பிறந்தநாளை வெறுமனே வீணாக்காமல், என் உயிர் தோழனான முருகப்பெருமானை தரிசிக்க ஆயத்தமானேன். 

     22.03.2017 அன்று நள்ளிரவு 1 மணிக்கே கோவையில் இருந்து கிளம்பி பழனி சென்று முருகனை 6 மணிக்கு விஸ்வரூப தரிசனத்தில் கண்டு , ஆண்டவனை ஆண்டிக்கோலத்தில் தரிசித்த ஆனந்த களிப்போடு, அங்கிருந்து கிளம்பி மதுரை சென்று பின் திருப்பரங்குன்றம் முருகனை தரிசித்துவிட்டு, அங்கிருந்து அழகர்மலை உச்சியில் இருக்கும் பழமுதிர்சோலை முருகனையும் தரிசிக்கும் அருட்பேறு பெற்றேன். அனைத்து இடங்களுக்கும் பேருந்திலேயே பயணப்பட வேண்டியதால் நேரம் அதிகம் விரயமாகிவிட்டது. இல்லாவிடில், திருச்செந்தூர் முருகனையும் சென்று தரிசித்து வந்திருப்பேன். இருந்தாலும், ஒரே நாளிம் முருகப்பெருமானின் மூன்று படைவீடுகளை தரிசிக்கும் பாக்கியம் எனக்கு அவன் கொடுத்தமைக்கு அவனுக்கு கோடான கோடி நன்றி..

      பின்னர் அங்கிருந்து கிளம்பி திண்டுக்கல் வந்து, பஞ்சம்பட்டியில் இருக்கும் குழந்தைகள் இல்லத்திற்கு சென்று அங்கிருக்கும் என் தம்பி, தங்கையரை பார்த்து அவர்களிடம் சிலமணி நேரங்கள் உரையாடிவிட்டு வந்தேன். அவர்களுடன் இருக்கும் ஒவ்வொரு நேரமும் என் வாழ்வின்  மறக்க முடியாத வசந்த காலங்கள். தூய அன்பின் வெளிப்பாடு அது. எதையும் எதிர்பாராமல் அன்பை மட்டுமே பகிர்ந்துக்கொள்ளும் இல்லம் அது. அங்கே சென்று வரும் ஒவ்வொருமுறையும் நான் வார்த்தைகளற்ற ஊமையாகிவிடுகிறேன். அவர்கள் அன்பு என்னை ஊமையாக்கிவிடுகிறது. இந்த பிறந்தநாளை அருமையான நினைவுகளால் நிரப்பிவிட்டேன். அடுத்த பிறந்தநாளில் இன்னும் ஒருபடி மேலே உயர்ந்திருப்பேன், அதற்கான முயற்சிகளை தொடங்கிவிட்டேன். எல்லாம் அவன் கையில் !!

* தினேஷ்மாயா *

இது அன்பின் வேதம்



இது அன்பின் வேதம்

அதை நாளும் ஓதும்

காற்றே !

#வைகை_நதி_ஓரம்

* தினேஷ்மாயா *

கூடல்_பொழுது


போர்வை ஒன்றே போதுமே !

#கூடல்_பொழுது

* தினேஷ்மாயா *

ஓர் நிலா !


நட்சத்திரங்கள் புடைசூழ

நிற்கிறது ஓர் நிலா !

* தினேஷ்மாயா *

மெழுகுச்சிலையோ நீ?


மெழுகுச்சிலையோ நீ?

கூடலின்போது, உஷ்ணத்தால்

உருகுகிறாயே !

* தினேஷ்மாயா *

உன் சேவகனே நான் !



என் கானகத்தில்

ராஜாவும் நீயே ராணியும் நீயே

உன் சேவகனே நான் !

* தினேஷ்மாயா *

நீ நிலவுதான்



நீ நிலவுதான்

ஒப்புக்கொள்கிறேன்

அதற்காக, எப்போதுமே என்னிடம்

ஒருமுகத்தை மட்டுமே காட்டினால் எப்படி ?

உன் திருமுகத்தை காட்ட மாட்டாயா ?

