இதுவும் கடந்து போகும் !!!

Friday, October 08, 2021


இதுவும்... கடந்து போகும்...

இதுவும்... கடந்து போகும்....


சுடரி இருளில் ஏங்காதே

வெளிதான் கதவை மூடாதே.. அட

ஆறு காலங்களும் மாறி மாறி வரும்

இயற்கையின் விதி இதுவே..

அழியாத காயங்களை ஆற்றும் மாயங்களை

அனுபவம் கொடுத்திடுமே..


மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன ?

அது ஏதோ ஓர் பூவின் துணை ஆனால் என்ன ?


சுடரி சுடரி உடைந்து போகாதே...

உடனே வலிகள் மறைந்து போகாதே...

சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே...

அதுவாய் மறக்கும் பின் தோன்றாதே...


இதுவும்... கடந்து போகும்...

இதுவும்... கடந்து போகும்...


இதுவும் கடந்து போகும் 

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்  

ஏதுவும் கடந்து போகும்


அதுவே படைக்கும் அதுவே உடைக்கும்

மனம் தான் ஒரு குழந்தையே...

அதுவாய் மலரும் அதுவாய் உதிரும்

அது போல் இந்த கவலையே...


நாள்தோரும் ஏதோ மாறுதல்

வானும் மண்ணும் வாழும் ஆறுதல்

பேசாமல் வா வாழ்வை வாழ்ந்திருப்போம்...


மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன ?

அது ஏதோ ஓர் பூவின் துணை ஆனால் என்ன ?


சுடரி சுடரி உடைந்து போகாதே...

உடனே வலிகள் மறைந்து போகாதே...

சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே...

அதுவாய் மறக்கும் பின் தோன்றாதே...


இதுவும்... கடந்து போகும்...

இதுவும்... கடந்து போகும்...


அதுவாய் விழுந்தே அதுவாய் எழுந்தே

குழந்தை நடை பழகுதே...

மனதால் உணர்ந்தே உடலே விரிந்தே

பறவை திசை அமைக்குதே...


வசம் தான் பூவின் பார்வைகள்

காற்றில் ஏறி காணும் காட்சிகள்

காணாமல் வெளியாக பார்த்திடுமே...


சிறு ஊற்றாக நேசம் எங்கோ உருவாகுமே...

பெரும் காற்றாக மாறி சென்று உறவாடுமே...


சுடரி சுடரி... வெளிச்சம் தீராதே....

அதை நீ உணர்ந்தாள் பயணம் தீராதே...

அழகே சுடரி அட ஏங்காதே...

மலரின் நினைவில் மனம் வாடாதே....


இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும் 

இதுவும் கடந்து போகும் 

இதுவும் கடந்து போகும் 

கடந்து போகும் கடந்து போகும் .


படம்: நெற்றிக்கண்

வரிகள்: கார்த்திக் நேத்தா

குரல்: சிட் ஸ்ரீராம்

இசை:  கிரீஷ்


ரொம்ப நாள் கழிச்சு மீண்டும் மீண்டும் கேட்கும்படியான ஒரு மெலடி. வரிகளும் power packed. கதையின் சூழ்நிலைக்கேற்ப அருமையான வரிகள். நாமும் நம் வாழ்வின் சில தருணங்களில் மனசு உடைந்து நொறுங்கிக்கிடக்கும் சமயம் இந்த பாடலும் வரிகளும் கேட்கும்போது மழைக்கால ஈரத்தென்றல் வந்து நம் மனதை வருடிவிட்டு அந்த வலியையும் கொஞ்சம் சுமந்து செல்வதாய் உணரலாம்.


* தினேஷ்மாயா * 

0 Comments: