இதுவும் கடந்து போகும் !!!

Friday, October 08, 2021


இதுவும்... கடந்து போகும்...

இதுவும்... கடந்து போகும்....


சுடரி இருளில் ஏங்காதே

வெளிதான் கதவை மூடாதே.. அட

ஆறு காலங்களும் மாறி மாறி வரும்

இயற்கையின் விதி இதுவே..

அழியாத காயங்களை ஆற்றும் மாயங்களை

அனுபவம் கொடுத்திடுமே..


மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன ?

அது ஏதோ ஓர் பூவின் துணை ஆனால் என்ன ?


சுடரி சுடரி உடைந்து போகாதே...

உடனே வலிகள் மறைந்து போகாதே...

சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே...

அதுவாய் மறக்கும் பின் தோன்றாதே...


இதுவும்... கடந்து போகும்...

இதுவும்... கடந்து போகும்...


இதுவும் கடந்து போகும் 

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்  

ஏதுவும் கடந்து போகும்


அதுவே படைக்கும் அதுவே உடைக்கும்

மனம் தான் ஒரு குழந்தையே...

அதுவாய் மலரும் அதுவாய் உதிரும்

அது போல் இந்த கவலையே...


நாள்தோரும் ஏதோ மாறுதல்

வானும் மண்ணும் வாழும் ஆறுதல்

பேசாமல் வா வாழ்வை வாழ்ந்திருப்போம்...


மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன ?

அது ஏதோ ஓர் பூவின் துணை ஆனால் என்ன ?


சுடரி சுடரி உடைந்து போகாதே...

உடனே வலிகள் மறைந்து போகாதே...

சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே...

அதுவாய் மறக்கும் பின் தோன்றாதே...


இதுவும்... கடந்து போகும்...

இதுவும்... கடந்து போகும்...


அதுவாய் விழுந்தே அதுவாய் எழுந்தே

குழந்தை நடை பழகுதே...

மனதால் உணர்ந்தே உடலே விரிந்தே

பறவை திசை அமைக்குதே...


வசம் தான் பூவின் பார்வைகள்

காற்றில் ஏறி காணும் காட்சிகள்

காணாமல் வெளியாக பார்த்திடுமே...


சிறு ஊற்றாக நேசம் எங்கோ உருவாகுமே...

பெரும் காற்றாக மாறி சென்று உறவாடுமே...


சுடரி சுடரி... வெளிச்சம் தீராதே....

அதை நீ உணர்ந்தாள் பயணம் தீராதே...

அழகே சுடரி அட ஏங்காதே...

மலரின் நினைவில் மனம் வாடாதே....


இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும் 

இதுவும் கடந்து போகும் 

இதுவும் கடந்து போகும் 

கடந்து போகும் கடந்து போகும் .


படம்: நெற்றிக்கண்

வரிகள்: கார்த்திக் நேத்தா

குரல்: சிட் ஸ்ரீராம்

இசை:  கிரீஷ்


ரொம்ப நாள் கழிச்சு மீண்டும் மீண்டும் கேட்கும்படியான ஒரு மெலடி. வரிகளும் power packed. கதையின் சூழ்நிலைக்கேற்ப அருமையான வரிகள். நாமும் நம் வாழ்வின் சில தருணங்களில் மனசு உடைந்து நொறுங்கிக்கிடக்கும் சமயம் இந்த பாடலும் வரிகளும் கேட்கும்போது மழைக்கால ஈரத்தென்றல் வந்து நம் மனதை வருடிவிட்டு அந்த வலியையும் கொஞ்சம் சுமந்து செல்வதாய் உணரலாம்.


* தினேஷ்மாயா * 

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ

இன்பம் சேர்க்க மாட்டாயா? - எமக்

கின்பம் சேர்க்க மாட்டாயா? - நல்

அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ

அல்லல் நீக்க மாட்டாயா? - கண்ணே

அல்லல் நீக்க மாட்டாயா?


வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே

வாழ்வின் உணர்வு சேர்க்க - எம்

வாழ்வின் உணர்வு சேர்க்க - நீ

அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்

ஆடிக் காட்ட மாட்டாயா? கண்ணே

ஆடிக் காட்ட மாட்டாயா?


