என்ன மாயம்?

Thursday, February 25, 2021



நிலவு இறங்கி வந்து

விளக்கேற்றும் மாயம் என்னவோ ?

* தினேஷ்மாயா *

செய்தீ....

Friday, February 19, 2021

 செய்தித்தாளில் மட்டுமே செய்திகளைப் படித்துத் தெரிந்துக்கொண்டிருந்த வரையில், இந்த சமூகமும் நம் வாழ்க்கையும் ஓரளவுக்கு நன்றாகவே இருந்தது எனலாம்.

முன்பெல்லாம் உண்மையிலேயே எதாவது முக்கிய செய்தி இருந்தால் மட்டுமே, நிகழ்ச்சிகளை நிறுத்திவிட்டு Flash News என்று வாசிப்பார்கள்.

ஆனால், இன்று பல செய்தி சேனல்கள் வந்தபிறகு, ஆத்தூரில் கிணற்றில் மாடு விழுந்தது, தஞ்சையில் சாலையில் எதிர்கட்சி கவுன்சிலர் டீ குடித்தது, காஞ்சியில் இரு சாரார் இடையே நடந்த சிறு சண்டை, அடுத்த வாரம் வரும் புயலுக்கு இன்றிலிருந்தே முழுநேர கவரேஜ் இப்படி எதுவெல்லாமோ Flash News, Breaking News, Hot News என்று ஒளிபரப்பு செய்கிறார்கள்.

24 மணி நேர செய்தி சேனலை வைத்துக்கொண்டு செய்திகளுக்கு அவர்கள் என்ன செய்வார்கள். விளம்பரம்தான் அவர்களுக்கு மிகப்பெரிய வருமானம். அதை ஈர்க்க, இவ்வாறான செய்திகளை மக்களிடையே பரப்ப வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு.

Business Ethics, News Ethics இதெல்லாம் மலையேறிவிட்டது. 

Non Stop News என்று நிகழ்ச்சிப்பெயர் வைத்துவிட்டு 30 நிமிடத்தில் 20 நிமிடம் விளம்பரம் போடுகிறார்கள். 

இவர்கள் விவாத நிகழ்ச்சி நடத்துகிறேன் என்று உப்பு சப்பில்லாத விசயத்தை காரசாரமாக விவாதம் செய்கிறதாக எண்ணிக்கொண்டு தெருவில் இரவில் சண்டையிடும் விலங்கினங்கள் போல கத்துகிறார்கள். 

செய்தியாளரோ, ஒரு நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கே சென்று நேரலையில் தகவல் தருகிறேன் என்று கண்டதை உளறுகிறார். நீங்கள் இந்த காட்சியை பலமுறை கண்டிருப்பீர்கள்.

ஊடகம் என்பது உள்ளதை உள்ளவாறு மக்களுக்கு எடுத்துரைக்கும் காலம் போய், மக்களுக்கு எதை தெரியப்படுத்த வேண்டும் எதை தெரியப்படுத்தக் கூடாது என்று அவர்கள் முடிவு செய்து செய்திகளை ஒளிபரப்பு செய்கிறார்கள்.

ஊடக தர்மம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதை என்னால் உணர முடிகிறது.

"எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு"

* தினேஷ்மாயா *

செயலின் செல்வர்

Monday, February 08, 2021

சொல்லின் செல்வர் பலர் உண்டு.

எவர் ஒருவரின் சொல்லுக்கும் செயலுக்கும் அதிக இடைவெளி இல்லையோ அவரையே உயர்ந்த மனிதர் என நான் ஏற்பேன்.

அவ்வாறே, நானும் உயர்ந்த மனிதனாய் திகழ முயன்றும் வருகிறேன்..

* தினேஷ்மாயா *