விழியிலே மணி விழியில். ... ஹிந்தி

Monday, December 31, 2018


திரைப்படம்: சீனி கம்

இசை : இளையராஜா

* தினேஷ்மாயா *

2018-ல் நான் ரசித்த திரைப்படங்கள்.



1. காலா
2. இரவுக்கு ஆயிரம் கண்கள்
3. இரும்புத்திரை
4. பரியேறும் பெருமாள்
5. இமைக்கா நொடிகள்
6. செக்க சிவந்த வானம்
7. கோலமாவு கோகிலா
8. ராட்சசன்
9. வடசென்னை
10. KGF

இந்த ஆண்டு வெளிவந்த பல படங்களை இன்னும் பார்க்கவில்லை. உதாரணமாக , 96, சீத்க்காதி..

நான் பார்த்து ரசித்த படங்கள் இவை.

* தினேஷ்மாயா *

2019 வருக வருகவே...



        2018-ம் ஆண்டு வழக்கத்தைவிடவும் எனக்கு மிக சிறப்பான ஆண்டு. என் மாயா எனக்கு கிடைத்த ஆண்டு. தனியொருவனாய் சுற்றி திரிந்த எனக்கு அன்பால் கடிவாளம் போட்டாள் என்னவள். என் வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை என்னைக் காணச்செய்த ஆண்டு. சிறப்பான குடும்ப சூழல், சற்று பிரிந்திருந்தாலும் அன்பு கொஞ்சமும் குறையாத தோழி/மனைவி, புதிதாய் எனக்கு கிடைத்த அன்பான குடும்பம்,  அலுவலகத்தில் என் அடுத்த உயர்பதவிக்கான அடிக்கல், புதிதாய் இடமாற்றம் செய்யப்பட்ட சிறப்பான அலுவலகம், வேலைப்பளுவை பகிர்ந்துக்கொள்ளும் சக பணியாளர்கள், அலுவலர், இறைவனை தினம் தினம் காணும்படியான ஒரு இடத்தில் வீடு, எனக்கு அமைந்த அனைத்து சூழலும் இறையருளால் மிகச்சிறப்பான ஆண்டாக 2018-ஐ மாற்றியது.

       2019-ல் காணவிருக்கும் மிகப்பெரிய உயர்வும், வளர்ச்சியும் அதில் நான் கற்றுக்கொள்ளும் பாடங்களும் இன்னும் என்னை பக்குவப்படுத்தும் என ஆவலுடன் 2019-ஐ எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறேன்.

        2018-ல் தெரிந்தும் தெரியாதும் செய்த சிறு மற்றும் பெரிய தவறுகள் அனைத்தையும் மாற்றிக்கொண்டு புதிய மனிதனாய் பிறக்கப்போகும் 2019-ல் நானும் புதியவனாய் பிறந்து நல்ல மனிதனாய் இந்த சமூகத்திற்கு என் பணியை செய்வேன்.

            2018-ல் என் வலைப்பக்கத்தில் அதிகம் கவனம் செலுத்த முடியவில்லை. இனி 2019-ல் வழக்கம்போல் என் வலை என் பதிவுகளால் நிரம்பியிருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.


அன்புடன்

* தினேஷ்மாயா *

திருமகள்..




         இன்று காலையில் அலுவலகம் வரும் வழியில் ஒரு காட்சியை கண்டேன். ஒரு ஆட்டோவில் 6 பேர் பயணித்திக்கொண்டிருந்தனர். பின்னிருக்கையில், பெண்கள் மற்றும் குழந்தைகள். முன்னிருக்கையில் ஓட்டுனருக்கு அருகே அந்த குடும்பத்தலைவர் அமர்ந்திருந்தார். இது எங்கும் நடக்கும் விஷயம்தான். ஆனால், பின்னிருக்கையில் அமர்ந்திருக்கும் ஒரு குட்டி குழந்தை, சுமார் 3 முதல் 4 வயது இருக்கும் அந்த சுட்டிக்குழந்தை, முன்னிருக்கையில் ஓட்டுனருடன் அமர்ந்திருக்கும் தன் தந்தையை பிடித்துக்கொண்டிருந்தது. அவர் கீழே விழுந்துவிடக்கூடாது என்பதற்காக. 

      அந்த குழந்தையின் எடை சுமார் 10-15 கிலோ இருக்கலாம். அந்த தந்தையின் எடை சுமார் 70 கிலோ இருக்கலாம். 70 கிலோ எடை இருக்கும் தந்தையை அந்த 15 கிலோ எடை இருக்கும் குழந்தை பிடிப்பதால் எந்த பலனும் இல்லைதான். ஆனால், அந்த தந்தையை கீழே விழாமல் பிடித்திருப்பது அந்த குழந்தையின் பாசம்தான். அக்காட்சி எனக்கு நெகிழ்ச்சியை தந்தது.


* தினேஷ்மாயா *

மனிதனை மதிப்போம்

Thursday, December 06, 2018




சமீபத்தில் எனக்கு ஒரு குறுந்தகவல் வந்தது.

அது கொஞ்சம் பெரிய செய்தி. ஆனால் அதில் சொல்லப்பட்ட விஷயம், "தாயை பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே."

இதுதான் எனக்கு கொஞ்சம் கோபத்தை வரவழைத்தது. இந்த கருத்தை யார் சொல்லியிருப்பார்கள்? மனிதனுக்கு மரியாதை தராமல் தண்ணீருக்கு மரியாதையும் முக்கியத்துவமும் தருவதை எப்படி பார்ப்பது ?

மனிதனை மதிக்க முதலில் இந்த சமூகத்திற்கு சொல்லிகொடுப்போம். அதன்பிறகு, மாட்டையும், தண்ணீரையும் மதிக்க சொல்லிக்கொடுப்போம். அனைத்து உயிர்களும் ஒன்றுதான். ஆனால், சகமனிதனை பழித்து இன்னபிறவற்றை துதிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ?

* தினேஷ்மாயா *

என்னங்க சார் உங்க சட்டம் ?



* தினேஷ்மாயா *

ஆண் தேவதைகளுக்கு

Monday, November 19, 2018



பேருந்தில் எத்தனை முறை
மாறி உட்கார சொன்னாலும்
சலிக்காமல் பெண்களுக்காக
உட்காரும் ஆண்களுக்கு வாழ்த்துக்கள்

முதல் காதலுக்காக
முதல் பாசத்துக்காக தன் உயிரை
கூட விடும் அந்த புனிதமான
ஆண்களுக்கு வாழ்த்துக்கள்

சினிமாவோ திருமணமோ எங்கு
சென்றாலும் குழந்தையை தூக்கி
வைத்து பார்த்துக்கொள்ளும் பொறுப்பை
ஏற்கும் ஆண்களுக்கு வாழ்த்துக்கள்

முப்பத்தைந்து வயது வரையிலும்
குடும்ப சூழ்நிலை காரணமாக
திருமணம் செய்து கொள்ளாமல்
மாடாய் உழைத்துக் கொண்டிருக்கும்
ஆண்களுக்கு வாழ்த்துக்கள்

கிரிக்கெட் மேட்ச் மற்றும் செய்திகளை
சீரியல் இடைவேளையின் மட்டும்
பார்த்து மனைவிக்காக விட்டு
கொடுக்கும் ஆண்களுக்கு வாழ்த்துக்கள்

தான் சம்பாதிக்கும் பாதி பணத்தை
தன் தங்கையின் திருமணத்திற்கு
சேர்த்து வைக்கும் நல் உள்ளங்களான
ஆண்களுக்கு வாழ்த்துக்கள்

ஊருக்கே ராஜா ஆனாலும்
மனைவியிடம் மட்டும் குடும்பத்துக்காக
அடங்கி இருக்கும் அனைத்து
ஆண்களுக்கு வாழ்த்துக்கள்

ஆண்களுக்கும் வெட்கம் உண்டு
தன் முதல் காதலிக்கு காதல் கடிதம் கொடுக்கும் நேரத்தில்...

ஆண்களுக்கும் கூச்சம் உண்டு
திருமண பேச்சை அம்மா முதன்முதலாய்
சொல்லும் நேரத்தில்....‌

ஆண்களுக்கும் மாதாந்திர வலி உண்டு
மாசகடைசி மூன்று நாளில் குடும்பத்தை
ஓட்டும் நேரத்தில்...

ஆண்களுக்கும் பிரசவ வலி உண்டு
மனைவி தலைபிரசவத்தில் உள்ளே
இருக்கும் நேரத்தில்...

ஆண்களுக்கும் பயம் உண்டு
நேர்முகதேர்வில் குடும்ப பொறுப்பை ஏற்று
அவர்கள் கேட்கும் நேரத்தில்...