* தினேஷ்மாயா *

அல்லிராணி


மரக்கிளையில் தொட்டில் கட்ட

மாமனவன் மெட்டு கட்ட

அரண்மனைய விட்டுவந்த அல்லிராணி கண்ணுறங்கு..

#காதலன்

* தினேஷ்மாயா *

ஆனந்த பூச்சொரியும்..



வேரை அறுத்தாலும் மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை..

அறுத்த நதியின்மேல் மரங்கள் ஆனந்த பூச்சொரியும்..

#மூங்கில்_காடுகளே

* தினேஷ்மாயா *

சந்தேகம்



   தக்ஷிணாமூர்த்தி அமைதியை உணர்த்திய கடவுள். அமைதியைதான் உண்மை என மக்களுக்கு உணர்த்துகிறார்.அப்படியிருக்க அவருக்கு ஸ்தோத்திரம் எதற்கு?

* தினேஷ்மாயா *

வரப்போகும்_என்னவளுக்கு



சாத்தி வைத்த வீட்டில் தீபம் ஏற்றிவைக்க நீ வா வா..

மீதி வைத்த கனவையெல்லாம் பேசி தீர்க்கலாம்..

#காற்றை_கொஞ்சம்

#வரப்போகும்_என்னவளுக்கு

* தினேஷ்மாயா *

நானே_வருகிறேன்..



சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே

சின்னஞ்சிறு சின்னஞ்சிறு அதிசயமே

சின்னஞ்சிறு விரல்கொடு

சின்னஞ்சிறு சின்னஞ்சிறு இடம்கொடு

சின்னஞ்சிறு ஆசைக்கு பொய்சொல்ல தெரியாதே

#நானே_வருகிறேன்

* தினேஷ்மாயா *

மெய்பொய்யின் மர்மம் என்ன?



மெய்யெல்லாம் மெய்யாக

பொய்யெல்லாம் பொய்யாக

மெய்யாக மெய்பொய்யின் மர்மம் என்ன?

#அவன_பத்தி

* தினேஷ்மாயா *

உயிரே ! வா !



இனிமேலும் வரம்கேட்க தேவையில்லை

இதுபோல வேறெங்கும் சொர்க்கமில்லை

உயிரே ! வா !

#நீ_பார்த்த_பார்வைக்கொரு

* தினேஷ்மாயா *

சாகும்வரை..



சாகும் வரை உன் பிணத்தை நீதான் சுமக்க வேண்டும் ..
- உருது கவிஞர் இக்பால்

* தினேஷ்மாயா *

மனதில் இருக்கும்..



மனதில் இருக்கும் சில விஷயங்கள் கடைசிவரை

மனதிலேயே இருந்துவிடுகிறது....

பி.கு.: நம் அன்பிற்குரியவர் ஒருவரிடம் பகிர்ந்துக்கொள்ளும்வரை

* தினேஷ்மாயா *

வெறுமை



வாழ்க்கை வெறுமையை மட்டுமே மென்று துப்புகிறது..

* தினேஷ்மாயா *

இத்தனை நாளாய்


என்மேல் விழுந்த மழைத்துளியே !

இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ?

#என்_மேல்_விழுந்த

* தினேஷ்மாயா *

மகிழ்ச்சி

Friday, March 24, 2017



மகிழ்ச்சியாய் இருப்போம்..

* தினேஷ்மாயா *

காதல் கதை


* தினேஷ்மாயா *

நீ வருவாய் என

Monday, March 20, 2017

   
       என் அன்பு ஒரு தொடர்ச்சியில்லா பாதையில் பாதியில் நிற்கிறது. என்னவள் அதை கைப்பிடித்து என்னிடம் அதை கொண்டு வந்து சேர்த்து என் அன்பு முழுவதும் தனதாக்கிக்கொள்வாள், என காத்திருக்கிறேன்..

* தினேஷ்மாயா *

மயில்


இது மயில்கோலம் அல்ல..

என்னவள் கோலம்போட முயல்கையில்

பூமி அவளை புகைப்படம் எடுத்துக்கொண்டது !

* தினேஷ்மாயா *

என்னவளே !

Wednesday, March 15, 2017





என்னவளுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான்.

என் வலைப்பக்கத்தை நீ படித்து முடிக்கையில் உனக்கொன்று புரிந்திருக்கும். என் வாழ்வில் காதலி ஒருத்தி இருந்தாள் என்று. ஆனால், நான் அதை உனக்கு உணர்த்த விரும்பவில்லை. எனக்கு காதலி இருந்தாள் என்பதைவிட, என்னுள் ஓர் ஆழமான அழகான காதல் இருந்தது என்பதைதான் உனக்கு உணர்த்த விரும்புகிறேன். அந்த காதலை அந்த குறுகிய காலத்தில் அவள்மீது வைத்திருந்தேன். அவள் பிரிந்த பின்னர் சில காலம் காதலே வேண்டாம் என்றிருந்தேன். பின்னர், காதல் இல்லாமல் எவராலும் இருக்க முடியாது என்று உணர்ந்தபின்பு, வரப்போகும் உனக்காக என் காதலை வளர்த்து வருகிறேன். உண்மையான அன்பின் வெளிப்பாடு என்பது ஒளிவு மறைவு இல்லாத உறவே. என்னை உனக்கு பிடிக்கும் முன், என்னை புரிந்துக்கொள். என்னை புரிந்துக்கொள்ளும் அனைவருக்கும் என்னை பிடிக்கும். நீ என்னை புரிந்துக்கொள்ளவே என் வலைப்பக்கத்தை செதுக்கிக்கொண்டிருக்கிறேன். உன்னிடம் மறைக்க எதுவும் இல்லை எனக்கு. வெறும் மனைவியாக உன்னை நான் நினைப்பேனேயானால் இதை மறைத்திருப்பேன். என்னுயிர் தோழி நீ. உன்னிடம் மறைக்க எதுவுமில்லை என்னிடம். எல்லாம் படித்துவிட்டு, என்னை கொஞ்சமாச்சும் புரிந்துகொள்ள முடிந்தால், பதில் சொல் !

* மாயாவிற்காக காத்திருக்கும் நான் *

* தினேஷ்மாயா * 

எங்கே என்னவள் ?!

Tuesday, March 14, 2017



எங்கே என்னவள் ?

* தினேஷ்மாயா *

A Msg for US..

Thursday, March 09, 2017




ஆன்மீகம் பெண்மீகம்


என்னை என்னுள் தேடினால் ஆன்மீகம்..

என்னை உன்னுள் தேடினால் பெண்மீகம் !

* தினேஷ்மாயா *

தேடல்


எல்லோரும் நினைக்கிறார்கள்

என் மாயாவாகிய உன்னை நான் கண்டதும்

என் மாயாவின் தேடல் முடிந்துவிடும் என்று..

அட, இதற்குமேல்தான் என் தேடலே !

ஆம்.. என்னை உன்னுள் தேடவேண்டும்

உன்னை என்னில் தேடவேண்டுமே ..

* தினேஷ்மாயா *

காதல் காதல் காதல்

வா என் வாழ்க்கைத்துணையே !

காதலில் வாழ்வோம்

காதலை சுவாசிப்போம்

காதலில் கலப்போம்

காதலை பருகுவோம்

காதலில் மூழ்கிப்போவோம்

காதலை உண்போம்

காதலில் உறங்குவோம்

காதலை போர்வையாக்குவோம்

காதலில் எரிவோம்

காதலை அணைப்போம்

காதலில் மடிந்தாலும்

நம் காதல் மடியாமல் பார்த்துக்கொள்வோம்..

* தினேஷ்மாயா *

நீ உடுத்தும் உடை


பொதுவாக நீ உடுத்தும் உடைகளில்,

இரண்டு உடைதான் எனக்கு அதிகம் பிடிக்கும்

ஒன்று - நாணத்தால் மட்டுமே உடுத்திக்கொள்ளும் உடை

இரண்டு - நம் பாரம்பரிய உடையான புடவை..

* தினேஷ்மாயா *