அறமிதென்றும் யாம் மறமிதென்றுமே

அறிகிலாத போது - யாம்

அறிகிலாத போது - தமிழ்

இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல்

இயம்பிக் காட்ட மாட்டாயா? - நீ

இயம்பிக் காட்ட மாட்டாயா?


புறம் இதென்றும் நல் அகம் இதென்றுமே

புலவர் கண்ட நூலின் - தமிழ்ப்

புலவர் கண்ட நூலின் - நல்

திறமை காட்டி உனை ஈன்ற எம்உயிர்ச்

செல்வம் ஆகமாட்டாயா? தமிழ்ச்

செல்வம் ஆக மாட்டாயா?


- பாரதிதாசன் -

இந்த வரிகளை பாடல்களாக கேட்டுப்பாருங்கள். அற்புதமாக இருக்கும். Youtube-ல் நிறைய பேர் பாடியுள்ளனர். ஓர் இரவு என்னும் பழைய தமிழ் திரைப்படத்திலும் இப்பாடல் இடம்பெற்றுள்ளது.

* தினேஷ்மாயா *

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா

செல்வ களஞ்சியமே

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா

செல்வ களஞ்சியமே

என்னை கலி தீர்த்தே உலகில்

ஏற்றம் புரிய வந்தாய்

என்னை கலி தீர்த்தே உலகில்

ஏற்றம் புரிய வந்தாய்


சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா

செல்வ களஞ்சியமே

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா

செல்வ களஞ்சியமே


பிள்ளை கனி அமுதே கண்ணம்மா

பேசும் பொற்சித்திரமேஏ

பிள்ளை கனி அமுதே கண்ணம்மா

பேசும் பொற்சித்திரமேஏ

அள்ளி அணைத்திடவே என் முன்னே

ஆடி வரும் தேரேஏ

அள்ளி அணைத்திடவே என் முன்னே

ஆடி வரும் தேரேஏ


சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா

செல்வ களஞ்சியமே

சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா

செல்வ களஞ்சியமே


ஓடி வருகையிலே கண்ணம்மா

உள்ளம் குளிருதடீ

ஓடி வருகையிலே கண்ணம்மா

உள்ளம் குளிருதடீ

ஆடி திரிதல் கண்டால் உனை போய்

ஆவி தழுவுதடீ

ஆடி திரிதல் கண்டால் உனை போய்

ஆவி தழுவுதடீ


உச்சி தன்னை முகர்ந்தால்

கர்வம் ஓங்கி வளருதடீ

உச்சி தன்னை முகர்ந்தால்

கர்வம் ஓங்கி வளருதடீ

மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால்

மேனி சிலிர்க்குதடீ

மெச்சி உன்னை ஊரார் புகழ்ந்தால்

மேனி சிலிர்க்குதடீ


கன்னத்தில் முத்தமிட்டாள்

உள்ளம்தான் கள்வெறி கொல்லுதடி

கன்னத்தில் முத்தமிட்டாள்

உள்ளம்தான் கள்வெறி கொல்லுதடி

கன்னத்தில் முத்தமிட்டாள்

உள்ளம்தான் கள்வெறி கொல்லுதடி

உன்னை தழுவிடிலோ கண்ணம்மா

உன்மத்தம் ஆகுதடிஏ

உன்னை தழுவிடலோ கண்ணம்மா

உன்மத்தம் ஆகுதடிஏ

உன் கண்ணில் நீர் வடிந்தால்

என் நெஞ்சில் உதிரம்

உன் கண்ணில் நீர் வடிந்தால்

என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி

என் கண்ணிற் பாவையன்றோ கண்ணம்மா

என் கண்ணிற் பாவையன்றோ கண்ணம்மா

என்னுயிர் நின்னதன்றோ


- பாரதியாரின் கண்ணன் பாட்டிலிருந்து -


அருமையான வரிகள். தமிழ் கர்நாடிக் இசைக்கச்சேரிகளில் நிச்சயம் இந்த பாடல் இடம்பிடித்திடும். இப்பாடல் நிறைய versions-ல் இருக்கிறது. எதாவது ஒரு version-ஐ கேட்டுப்பாருங்களேன். மனம் அவ்வளவு லேசாக மாறிவிடுகிறது.

* தினேஷ்மாயா *