ஆண்களுக்கும் கற்பு உண்டு
காதலி இருக்கும் போது கண்டவள்
பேசும் நேரத்தில்..‌

ஆண்களுக்கும் திமிர் உண்டு
அனைத்து வலிகளையும் சேர்த்து
அழும் நேரத்தில்..‌

ஆண்களுக்கும் அழகு உண்டு
ஆங்காங்கே அரும்பு மீசை
முளைக்கும் நேரத்தில்....

ஆண்களுக்கும் மானம் உண்டு
அலுவலகத்தில் நாலுபேர் முன்னே
மானேஜர் திட்டும் நேரத்தில்..‌

ஆண்களுக்கும் அழுகை உண்டு
பல ஏமாற்றங்களை நெஞ்சில்
சுமந்த நேரத்தில்...‌

ஆண்களுக்கும் தாய்மை உண்டு
தன் மகளை ஆசையாக
கொஞ்சும் நேரத்தில்...

ஆண்களுக்கும் நாணம் உண்டு
காதல் சொன்னதும் காதலி முகம்
பார்க்கும் நேரத்தில்....

ஆண்களுக்கும் பொறுப்பு உண்டு
தனக்கு சாப்பிடாமல் தன் குழந்தைக்கு
ஊட்டும் நேரத்தில்..‌‌

ஆண்களுக்கும் மனசு உண்டு
அந்த மனதில் ஈரம் உண்டு
அந்த ஈரத்தில் பாசம் பரிவு உண்டு
அந்த பரிவில் மனைவி மக்கள் உண்டு
அந்த மனைவியிடம் உயிர் உண்டு
அந்த உயிரில் அவள் மட்டுமே உண்டு

ஆண் தேவதைகளுக்கு
ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள்..

#Shared

* தினேஷ்மாயா *

ஜெய்பீம் Anthem !!

Friday, November 09, 2018



மனிதனை மனிதனாகவே மதித்திடல் வேண்டுமென்று
புனித புத்தன் அன்று தோன்றினாரே மண்மேலே
மதமென்றும் சாதியென்றும் மக்களை பிரிக்கின்ற
மடமைய மாற்ற வேண்டும் என்றே மீண்டும் பிறந்தாரே !

வணக்கம் Bro, தமிழா
தமிழச்சி என் தங்கச்சி
நான் சொல்லும் கதையை
கொஞ்சம் காது கொடுத்துக் கேளு மச்சி
எத்தனை தலைவர்கள் நம் இந்தியாவிலே பிறந்தபோதிலும்
நம் நிலைமை மாறவில்லையே அடிமையாகவே இத்தனை காலமும்
இந்தியா முழுவதுமே இருக்குது இன்னும் சாதி வேற்றுமை
ஆனாலும் எதிர்த்து பேசிட யார் தந்தது நமக்கு உரிமை ?
தொட்டாலே தீட்டென்றார்
பார்த்தாலே பாவமென்றார்
இல்லாத கட்டு கதைகளை சொல்லி சொல்லி
நமை தள்ளிவைத்தார்
பள்ளியில் சேரமுடியாது
கோயிலுக்குள் உன் பாதம் நுழையாது
சாலையில் போக முடியாது
சாகடித்தாலும் கேட்க ஆளேது
ஆயிரம் ஆண்டுகள் போனது இப்படி
ஆனால் இன்றைக்கு மாறியதெப்படி ?
எடுத்துப்பார் உன் வரலாறு
நமக்கு முகவரி அதுயாரு ?

பாபாசாகேப் என்றொருவர்
பாரத நாட்டின் தந்தையவர்..

பாபாசாகேப் என்றொருவர்
உரிமையை வாங்கி தந்ததவர்..



பாபாசாகேப் என்றொருவர்
பாரத நாட்டின் தந்தையவர்..

பாபாசாகேப் என்றொருவர்
உரிமையை வாங்கி தந்ததவர்..


ரூபாயின் பிரச்சனை
இந்தியாவிலே சாதிகள்
உலகை திரும்பி பார்க்க வைத்தது
அம்பேத்கரின் சிந்தனை...
வட்ட மேசையும் வியந்து தந்தது
ரெட்டை வாக்குரிமை அன்றைக்கு..
இதனை ஏற்காத மகாத்மா காந்தி
சிறையில் கிடந்தார் பட்டினி போராட்டம்..
என்றாலும, சுதந்திரத்தை விடவும் இங்கே
சமத்துவம் தான் முக்கியம்
இது புரட்சியாளர் இலட்சியம்
அடிமை என்பதை உணர்ந்துவிட்டால் போதும்
மக்கள் படித்துவிட்டால் மாறும்
உலக மதஙகளை ஆய்வுகள் செய்தார்
நமது மதம் இனி பௌத்தம் என்றார்
சாதி ஒழியாத இந்திய நாட்டில்
சாத்தியமில்லை சமத்துவம்
கல்வி இல்லாத இருண்ட வீட்டில்
என்றுமில்லையே வெளிச்சமும்
உடலை வருத்தி இரவும் பகலும்
எழுதிமுடித்தார் சட்டம்
மனித மாண்பினை மீட்டெடுக்க
அவர் தொடுத்தார் யுத்தம்

ஜெஜெய்பீம் என சொல்வோமே
சாதிகள் இல்லை வெல்வோமே

ஜெஜெய்பீம் என சொல்வோமே
சாதிகள் இல்லை வெல்வோமே

ஜெஜெய்பீம் என சொல்வோமே
சாதிகள் இல்லை வெல்வோமே

ஜெஜெய்பீம் என சொல்வோமே
சாதிகள் இல்லை வெல்வோமே


கற்பி ஒன்றுசேர் புரட்சிசெய்
கற்றுக்கொள்ள தினம் முயற்சிசெய்
சாதி என்பதொரு மனநிலைதான்
மாற்றிக்கொண்டாலே நீ மனிதன்

கற்பி ஒன்றுசேர் புரட்சிசெய்
கற்றுக்கொள்ள தினம் முயற்சிசெய்
சாதி என்பதொரு மனநிலைதான்
மாற்றிக்கொண்டாலே நீ மனிதன்

சாதிமத பேதஙகளை தூக்கிப்போடு
இனிவரும் காலங்களை மாற்றிவிடு
கையிலெடு சமத்துவம்
மரண மனிதகுலத்தை பிரித்த மதங்களை
மறந்த விலங்குகளாய் பிறப்பெடு ஒருமுறை
எடுத்து படித்துப்பாரு அம்பேத்கரை
அதற்குப்பிறகு பாரு உன் வாழ்க்கையை
எடுத்து படித்துப்பாரு அம்பேத்கரை
அதற்குப்பிறகு பாரு உன் வாழ்க்கையை

ஜெஜெய்பீம் என சொல்வோமே
சாதிகள் இல்லை வெல்வோமே

ஜெஜெய்பீம் என சொல்வோமே
சாதிகள் இல்லை வெல்வோமே

ஜெஜெய்பீம் என சொல்வோமே
சாதிகள் இல்லை வெல்வோமே

ஜெஜெய்பீம் என சொல்வோமே
சாதிகள் இல்லை வெல்வோமே


ஜெய்பீம் !!!!!


ஆல்பம்: The Casteless Collectives
தயாரிப்பு: நீலம் பண்பாட்டு மையம்

* தினேஷ்மாயா *

வடசென்ன எப்படி இருக்கும்?




வடசென்ன எப்படி இருக்கும் யாருக்காச்சும் தெரியுமா ?
உண்மைய எடுத்துச் சொன்னா ஒருத்தனுக்கும் புரியுமா ?

வடசென்ன எப்படி இருக்கும் யாருக்காச்சும் தெரியுமா ?
உண்மைய எடுத்துச் சொன்னா ஒருத்தனுக்கும் புரியுமா ?

இருந்த அழகயெல்லாம் அழிச்சுட்டானுங்க - பல
உண்மைகள அடியோடு மறைச்சுட்டானுங்க
இழந்த நிலங்கள நாம மீட்டு எடுக்கனும்..
இரண்டாம் சுதந்திரமா அதுவும் இருக்கனும்..

வடசென்ன எப்படி இருக்கும் யாருக்காச்சும் தெரியுமா ?
உண்மைய எடுத்துச் சொன்னா ஒருத்தனுக்கும் புரியுமா ?
கூவம்நதி ஓரத்துல குடிச நெறைய இருந்துச்சா..
நம்மள அடிச்சு போலீஸ் மானபங்கப்படுத்துச்சா..
செய்யாத தப்புக்கெல்லாம் தண்டனைய கொடுத்துச்சா..
லஞ்சத்த வாங்கிகிட்டு லட்சம் வீட்ட கொளுத்திச்சா..

