Need of the Hour

Sunday, December 20, 2020


 Hey All...

I just wanted to post as much number of posts in 2020 as I did in the year 2019. 

Last year I have tried to made 138 posts. 

This year this is my 139th post.

(Wow. Somehow am progressing and not settling for the low).

Will be back by next year with much more interesting posts (which I have already noted down, but no time to pen it down).

Happy New Year All..

HOPE.. is the fuel for LIFE.. 

Be Positive. Better days are coming.......

Stay Happy...

Love You All..

See ya soonnnnn .... 

* DhineshMaya* 

My Thoughts about book reading

 



* DhineshMaya* 

உயிர் என்ற ஒன்று

 உடலுக்குள்ளே ஒளிந்திருக்கும் உயிரின் நிறம் என்ன?

அதன் வடிவம் என்ன?

அது அழகாக இருக்குமா ? 

அது அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்குமா? 

இல்லை வேறுபடுமா? 

பிரிந்த உயிர் எங்கே போகிறது? 

உயிர் என்ற ஒன்று உண்மையாகவே இருக்கிறதா? 

 எங்கே அது இருக்கிறது? 

அதன் அளவு என்ன?

*தினேஷ்மாயா *

கடவுள்

 தேசமெலாம் அலைந்து திரிந்து தேடி கண்டுக் கொண்டேன். தேகத்தினுள்தான் அவன் குடிக்கொண்டு இருக்கிறான் என்பதை. 

என் உள்ளொளி பேரொளியாய் இருக்க, புற இருள் என்செய்யும்??

கட உள்ளத்தை. அங்கே உள்ளான் உன் 

கடவுள்

*தினேஷ்மாயா *

உன் கடமை

 

நீ தீக்குச்சி

உன்னை உரசி பற்ற வைக்கும் ஒரு சிறு கருவியே ஆன்மீகம், மதம், கடவுள் இவையெல்லாம்.

உரசிய பிறகு பிரகாசிக்க வேண்டியது உன் ஒருவனின் கடமை மட்டுமே.

*தினேஷ்மாயா *

மனத்திருப்தி


 

கல்லுக்கு ஊற்றுவதை ஏன் ஏழைகளுக்கு கொடுக்கக்கூடாது என கேட்கிறோம். ஆனால், சமூக ஊடகங்களில் பதிவிடும் அறிவுள்ள நாம், கல்லாதவர்களை நாடிச்சென்று அவர்களுக்கு எழுத்தறிவு புகட்டலாமே ?

ஆத்திகமோ நாத்திகமோ, எதுவாக வேண்டுமானாலும் இரு.

அதற்கு முன், மனிதனாய் இரு. அவனவன் மனத்திருப்தி அவனவனுக்கு...

*தினேஷ்மாயா *

Random Thoughts 7.86


 

Random Thoughts - 2.0

உடலை எரிக்கையில் உயிரும் எரியுமோ ?

உடலோடு சேர்ந்து உயிரும் வளருமோ?

வலி என்பது உடலுக்குத்தானே. உயிருக்கும் வலிக்குமோ?

உயிர் உருவானபோது வலித்ததா? தெரியாது.. 

உயிர் பிரியும்போது வலிக்குமா? அதுவும் தெரியாது. உயிர் நீங்கிய எவரும் வந்து சொன்னதில்லை அவ்வுண்மையை.

* தினேஷ்மாயா *

Random Thoughts


 * தினேஷ்மாயா *


மு. வரதராசன்

 


* தினேஷ்மாயா *

Insomniac Thoughts - 1


 * தினேஷ்மாயா *

அன்புமழை

 

கவலை இல்லாமலும் 

கண்ணீர் வருமாப்போலே, 

மழைகளில்லாமலும் 

இவள் குடைகொண்டு நடக்கிறாள்.  

என் அன்புமழை பிடித்திலையோ ?

* தினேஷ்மாயா *

திருநங்கைகளின் குரல்



 “என்ன பெயர் 

சொல்லி வேண்டுமானாலும்

எங்களைக் கூப்பிடுங்கள்

மனிதநேயம் ம(றை)றந்த

மனிதர்களே

என்னவோ போல் மட்டும்

எங்களைப் பார்க்காதீர்கள்..”

- ஆஷாபாரதி

சமீபத்தில் நான் படித்த ஒரு புதுக்கவிதை இது. படித்த அந்நொடியே என்னை கவர்ந்தது. குரலற்றவர்களின் குரலாக ஒலிக்கும் இந்த கவிதை, விளிம்புநிலை மாந்தகளான திருநங்கைகளின் உள்ளத்து உணர்வை நமக்கு திரையிட்டுக் காட்டுகிறது. அவர்களும் சமூகத்தில் சமமாக நடத்தப்பட வேண்டியவர்களே. இயற்கை செய்த பிழைக்கு, அவர்களுக்கு தண்டனை கொடுப்பது என்ன நியாயம்?


* தினேஷ்மாயா *