புவியீர்ப்புவிசை

Thursday, August 15, 2019


தேவதைகள் ஊஞ்சலாட வேறெதுவும் வேண்டா..

புவியீர்ப்புவிசை போதும்..

* தினேஷ்மாயா *

ஆத்மார்த்த விலங்கு


     சுயநலமில்லா பெருவாழ்வு அனைவருக்கும் சாத்தியமில்லை. பிறர் நலன் கருதி வாழ்வதே இயற்கையின் பண்பு. இயற்கை என்றுமே தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ளாது. இந்த பண்பு இயற்கையிலேயே மனிதனிடத்தில் இருந்ததுதான், ஆனால் இப்போது இந்த பண்பை மனிதனிடத்தில் காண்பது அரிதாகிவிட்டது. ஒவ்வொரு மனிதனும் ஒரு கை ஓசை-யிலேயே கவனம் செலுத்துகிறான். கூடிவாழும் பழக்கமும், பொதுநலன் கருதி வாழ்வதும் குறைந்துவருகிறது. இந்த விஷயத்தில், விலங்குகள் எவ்வளவோ மேல் என்றுதான் தோன்றுகிறது.

மனிதன் ஒரு சமுதாய விலங்கு

விலங்கு ஒரு ஆத்மார்த்த மனிதன் !!

* தினேஷ்மாயா *

அன்பும் பண்பும்


திகட்டாத அன்பு

திட்டாத பண்பு

வேறென்ன வேண்டுமெனக்கு !

* தினேஷ்மாயா *


காயம்


அன்பு..

பல நேரங்களில் காயங்களை தேற்றும்..

சில நேரங்களில் காயங்களை அள்ளித்தரும்..

* தினேஷ்மாயா *

முக்தி

Saturday, August 10, 2019


உன் புன்சிரிப்பே போதுமே..

முக்தி இப்பிறவியிலேயே கிட்டுமே !!

* தினேஷ்மாயா *

செல்(வ)ல மகள்


அவள் செல்லமாய் கோபித்துக்கொள்கையில்

அவளிடம் வேண்டுமென்றே மன்னிப்பு கேட்டு

மன்றாடுவதில் எப்போதும் என் மனம் இலயித்திருக்கும்...

* தினேஷ்மாய

தங்கமயில்


தோகை விரித்தாடும் ஆண்மயில்..

தோகையில்லா பெண்மயில்..

ஆனாலும் நீயொரு தங்கமயில் !!

நீயே பேரழகு !!

* தினேஷ்மாயா *

திரும்ப திரும்ப


என்னை திரும்பி பார்க்கவைத்தவளும் நீதான்

உன்னை திரும்ப திரும்ப பார்க்கவைத்தவளும்

நீ மட்டும்தான் !

* தினேஷ்மாயா *

அடைக்கும் தாழ்


அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ?

- வள்ளுவன்

* தினேஷ்மாயா *

அறுசுவை இதழ்

Friday, August 09, 2019




அறுசுவைகளில் உயர்ந்த சுவையான

இனிப்பு சுவையை -

உன் இதழ்களில் ஒளித்து வைத்திருக்கிறாய்.

ஆனால், அதை ஏன்

எனக்கு தராமல் மறைத்து வைத்திருக்கிறாய் ?

* தினேஷ்மாயா *

நீ கொடுக்காத முத்தம்





மேகம் கீழிறங்கி வந்து

உன்னை - முத்தமிட்டு

என்னையும் உரசிவிட்டு செல்கிறது..

* தினேஷ்மாயா *

தீர காதல் காண கண்டேனே

Saturday, August 03, 2019



தீர காதல் காண கண்டேனே
அதில் தேடல் யாவும் தீர கண்டேனே
காலம் நேரம் மாற கண்டேனே
எதிர்காலம் ஒன்றில் நானும் நின்றேனே

கனவே நனவாய் எழுந்தாயே
மனமே இறகாய் பறந்தாயே

தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ராரா
தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ராரா

சுறு சுறு சுறு அணிலை
எந்தன் வீட்டினில் அனுமதிப்பேன்
சிறு சிறு சிறு உணவாய்
முழு பிரியங்கள் சமைத்து வைப்பேன்

அடுப்பறையினில் பரவும்
புது வெளிச்சத்தை பரிசளிப்பேன்
அருட்பெருஞ்சுடர் ஒளியில்
தனி தனிமையை ரசித்திருப்பேன்

நேற்றின் வானம் பூனை போலே
ஓடி ஒளிகின்றதே
ஈசி சாரில் சாய்ந்து கொண்டு
காலம் சிரிக்கின்றதே

வாழ்க்கை வந்து வீடும் வந்ததே
என்தேக்கம் செங்கல் தோற்றம் கொண்டதே


தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ராரா
தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ராரா

அடிக்கலையை அழைத்து
அதை ரசித்திட அடம் பிடிப்பேன்
சுவர்க்கோழியின் ஒலியை
பெரும் இசையென லயித்திருப்பேன்

தரை விழுகிற ஒளி மேல்
சிறு நிழலென படுத்திருப்பேன்
நரை விழுகிற வரையில்
இந்த அறைகளை ரசித்திருப்பேன்

தூறல் யாவும் தீர்ந்த போதும்
ஈரப்பதம் உள்ளதே
காலம் யாவும் காண காண
காட்சியாகின்றதே

காத்திருப்பில் ஜீவன் உள்ளதே
என் ஜீவன் வந்து வாசல் நின்றதே

தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ராரா
தாரே ரா தாரே ரா
தாரே ரா தாரே ராரா

தீர காதல் காண கண்டேனே
அதில் தேடல் யாவும் தீர கண்டேனே
காலம் நேரம் மாற கண்டேனே
எதிர்காலம் ஒன்றில் நானும் நின்றேனே


படம்: மான்ஸ்டர்
வரிகள் : கார்த்திக் நேத்தா
இசை: ஜஸ்டின் பிரபாகரன்
குரல்: சத்யபிரகாஷ்

நரை


நரை - சிலருக்கு மூப்பின் அடையாளம்

சிலருக்கோ அது மனமுதிர்ச்சி !

* தினேஷ்மாயா *