இத்தன நாளா நாம வாய பொத்தினு இருந்தோம்..
எத்தன இன்னல்கள ராவும் பகலும் சுமந்தோம்..
இதயா தட்டிக்கேக்க நாமயெல்லாம் மறந்தோம்..
இதுக்கா பெரியாரின் பேரனாக பிறந்தோம்..
மறைச்சா மறைஞ்சிடுமா கருப்பரோட பரம்பரை..
சென்னை மட்டுந்தாண்டா எங்களோட கருவறை..

மறைச்சா மறைஞ்சிடுமா கருப்பரோட பரம்பரை..
சென்னை மட்டுந்தாண்டா எங்களோட கருவறை..

தட்டி கேட்டவன ஜெயிலுக்குள்ள போட்டுட்டான்
நம்மள ஏமாத்தி பல கட்டிடத்த கட்டிட்டான்..
ராஜாவா வாழ்ந்த ஜனங்க வாழுதிப்போ ரோட்டுல..
வாயில்லா மக்களுக்கு வாதாடவும் கோர்ட்டில்ல..

இதுக்கு சப்போர்ட் பண்ண ஆளுங்கெல்லாம் யாரு ?
நம்முடைய வரிப்பணத்துல துன்னுறாண்டா சோறு..
ஒருநாள் எழுந்து வருவோம் பொறுத்திருந்து பாரு..
உனக்கு மூக்கணாங்கயிறு போட்டு ஓட்டியிடுவோம் ஏறு..

மறைச்சா மறைஞ்சிடுமா கருப்பரோட பரம்பரை..
சென்னை மட்டுந்தாண்டா எங்களோட கருவறை..

மறைச்சா மறைஞ்சிடுமா கருப்பரோட பரம்பரை..
சென்னை மட்டுந்தாண்டா எங்களோட கருவறை..

இணைஞ்சு இணைஞ்சு வாழுற கூட்டம்
குனிஞ்சு குனிஞ்சே கெடக்க மாட்டோம்
நிமிந்து நிக்குறோம் புளிகளாட்டம்
இனிமே எதுத்து கேள்வி கேப்போம்

சொந்த ஊரு மெட்ராசு
நாங்க இல்லடா புதுசு..
சொந்த மண்ண விட்டு
போகசொல்லுது அரசு..
படிச்சுப்பாரு என் வரலாறு
அதிலிருக்குது ஆயிரம் கோளாறு..
உழச்சு போட்டது என் முன்னோரு
புடுங்கி திங்குற நீயாரு ?
சென்னை என்பது கருப்பர் நகரம்
உண்மைய இப்போ உறக்க சொல்லுவோம்
வியாசர்பாடி வண்ணாரப்பேட்ட
நான் கட்டினது ஜார்ஜுகோட்ட..

மறைச்சா மறைஞ்சிடுமா கருப்பரோட பரம்பரை..
சென்னை மட்டுந்தாண்டா எங்களோட கருவறை..

மறைச்சா மறைஞ்சிடுமா கருப்பரோட பரம்பரை..
சென்னை மட்டுந்தாண்டா எங்களோட கருவறை..

ஆல்பம்: The Casteless Collectives
தயாரிப்பு: நீலம் பண்பாட்டு மையம்



* தினேஷ்மாயா *

பார்ப்பனியம்

Thursday, November 08, 2018




 இந்தியா மூன்று பக்கம் கடலால் சூழப்பட்டுள்ளது. ஆனால் நான்கு பக்கமும் பார்ப்பனியத்தால் சூழப்பட்டு மூழ்கடிக்கப்பட்டிருக்கிறது. இது இன்றைய சமூகத்தில ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. அதுபற்றிய பதிவுகளை இங்கே பதிய விழைகிறேன். அதற்கான முன்னுரையே இந்த பதிவு.

* தினேஷ்மாயா *

உலக பொதுமறை


உலக பொதுமறை

காதல் !!

ஆம்..

இனம் மொழி எல்லைகள் கடந்து

உலகத்திற்கே பொதுவான ஒன்று

அன்பு என்னும் காதல் மட்டுமே..

* தினேஷ்மாயா *

தரிசனம்



 நான் உன்னை கோயிலில் வந்து தரிசிப்பதில்லை. அதற்கு நீ காரணமில்லாதபோதிலும் உன்னை சுற்றியிருப்பவர்கள் காரணமாக இருக்கிறார்கள். 

   ஆனாலும், என் பக்தியை உணர்ந்த நீ... என் கனவில் வந்து எனக்கு தரிசனம் கொடுத்தாயே ஈசனே..

    எனை தடுத்தாட்கொண்டமைக்கு என்ன கைம்மாறு செய்வேனோ ?!

* தினேஷ்மாயா *

கைக்குழந்தை

Wednesday, November 07, 2018


நீ செய்யும் குறும்புகள்

குழந்தையையே மிஞ்சிவிடும்...

குழந்தைக்கு ஈடேதுமில்லை என்போர்

உன்னை கண்டிருக்கவில்லை...

* தினேஷ்மாயா *

இசை



இசைக்கருவியை மீட்டினால் மட்டுமே

இசை பிறக்கும்...

ஆனால்,

மீட்டாமலே இசையை பொழியும்

யாழ் நீ !

* தினேஷ்மாயா *

உரிமையை மீட்போம்...

Monday, October 29, 2018



உரிமையை மீட்போம்...
உரிமையை மீட்போம்...
உரிமையை மீட்போம்...
உரிமையை மீட்போம்...
உரிமையை மீட்போம்...

யார் வெச்சது யார் வெச்சது உன் சட்டமடா.
இங்க வாழ்வென்பதும் சாவென்பதும் நிலம் மட்டுமடா.
யார் வெச்சது யார் வெச்சது உன் சட்டமடா.
இங்க வாழ்வென்பதும் சாவென்பதும் நிலம் மட்டுமடா.

எவனோ வந்து விதச்சான்
 அத எவனோ வந்து அறுத்தான்,
ரொம்ப கருத்தா அத வளர்த்த இவன்
 பசியா துடிச்சான்.

முறையா தல முறையா
வழி வழியாய் இன மொழியாய்
அட பிரிந்தே கிடந்தவனும்.
இப்போ நிமிர்ந்தான் நிமிர்ந்தான்.

நிலமே எங்க உரிமை
நிலமே எங்க உரிமை உரிமை உரிமை
நிலமே எங்க உரிமை
நிலமே எங்க உரிமை உரிமை உரிமை

இடியாய் ஒரு புயலா
வந்து இரங்கும் நம்ம படையும்
அத தடுத்தா எந்த கரையும்
இனி உடையும் உடையும்.

விதையாய் சின்ன விதையாய்
வந்து விழுந்தோம் சிறு துளியாய்
சதை கிழிந்தே மெல்ல எழுந்தோம்
 பெரும் மழையாய் மழையாய்ய்ய்.

புழுதி உடையாய் அணிந்தே
வியர்வை நெடியால் குனிந்தே
குருதி வழிய வரைந்தோம்
அதுதான் உலகே.

விடியும் விடியும் என்றே
 இருளில் கிடந்தோம் இன்றே
ஒளியை திறந்தோம்
 ஒன்றாய் சேர்ந்தே சேர்ந்தே...

நிலமே எங்க உரிமை
நிலமே எங்க உரிமை உரிமை உரிமை
நிலமே எங்க உரிமை
நிலமே எங்க உரிமை உரிமை உரிமை

யார் வெச்சது யார் வெச்சது உன் சட்டமடா.
இங்கு வாழ்வென்பதும் சாவென்பதும் நிலம் மட்டுமடா.

நிலமே எங்க உரிமை.

ஆளவும் இல்லடா
அடிமையும் நீ இல்லடா
காடெல்லாம் மேடெல்லாம்
முளைத்தது உன் நிலம்டா.

அடங்கி வாழ்ந்தாக்க முடியாதம்மா.
உரிமையை வாங்காம உயிர் போகுமா.

எழுந்து வாடா வாடா.
எதிர்த்து நீ கேளுடா
பயந்தா ஆகதுடா
இனமே உன்கூடதான்

நிலத்த மீட்டுக்கலாம்
நிலைமை மாத்திக்கலாம்
ஒன்னாக இருந்தா
இனி நம்ம காலம்தான்.

நிலமே எங்க உரிமை
நிலமே எங்க உரிமை உரிமை உரிமை
நிலமே எங்க உரிமை
நிலமே எங்க உரிமை உரிமை உரிமை

வண்ணங்கள தீட்டு
இது வானவில்லின் கூத்து.
அட சொந்தம் ஏது கேட்டா
அந்த விண்மீன காட்டு.

கதவில்லாத கூட்டில்
கனவுகள் ஏராளம் உண்டு.
உரிமைக்கு ஒன்றாகும் வீட்டில்
விடுதலை எப்போதும் உண்டு.

அதிகாரம் தொட்டு
நினைப்ப மாத்திக்காட்டு
உழைக்கும் கைகளுக்கே நாடு நாடு.

அடக்கும் காலம் இல்ல
நமக்கும் வேலி இல்ல
வெடித்து போரடலாம் பயமே இல்ல.

நிலமே எங்க உரிம
நிலமே எங்க உரிமை உரிமை உரிமை
நிலமே எங்க உரிமை
நிலமே எங்க உரிமை உரிமை உரிமை

யார் வெச்சது யார் வெச்சது உன் சட்டமடா.
இங்கு வாழ்வென்பதும் சாவென்பதும் நிலம் மட்டுமடா.

உரிமையை மீட்போம்..
உரிமையை மீட்போம்...
உரிமையை மீட்போம்...
உரிமையை மீட்போம்...
உரிமையை மீட்போம்...
உரிமையை மீட்போம்...
யார் வெச்சது யார் வெச்சது உன் சட்டமடா.
இங்கு வாழ்வென்பதும் சாவென்பதும் நிலம் மட்டுமடா
மீட்போம்
மீட்போம்
மீட்போம்
உரிமையை மீட்போம்...
உரிமையை மீட்போம்...
உரிமையை மீட்போம்...
யார் வெச்சது யார் வெச்சது உன் சட்டமடா.
இங்கு வாழ்வென்பதும் சாவென்பதும் நிலம் மட்டுமடா.

படம் : காலா (2018)
இயக்குனர்: பா.ரஞ்சித்
இசை: சந்தோஷ் நாராயணன்

காலா




    இந்தத் திரைப்படம் வெளிவந்து நான்கு மாதங்களுக்கு மேல் ஆகி இருந்தாலும் இதை நான் நேற்று தான் முதன் முதலாக பார்த்தேன். நேர்த்தியாக செதுக்கப்பட்ட ஒரு சிலையைப் போல இருந்தது இந்த திரைப்படம். இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள் மிகவும் சாமர்த்தியமாக, நேர்த்தியாக இந்த கதையை வடித்துள்ளார். தான் சொல்ல வந்த கருத்தை அவ்வளவு அழகாக, எளிமையாக அனைவருக்கும் புரியும்படி சொல்லி இருக்கிறார். படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுமே அருமையாக வாழ்ந்திருக்கிறார்கள்.இது ஒரு திரைப்படம் என்று சொல்ல முடியவில்லை. இது ஒரு வாழ்வியல், ஒரு வாழ்க்கை. அந்த தாராவி மக்களின் வாழ்க்கையை அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பொருளாதார, சமுதாய, வாழ்வாதாரப் பிரச்சினைகளை பற்றி பேசும் ஒரு வாழ்வியல் சார்ந்த ஒரு கலை. இந்த படத்திற்கு இசை ஒரு மிகப்பெரிய பலம் . படத்தோடு பாடல்களை கேட்கும் பொழுது அழகாக இருக்கிறது. எனக்கு இந்தப் படம் மீது ஒரு அதிக ஈர்ப்பு வருவதற்கான காரணம் "உரிமையை மீட்போம் " என்கிற பாடல். அந்த பாடல் வரும் அந்த காட்சிதான் படத்தின் ஆணிவேர் என்று எனக்கு தோன்றியது. "யார் வெச்சது யார் வெச்சது உன் சட்டமடா.. வாழ்வென்பது சாவதும் நிலம் மட்டுமடா". இந்தப் பாடல் என்னவோ தெரியவில்லை திரும்ப திரும்ப கேட்கத் தூண்டியது அந்த காட்சிகளை திரும்ப திரும்ப பார்க்க தூண்டியது. மக்களின் குறையை அவர்களின் பிரச்சனையை எழுத்து மூலமாக இசை மூலமாக காட்சி மூலமாக நமக்கு அருமையாக தந்திருக்கிறார். மற்ற பாடல்களும் ரசிக்கும்படியாக இருந்தது. படத்தில் சொல்லப்பட்டிருக்கிற, பேசப்பட்டிருக்கிற நிலம் சார்ந்த அரசியல் இன்றல்ல நேற்றல்ல பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகிறது. இன்னும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆனாலும் இருக்கும். சமத்துவம் என்பது பிறந்தால் மட்டுமே இந்த நிலை மாறும். அதை அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ரஞ்சித் அவர்கள்.

   படத்தில் நான் ரசித்த பல காட்சிகள் இருக்கிறது. அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ரஜினி அவர்களின் முதல் காட்சியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பார். அதில் அவர் தன் முதல் introduction காட்சியிலேயே கிளீன் போல்டு ஆகி விடுவார். அந்தக் காட்சியில் சூப்பர் ஸ்டார் என்கிற ஒரு மிகப்பெரிய பிம்பத்தை உடைத்து அவரை ஒரு அருமையான நடிகனாக பார்க்க வைத்திருக்கிறார் இயக்குனர். அந்த நடிகனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னொருவர் காலில் விழுந்து வணங்குவது சமத்துவம் அல்ல அவரிடம் கைகுலுக்கி சமமாக நடத்துவதே சிறந்தது என்று ஒரு காட்சி வரும். அந்த காட்சி மிகவும் பிடித்திருந்தது.  கருப்பு என்பது அழுக்கு வெள்ளை என்பது அழகு என்று இந்த சமூகத்தில் நிலவி வரும் ஒரு மாயையை செருப்பை கொண்டு அடித்திருக்கிறார் இயக்குனர். கருப்பு என்பது அழுக்கு அல்ல கருப்பு என்பது வண்ணம் உழைக்கும் மக்கள் வாழ்வியலின் ஒரு அங்கம் என்று உரக்க சொல்லி இருக்கிறார். வெள்ளை என்பது அழகு அல்ல கருப்பு என்பது அழுக்கு அல்ல. கருப்பு என்பது ஒரு அழகு என்று ஆழமாக பதிவு செய்திருக்கிறார். படத்தில் ரஜினி அவர்களின் மனைவியாக வரும் செல்வி கதாபாத்திரம் ரொம்ப கவர்ந்தது. அவரின் மகனாக வரும் கதாபாத்திரம் கொஞ்சம் ஈர்த்தது. அதிலும் அவர் படத்தின் முதல் பாதியில் புரட்சியாளராக போராட்டம் செய்பவராக வருவார் அப்பொழுது அவர் சட்டையின் நிறம் சிவப்பு நிறத்தில் இருக்கும். படத்தின் பிற்பாதியில் அவர் உடுத்தும் சட்டையின் நிறம் பெரும்பாலும் நீல நிறமாக இருக்கும். என்னை பொருத்தவரை ரஞ்சித் அவர்களின் திரைப்படங்களில் கருப்பு என்பது பெரியாரை குறிக்கிறது சிவப்பு என்பது காரல் மார்க்சை குறிக்கிறது நீலம் என்பது அண்ணல் அம்பேத்கரை குறிக்கிறது என்று நான் புரிந்து வைத்திருக்கிறேன் அது இயக்குனர் அவர்களின் காட்சிகளின் வழியாக நிரூபனம் ஆகிறது. திரைப்படத்தின் அந்த கதாபாத்திரத்தின் பெயர் லெனின் அதுவும் ஒரு புரட்சியாளனின் பெயர்தான். 

    தாராவி மக்கள் வாழ்வாதாரத்திற்காக எவ்வளவு கஷ்டப்பட்டாலும் அவர்களின் வாழ்க்கை முறையில் இருக்கும் அந்த ஒரு அழகு, மகிழ்ச்சி , சந்தோஷம் அதை அழகாக பதிவு செய்திருக்கிறார். சேரிவாழ் மக்கள் என்றாலே குற்றம், கொலை, குரோதம், திருட்டு என்று மட்டுமே காட்டிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவில் சேரி வாழ் மக்களின் வாழ்க்கையில் இருக்கும் உண்மையான அன்பை நமக்கு காட்டி இருக்கிறார் இயக்குனர். ரஞ்சித் அவர்களின் திரைத்துறை பயணத்தில் இந்தப் படம் நிச்சயம் ஒரு மைல் கல் என்று நான் சொல்வேன் அவரின் இதற்கு முன் வெளிவந்த மூன்று படங்களை காட்டிலும் இந்த படம் அவர் சொல்ல விரும்பிய அரசியலை ஆழமாக தீர்க்கமாக சொல்லி இருக்கிறது என்று நான் உணர்கிறேன். அவரின் அடுத்த படத்திற்காக காத்திருக்கிறேன். காலா திரைப்படத்தின் படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் இப்படி ஒரு திரைப்படத்தை நமக்கு தந்தமைக்கு நன்றிகள் பல.


* தினேஷ்மாயா *

இத்தனை வகைகளா ?

Wednesday, October 10, 2018



உணவில் பலவகை இருக்கும் என அறிந்திருக்கிறேன்.

உப்புமாவில் இத்தனை வகைகளா ??

எங்கிருந்து கற்றுக்கொண்டாய் இந்த க(கொ)லையை !?

* தினேஷ்மாயா *

என் மனைவிக்கு



தினமும் காலையில்

உப்புமா....

அது ரொம்ப பெரிய

தப்புமா....

* தினேஷ்மாயா *

பூணூல்

Thursday, October 04, 2018



நூல் அறிந்தவனைவிட
(புத்தகங்கள் கற்றவனைவிட)

நூல் அணிந்தவனுக்கே

இங்கு அனைத்திலும் முன்னுரிமை !!

இதுவே நிதர்சனமான உண்மை

* தினேஷ்மாயா *

கருப்பு என்கிற கருப்பன்....

Wednesday, October 03, 2018


  கருப்பு....   இது துக்கத்தின் நிறமல்ல. இது சமத்துவத்தின் நிறம். திராவிடத்தின் நிறம். இது சமூக சீர்திருத்தத்திற்கான நிறம். ஆம் இதுநாள் வரையில் கருப்பு என்பது ஒரு துக்க நிறமாகவே என்னுடைய ஆழ்மனதில் சிறுவயதிலேயே பதிந்துவிட்டது. ஆனால் இப்பொழுது நான் இந்த சமூகத்தை பார்க்கும் பார்வை சற்று விசாலமாக ஆகிவிட்டது. இதுவரை எனக்குத் தெரியாத பல காட்சிகளின் கண்ணுக்கு தெரிகிறது. இதுவரை என் காதுகளுக்குக் கேட்காத பல செய்திகள் என் காதுகளுக்கு எட்டுகிறது. இதுவரை உணராத பல வலிகளை என் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை வலிகளை என்னால் உணர முடிகிறது.

 எனக்கு இறை நம்பிக்கை உண்டு. ஆனால் இந்து மதம் கட்டமைக்கப்பட்டிருக்கும் விதம் அது இறைவனை எடுத்துக் காட்டும் விதம் அவை இறைவன் அல்லது மதம் என்கிற பெயரால் சக மனிதனை ஒடுக்கும் விதம் இதில் கொஞ்சம் கூட எனக்கு உடன்பாடு  இல்லை.

    தலைவர் பெரியார் ஏன் இறைவனை மறுத்தார் என்பதற்கான புரிதல் எனக்கு வர ஆரம்பித்திருக்கிறது. சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளுக்கு முதல் காரணம் சாதி. சாதி இங்கே தழைத்தோங்க முக்கிய காரணம் மதம். மதம் இருப்பதற்கு முக்கிய காரணம் இறைவன். அங்கிருந்து தான் அனைத்து ஏற்றத்தாழ்வுகளும் ஆரம்பிக்கிறது அதனாலேயே தலைவர் பெரியார் அவர்கள் இறைவனை, மதத்தை, சாதியை ஒழிக்க வேண்டும் என்று போராடினார்.

    அவர் கருப்பு சட்டையை தன் திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு , சுயமரியாதையை பின்பற்றுபவர்களுக்கு, கடவுளை, சாதியை, மதத்தை மறுப்பவர்களுக்கு கொடுத்தார். கருப்பு என்பது ஒரு துக்க நிறமாகவே நம் அனைவரின் மனதிலும் திணிக்கப்பட்டுள்ளது. என் மனதிலும் கூட.

      கருப்பு என்பது என்னுடைய நிறம். என் சமூகத்தின் நிறம்.

   கருப்பு என்பது தூக்கமல்ல. கருப்பு என்பது அவமானமல்ல. கருப்பு என்பது அசிங்கம் அல்ல.

   கருப்பு என்பது பெருமை. கருப்பு என்பது அதிகாரம். கருப்பு என்பது சுயமரியாதை. கருப்பு என்பது கௌரவம்.

  அது என்னவோ தெரியவில்லை கருப்பு நிறத்தின் மீது எனக்கு ஒரு புதிய மோகம் பிறந்திருக்கிறது. இவ்வளவு நாட்கள் இத்தனை வருடங்கள் கருப்பை ஏதோ ஒரு பதில் சொல்லாத யாரும் விளக்காத சில காரணங்களுக்காக நான் அதை தவிர்த்து வந்தேன் என்பதை நினைக்கும்போது வெட்கப்படுகிறேன் . ஆனால் கருப்பை இன்று முதல் நான் பயன்படுத்தப் போகிறேன். அதுவும் வாழ்க்கையின் அனைத்து தருணங்களிலும் அதற்கு ஒரு முக்கிய பங்கு கொடுக்கப் போகிறேன் என்பதை நினைத்து நான் மிகவும் மிகவும் பெருமைப்படுகிறேன். எம் மக்களின் நிறம் கருப்பு என்பதிலும் நான் கருப்பன் என்பதிலும் நான் கர்வம் கொள்கிறேன்......

* தினேஷ்மாயா *
  

பரியேறும் பெருமாள்




   இன்று இந்த திரைக்காவியத்தை காணும் வாய்ப்பு கிடைத்தது. ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வலியை, உணர்வுகளை நன்றாக பிரதிபலித்தது. ஆதிக்க சாதியினர் என்று நினைத்துக்கொண்டு இருக்கும் சிலர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை ஒதுக்கி வைத்து, ஒதுக்கி வைத்து  பல இன்னல்களுக்கு ஆளாக்குகின்றனர் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. எத்தனையோ தமிழ் சினிமாக்கள் சாதிக் கொடுமையை நமக்கு காட்ட முற்பட்டாலும் இந்த திரைப்படம் சற்று வித்தியாசமாக இருந்தது. ஏனென்றால் இது ஒரு திரைப்படமாக இல்லை. திரைப்படத்திற்கான எந்த ஒரு தேவையில்லாத அம்சங்களையும் இதில் அதிகம் காண முடியவில்லை. அதனாலேயே இது ஒரு சமூகத்தினரின் வாழ்க்கை முறை என்பதை நான் உணர்ந்தேன். திரைப்படத்தின் கதை, திரைக்கதை, குறிப்பாக வசனங்கள் மிகவும் ஆழமாக இருந்தது. இசை.... இப்படத்திற்கு இசை மிகப்பெரிய பலமாக இருந்தது. பின்னணி இசையும் சரி பாடல்களும் சரி கதையோடு பொருந்தி இருந்தது பாடல் வரிகளும் அருமை. படத்தில் நடித்த அத்தனை பேருக்கும் நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை நாம் ஒரு மூன்றாவது ஆளாக இருந்து பார்க்காமல் அந்த வலியை நம்மையே உணர வைத்தது இந்த படத்தின் மிகப்பெரிய பலம்.

   வணக்கம் வணக்கமுங்க ,ரயில் விட போலாமா மற்றும் கருப்பி  இந்த மூன்று பாடல்கள் என்னை அதிகம் கவர்ந்தது. வசனம் இந்த படத்தின் இன்னொரு கதாநாயகன் என்றும் சொல்லலாம். சில இடங்களில் வசனம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. குறிப்பாக காலேஜ் பிரின்சிபாலிடம் நாயகன் பேசும் காட்சியாகட்டும் அல்லது கதையின் பிற்பாதியில் காலேஜ் ப்ரின்ஸ்பால் நாயகனுக்கு அறிவுரை சொல்லும் காட்சியாகட்டும், நாயகன் படத்தின் முடிவில் நாயகியின் அப்பாவிடம் பேசும் வசனமாகட்டும் அந்த இடங்களிலெல்லாம் வசனங்கள் ஏதோ ஒரு எட்டமுடியாத தூரத்திற்கு சென்று விட்டது. அவை வெறும் வசனம் அல்ல. 2000 ஆண்டுகளுக்கு மேலாக ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த வலி. அந்த வலியின் பிரதிபலிப்புதான் இந்த மாதிரி ஆழமான வசனங்கள்.

பல நாள் கழித்து போடு நல்ல திரைப்படம் பார்த்த அனுபவம் கிடைத்தது இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களின் முதல் படம் இது அவர் இதுபோல சமூகத்திற்கு தேவையான இதுபோன்ற பல இப்படங்களை நமக்குக் கொடுக்க வேண்டும் அவருக்கும் இப்படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களுக்கும் மற்றும் இத்திரைப்படத்தின் அனைத்து கலைஞர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள் அதைவிட மேலாக இப்படி ஒரு அருமையான திரைப்படத்தை இந்த சமூகத்திற்கு இந்த தேவையான காலகட்டத்தில் கொடுத்தமைக்காக என் மனமார்ந்த நன்றிகளும்கூட...

*  தினேஷ்மாயா *

உறவுகள் சிறுகதை

Thursday, September 27, 2018


     
        உறவுகள் தொடர்கதை.....

இந்த வாசகத்தை எல்லோரும் கேட்டிருப்போம். ஆனால் நான் இங்கே ஒரு புது வாசகத்தை சொல்லப் போகிறேன்.

       உறவுகள் சிறுகதை.....

ஆம் உறவுகள் இன்றைய காலகட்டத்தில் வெறும் சிறுகதையாக இருக்கின்றன. ஒரு பத்து அல்லது இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நம் சமூகம் கூட்டுக் குடும்பத்தை பின்பற்றி வந்தது. காலப்போக்கில் உலகமயமாதலின் பல்வேறு விளைவுகளில் கூட்டுக் குடும்பங்கள் இன்று தனி குடும்பங்களாக மாறிவிட்டது. இதனால் இந்த இருபது ஆண்டுகளாக குடும்ப சூழலில் வாழ்ந்து வந்த குழந்தைகளுக்கு உறவுகளின் மகத்துவம் தெரியாமலே போய்விட்டது என்றும் கூட சொல்லலாம். அன்றைக்கு தனிக் குடும்பங்களில் வளர்ந்து, வாழ்ந்து வந்த குழந்தைகள் இன்று பெரியவர்களாக தங்களுக்கென ஒரு குடும்பத்தை தொடங்கிவிட்டார்கள். அவர்களுக்கு உறவுகளின் தேவையும் உறவுகளின் அவசியமும் புரியாது. இவர்கள் தங்களின் குழந்தைகளுக்கு தாங்கள் எப்படி வளர்ந்தார்களோ, அந்த ஒரு சூழ்நிலையையே கொடுப்பார்கள்.

 நான் என்னுடைய சிறுவயதில், ஆண்டு தேர்வு விடுமுறை நாட்களில் பெரியம்மா வீட்டிற்கு, தாத்தா வீட்டிற்கு, மாமா வீட்டிற்கு இப்படி சொந்த பந்தங்களின் வீட்டிற்கெல்லாம் சென்று வருவேன். நான் அந்த ஓராண்டில் பள்ளிக்கூடத்தில் கற்றுக் கொண்டதை விட, இந்த ஒரு மாதத்தில் என் சொந்த பந்தங்களின் வீட்டில் இருந்து வளர்ந்து கற்றுக்கொண்டது அதிகம் என்று கூட சொல்லலாம். பள்ளியில் எனக்கு, என் வாழ்க்கைக்கு தேவையான எந்த ஒரு விஷயத்தையும் பெரிதாக சொல்லிக் கொடுக்கவில்லை. வகுப்பில் நான் முதல் முதலில் அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டது- "பேசாதே" என்பதைத்தான் .

  வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போது அருகில் இருக்கும் நண்பனுடன் பேசினாலே ஆசிரியர் என்னை திட்டுவார். பேசாதே பேசினால் வகுப்பை விட்டு வெளியே அனுப்பி விடுவேன் என்று மிரட்டுவார். இதனால் என் சிறு வயதிலேயே என் மனதில் பதிந்து விட்டது. மற்றவருடன் பேசுவது தவறு அப்படி  பேசினால் நாம் தண்டிக்கப்பட்டு விடுவோம் இது நமக்கு அசிங்கத்தை கொடுக்கும் அதனால் நாம் எவருடனும் பேச வேண்டாம் என்கிற ஒரு முடிவு என் மனதில் பதிந்து விடுகிறது. இதுவே நான் ஊருக்கு விடுமுறை நாட்களில் செல்லும் பொழுது அங்கே கிராமத்தில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் நட்புடன் பழகுவார்கள். தெருவில் நடந்து செல்பவர் கூட யார் என்று எனக்குத் தெரியாது இருந்தாலும் அவர்கள் வீட்டிற்கு வந்து என்னிடம், 'தம்பி எப்ப வந்த எப்படி இருக்க நல்லா இருக்கியா ஊர்ல அம்மா அப்பா தங்கச்சி எல்லாம் நல்லா இருக்காங்களா ஏன் அவங்க வரலையா?' இந்த மாதிரி நலம் விசாரிச்சுட்டு போவாங்க. இது மாதிரி விஷயங்கள் முகம் தெரியாத, முன்பின் தெரியாத ஒருவருடன் பேசுவதற்கு எனக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது.

  நம் மனித சமூகமே ஒருவருடன் இன்னொருவர் தொடர்பில் இருப்பதில் தான் வளர்கிறது. ஆனால் நான் இன்னொருவருடன் தொடர்பில் இருப்பதை என் பள்ளிக்கூடம் சொல்லித் தரவில்லை. மாறாக நான் அவருடன் பேச கூடாது என்பது மட்டுமே எனக்கு வற்புறுத்தியது. அதுமட்டுமில்லாமல் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் பள்ளிக்கூடத்தை விட இந்த உறவுகளிடம் இருந்தும் வெளியில் இருந்துதான் கற்றுக் கொள்கிறேன் என்பதை 28 ஆண்டுகள் கழித்து இன்று நான் உணர்கிறேன். பள்ளிக்கூடத்தில் விளையாடுவதற்கு என்று வாரத்திற்கு இரண்டு வகுப்புகள் இருக்கும் வாரத்திற்கு அந்த இரண்டு வகுப்பிற்காக அனைவரும் காத்து கிடப்போம். மற்ற நேரங்களில் விளையாடுவதை பெற்றோர்களும் பொதுவாக விரும்புவதில்லை. விளையாடினால் படிப்பதற்கான நேரம் குறைந்துவிடும். படிக்கும் நேரம் குறைவு என்பதற்காகவே வெளியே விளையாட விடமாட்டார்கள். ஆனால் கிராமத்திற்கு சென்ற போது அங்கே அதிகம் விளையாடுவதற்கு நேரம் இருக்கும், புது புது நபர்களுடன் பழகுவதற்கு நேரம் இருக்கும், நல்லது கெட்டது என்ன என்பதை தெரிந்து கொள்ள நேரம் இருக்கும், இவை அனைத்திற்கும் வாய்ப்பு இருக்கும் .


  உறவுகள் நம் வளர்ச்சியை நிச்சயம் விரும்புவார்கள். நமக்கு நல்ல விஷயங்களையும் எவையெல்லாம் தேவையில்லை என்பதையும் சொல்லிக் கொடுப்பார்கள். சில விஷயங்களை பெற்றோர்களும் சொல்லிக்கொடுக்க மறந்துவிடும், மறுத்துவிடும் விஷயங்களை நமக்கு உறவுகள் சொல்லிக் கொடுப்பார்கள். அவர்களுக்கு அந்த உரிமை இருக்கிறது. நம்மை நல்வழிப்படுத்தும் பொறுப்பும் நம் உறவுகளுக்கு அப்போது கொடுத்திருந்தோம்.  கூட்டுக்குடும்பம் என்பதையும் தாண்டி தனி குடும்பங்களாக இருக்கும் பொழுதும் கூட உறவுகளுடன் ஒரு தொடர்பில் இருந்து வந்த காலம் அது. ஆனால் இன்று இருக்கும் பெரியவர்கள் அதாவது இருபது முப்பது வயதைக் கடந்த பெரியவர்களாகிய அந்த காலத்து குழந்தைகளுக்கு தங்கள் உறவுகளின் பெயர் கூட தெரியாது. அப்படி வளர்ந்து விட்டார்கள். உறவுகளின் அவசியம் அவர்களுக்கு எப்போது புரியும் என்று எனக்கு தெரியவில்லை. நம் சமூக கட்டமைப்பு மாறிவிட்டது. நாமும் அந்த மாற்றத்திற்கு ஒரு காரணம்தான் மாற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல மாற்றத்தை ஆதரித்தவர்களும் நாம் தான். யாரோ ஒரு சமூகம் என்று ஒரு சமூகத்தின் மீது பழியை போட்டுவிட்டு நாம் தப்பித்துக் கொள்வது நியாயமல்ல . அனைத்து பிழைகளுக்கும் நாமும் ஒரு காரணம் என்பதை உணர வேண்டும் . ஒரு செய்தியை படித்தேன். சீனாவில் இப்போது இருக்கும் 40 அல்லது 50 வயதை கடந்தவர்களுக்கு உறவுகள் என்று எவருமில்லை. தாய் மாமன், அத்தை, பெரியப்பா இந்த மாதிரி சொல்லிக்கொள்ள ஒரு உறவுகளும் இல்லை என்பதை படித்தேன். ஏனென்றால், சீனாவில் பல ஆண்டுகளாக இருந்து வந்த ஒரு குழந்தை என்கிற திட்டத்தால், சட்டத்தால் ஒரு பெற்றோர் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள, அதனால் அவர்களுக்கு அண்ணன் தம்பி அக்கா தங்கை அதுமட்டுமல்லாமல் மாமன் அத்தை பெரியம்மா பெரியப்பா சித்தப்பா சித்தி இதுபோன்ற எந்த ஒரு உறவுகளைப் பற்றியும் அவர்களுக்கு தெரியவில்லை. அவர்களின் பாசத்தை அவர்கள் உணரவில்லை. இது எவ்வளவு பெரிய கொடுமை தெரியுமா. நாம், நம் குடும்பம் என்பது, தாய் தந்தை மற்றும் நம்முடன் பிறந்த நம் ரத்த சொந்தம் இவை மட்டும்தான் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், இது ஒரு குடும்பம் ஆகிவிடாது. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பார்கள். ஒரு நான்கு பேர் ஐந்து பேர் சேர்ந்து ஒரு குடும்பம் ஆகிவிடாது. ஒட்டுமொத்த சொந்தங்களும் சேர்ந்ததுதான் ஒரு குடும்பம். அந்த ஒரு குடும்பமே பல்கலைக்கழகம் என அழைக்கப்படும். ஒரு பல்கலைக் கழகத்தில் பல்வேறு பிரிவுகள் இருக்கும் ஒவ்வொரு பிரிவிற்கும் ஒவ்வொரு சிறப்பு இருக்கும் அதேபோன்று நம் குடும்பத்தின் பல்வேறு உறவுகளில் ஒவ்வொரு உறவிற்கும் நிறைகள் குறைகள் அனைத்தும் இருக்கும்.


  குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்கிற ஒரு பழமொழியே நம்மிடம் உண்டு எத்தனை பேருக்கு தெரியும். ஒருவர் தவறு செய்துவிட்டால் அவர் உடனே நமக்கு வேண்டாம் என்றும் ஒதுக்கிவிடும் பழக்கம் தான் இருக்கிறது. உறவின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளத்தான் அந்த ஒரு பழமொழி நம்மிடையே சொல்லப்பட்டது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அனைத்து மனிதர்களுக்கும் நிறை குறை என்று இரண்டுமே இருக்கும். குறைகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால் எதையுமே சாதிக்க முடியாது. அதிலுள்ள நிறைகளையும் பார்க்க வேண்டும். அது போலத்தான் உறவுகள் செய்யும் தவறுகளை மட்டுமே நாம் பெரிதாக எண்ணினால் அவர்களின் நல்ல விஷயம் நம் கண்களுக்குத் தெரியாமல் போய்விடும்.


  உறவுகள் தொடர்கதையாக இருந்த காலம் போய் இன்று வெறும் சிறுகதையாக மாறிவிட்டது. இன்னும் சில காலத்திற்குள் இந்த உறவுகள் ஹைக்கூ கவிதையாக மாறும். இன்னும் உறவுகளின் அவசியம் சுருங்கிப்போகும், ஏன் உறவுகளே இல்லாமல் கூட போய்விடும் நிலை ஏற்படலாம். அதை தடுப்பது நம் கையில்தான் உள்ளது. உறவுகளுக்கு முக்கியத்துவத்தை கொடுப்போம் உறவுகளின் முக்கியத்துவத்தை நம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்போம் இந்த சமூகத்திற்கும் சொல்லிக் கொடுப்போம்.

* தினேஷ்மாயா *

மனிதனின் எதிர்கால வரலாறு

Tuesday, September 18, 2018

   


     நாம் இன்றைக்கு அகழ்வாராய்ச்சிகளின் மூலம் கண்டெடுக்கும் குறிப்புகளை வைத்து பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றியும், அவர்களின் சமூக கட்டமைப்பை பற்றியும் தெரிந்து கொள்ள முடிகிறது. அது மட்டுமன்றி அவர்களின் கலை, அரசியல், தெய்வ வழிபாடு, ஆட்சி முறை, அறிவியல் சார்ந்த அறிவு, தொழில்நுட்பம், இலக்கிய அறிவு இவற்றையும் தெரிந்து கொள்ள முடிகிறது.

   இது நம் முன்னோர்களின் வரலாறு. சரி, அது இருக்கட்டும், நம்மைப் பற்றிய நிகழ்கால குறிப்புகளை எதிர்காலத்தில் நம் சந்ததியினர் ஆராய்ந்தால் அவர்களுக்கு என்ன கிடைக்கும்? நம்மைப் பற்றிய குறிப்புகள் ஏதாவது கிடைக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அந்த காலத்தில் நம் முன்னோர்கள் கல்வெட்டுகளில், பாறைகளில்,  பானைகளில், ஓலைச்சுவடிகளில் இப்படி பல பொருட்களில் தங்கள் குறிப்புகளை விட்டு சென்றிருக்கிறார்கள்.

   நம் எதிர்கால வரலாறு என்னவாக இருக்கும் என்று எப்போதாவது கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்களா ?

   நம்மைப் பற்றி ஆராயும் எதிர்கால அகழ்வாராய்ச்சியாளர்களுக்கு நம்மைப் பற்றி குறிப்புகள் என்ன கிடைத்துவிடப் போகிறது? நாம் எழுதும் புத்தகங்கள் அனைத்தும் காகிதத்தில் பிரசுரிக்கப்படுகிறது. காலப்போக்கில் காகிதம் மழுங்கிவிடும். நம்முடைய அனைத்து தகவல் பரிமாற்றங்களும் இப்போது இணையதளம் மூலமாக நடந்து வருகிறது. ஒருவன் இன்னொருவனுடன் எப்படிப் பேசினான், இந்த சமூகத்தில் என்ன மாதிரியான ஏற்றத்தாழ்வுகள் இருந்தது, இந்த சமூகத்தில் பெண்களின் நிலை என்ன, இந்த சமூகத்தின் கட்டமைப்பு எவ்வாறு இருந்தது, இக்காலத்தில் அரசியல் எப்படி இருந்தது, இந்த அரசியலில் எது மாதிரியான சூழ்ச்சிகள், சாதனைகள் இருந்தது இது போன்ற எந்த ஒரு குறிப்புகளும் நம் எதிர்கால தலைமுறையினருக்கு விட்டு செல்ல முடியாது.

  ஏனென்றால் நம்மை பற்றிய அனைத்து குறிப்புகளும் தகவல்களும் இணையதளத்தில் மட்டுமே கிடைக்கிறது. இதைத்தவிர வேறு எங்கும் நம்மால் குறிப்புகளை விட்டு செல்ல முடியாது. அதற்கு எவரும் முயன்றதும் இல்லை. நம்மைப் பற்றிய குறிப்புகளை விட்டுச் செல்வதற்கு இங்கே எவருக்கும் விருப்பமில்லை அல்லது நேரமில்லை என்றும் கூறலாம். ஆனால் நம்முடைய முன்னோர்கள் தங்களின் அரிய நேரத்தை பயன்படுத்தி கல்வெட்டுகள் செதுக்கினார்கள் பாறைகளில் செதுக்கினார்கள் பானைகள் செய்து அவர்களின் வாழ்க்கை முறையை அதில் சொல்லி இருந்தார்கள். ஓலைச்சுவடிகள் மூலம் தங்களின் இலக்கியத்தை பறைசாற்றினார்கள். இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

    ஆனால் நாம் என்ன செய்கிறோம்? எதற்கெடுத்தாலும் ஒரு ஸ்மார்ட்போன் அதில் பல்லாயிரக்கணக்கான Apps இன்ஸ்டால் செய்துவிட்டு அதிலேயே நமது வாழ்க்கை முழுவதையும் ஓட்டிக் கொண்டிருக்கிறோம். அதுவும் நாம் பயன்படுத்தும் இந்த கணினி, செல்போன் இது போன்ற உபகரணங்கள் காலப்போக்கில் அழிந்து விடக்கூடியது. நாம் புதிதாக வாங்கிய செல்போன் இரண்டு மூன்று வருடங்களுக்கு மேலாக பயன்படுத்த முடியாத  நிலைக்கு தள்ளப்படுகிறது. அதாவது எந்த ஒரு மின்னனு சாதனமாக இருந்தாலும் அதிகபட்சம் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு மேலாக அதனால் பிழைக்க முடியாது. அப்படி இருக்கையில் நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு வரப்போகும் தலைமுறையினருக்கு நாம் நம்மை பற்றிய குறிப்புகளை எடுத்து செல்வோம்?

   இதைப்பற்றி இப்போது இருக்கும் வரலாற்று ஆய்வாளர்களும் சரி, அகழ்வாரய்ச்சி செய்பவர்களும் சரி, ஏன் நம் மக்களுக்கும் அதைப் பற்றி பெரிதாக கவலை ஒன்றும் இல்லை. வெறும் இணையத்தை மட்டுமே நம்பி நம் ஒட்டுமொத்த மனித சமூகத்தின் வரலாற்றை ஒப்படைத்து விட முடியுமா? அது நியாயம்தானா ?

* தினேஷ்மாயா *

கண்ணியம்



       பெண்களுக்கு கற்பு நெறி முக்கியம் என்று இந்த சமூகம் கருதுவது போல ஆண்களுக்கு கண்ணியம் மிக மிக முக்கியம் என்பதை இந்த சமூகம் ஆண்களுக்கு உணர்த்த வேண்டும் இதை ஆண்களும் உணர வேண்டும்.

       கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமே இருக்க வேண்டிய ஒரு நெறி அல்ல. அது ஆண்களுக்கும் கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு நெறி. பெண்கள் கற்புடன் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நாம், ஆண்கள் கண்ணியத்துடன் இருக்க வேண்டும் என்று எண்ணுவதில்லை.

    "ஜான் மகன் ஆனாலும் ஆண்மகன்" - இது மாதிரியான பழமொழிகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். ஆணாதிக்கத்தை சமூகத்தில் விதைத்து சென்ற நம் முன்னோர்களின் இதுபோன்ற சடங்குகளை பேச்சுகளை சம்பிரதாயங்களை பழமொழிகளை அறவே ஒழிக்க வேண்டும்.

           இன்றைய பெண்களுக்கு சமூகத்தில் ஒரு  சிறப்பான இடம் இருக்கிறது. ஆண்களுக்கு இணையாக அனைத்து துறைகளிலும் பெண்கள் தங்களின் திறமைகளை வெளிக்காட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும் ஒரு பெண் ஒரு நாட்டிற்கு குடியரசுத் தலைவர் அல்லது பிரதமராகவே ஆனாலும் அங்கேயும் அவர் ஒரு பெண் என்கிற வகையில் சில சங்கடங்களை கஷ்டங்களை எதிர்கொள்ள தான் செய்கிறார். ஒரு நாட்டின் தலைமைப் பதவிகளில் இருக்கும் பெண்களுக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண அரசு அலுவலகங்களிலும் தனியார் அலுவலகங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு ஏற்படும் இன்னல்களை எண்ணி பாருங்களேன் !

   ஒரு பெண் நம்முடன் பேருந்தில் பயணிக்கும் பொழுது முடிந்தவரை நாம் அவரை தொடாமலும் உரசாமல் இருப்பது நமது கண்ணியம். ஒரு தாய் தன் சேய்க்கு பாலூட்டும் போது நீங்கள் அருகில் இருந்தால் சற்று விலகி நிற்பது உங்களது கண்ணியம். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் நம் சக  பெண் ஊழியர்களிடம் காக்கவேண்டியது கண்ணியம். நட்புடன் பழகினாலும் அந்த உறவிலும் ஒரு கண்ணியத்தை காக்க வேண்டும். முதலில் நாம் ஆண்களுக்கு நடத்தையில் கண்ணியத்தை சொல்லிக் கொடுப்பதை விட அவர்களின் சிந்தனையில் கண்ணியத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும். எந்த ஒரு பெண்ணையும் தவறான கண்ணோட்டத்தோடு பார்க்க கூடாது என்கிற எண்ணத்தை விதைக்க வேண்டும். இந்த ஒரு கண்ணியத்தை ஒவ்வொரு ஆண்மகனின் மனதிலும் சிந்தனையிலும் விதைத்து விட்டால் பெரும்பாலான குற்றங்கள் சமூக அவலங்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் குறையும் என்பதில் கொஞ்சமும் ஐயம் இல்லை.

* தினேஷ்மாயா *

உலகப் பொருளாதார சீர்திருத்தம்


         அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு மட்டுமல்ல, பல வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் நாணயங்களும் தொடர்ச்சியாக டாலருக்கு நிகரான மதிப்பில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதற்கு காரணம் பல இருந்தாலும் அதற்கு முழுமுதற் காரணம் என்னவென்றால் உலக வர்த்தகம் அனைத்தும் பெரும்பான்மையாக அமெரிக்க டாலர்களிலேயே நடத்தப்படுகிறது. இந்த நிலையில்தான் அமெரிக்க டாலருக்கு அதிகமான தேவை ஏற்படுகிறது.

      எந்த ஒரு விஷயத்திற்கு தேவை அதிகமாக இருக்கிறதோ அதன் மதிப்பு அதிகமாக தான் இருக்கும். அதுபோலத்தான் அமெரிக்க டாலரின் மதிப்பு பல நாட்டு நாணயங்களை விடவும் சர்வதேச பொருளாதாரத்தில் அதிகமாக இருக்கிறது. இதற்கு ஒரு தீர்வு இருக்கிறது. அது என்னவென்றால், ஒவ்வொரு நாடும் தங்களின் வர்த்தகத்தை தங்கள் நாட்டின் நாணயத்தில் மேற்கொண்டால் அமெரிக்க டாலரை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இருக்காது.

    உதாரணமாக, நாம் சீனாவில் இருந்து ஒரு பொருளை இறக்குமதி செய்கிறோம் என்றால் அதற்கு அமெரிக்க டாலரில் நாம் பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. மாறாக, அதற்கு நம் இந்திய ரூபாய் மூலமாகவே பணம் செலுத்தலாம். இந்த நிலை வரும்போது அமெரிக்க டாலரை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஒவ்வொரு நாடும் தங்களின் அமெரிக்க டாலர் எவ்வளவு கையிருப்பு இருக்கிறது என்பதை மிக தீவிரமாக கவனித்து வருகின்றனர். ஏன் இந்தியாவில் கூட அந்நிய செலாவணி கையிருப்பு எவ்வளவு என்பதை தினமும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்நிய செலாவணி என்று சொல்லும் பொழுது இந்தியா அல்லது எந்த ஒரு நாடும் ஒரு ஆறு அல்லது ஏழு முக்கிய நாட்டின் நாணயங்களை தங்கள் கைவசம் வைத்துள்ளது. உலக வர்த்தகத்தில் பெரும்பான்மையாக ஏற்றுக்கொள்ளப்படும் சில நாடுகளின் நாணயங்களில் தான் வர்த்தகம் செய்கிறார்கள். அந்த நிலையை நாம் மாற்ற வேண்டும் .

    ஏனென்றால், இந்த நிலை அந்த குறிப்பிட்ட சில நாணயங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நாடுகளுக்கே உயர்வை தருகிறது வளர்ச்சியை தருகிறது ஏற்றத்தை தருகிறது. அந்த நாணயங்vகளை வர்த்தகம் பிற நாடுகளுக்கு பொருளாதார வீழ்ச்சியை மட்டுமே தருகிறது. உலக நாடுகள் அனைத்தும் ஒரு கூட்டமைப்பாக ஒன்றிணைந்து இதற்கு ஒரு தீர்வை காண வேண்டும். நாம் தென்னாப்பிரிக்காவில் இருந்து ஒரு பொருளை வாங்குகிறோம் என்றால் அதற்கு நாம் ஏன் அமெரிக்க டாலரில் பணம் செலுத்த வேண்டும்? மாறாக தென்னாப்பிரிக்காவில் என்ன நாணயம் பயன்படுத்துகிறார்களோ அந்த நாணயத்தை நம்மிடம் கையிருப்பாக வைத்திருந்து அதில் நாம் செலுத்தலாமே!? இப்படி செலுத்துவதால் நாம் அமெரிக்க டாலரை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இருக்காது. அதுபோல இந்தியாவின் ரூபாயை தென்னாபிரிக்காவும் அந்நிய செலாவணியாக வைத்திருந்து இந்தியாவில் எந்த ஒரு வர்த்தகத்தை மேற்கொண்டாலும் அதற்கு இந்திய ரூபாயில் பணம் செலுத்தலாம். இது போன்ற நாடுகள் அல்லது பல கூட்டமைப்பான நாடுகள் தங்களுக்கிடையே வர்த்தகம் செய்யும் பொழுது தங்கள் பரஸ்பர நாணயங்களை தங்களின் வர்த்தகத்திற்கு பயன்படுத்தினால் அமெரிக்க டாலரை நம்பியிருக்க வேண்டிய அவசியம் இருக்காது . அதுமட்டுமின்றி அமெரிக்க டாலருக்கு நிகரான தங்கள் நாணயத்தின் மதிப்பு வீழ்ந்தாலும் வளர்ச்சி அடைந்தாலும் அதனால் தங்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கும் எந்த ஒரு பாதிப்பும் இருக்காது என்பது என் கருத்து.

* தினேஷ்மாயா *

பெரியார்



பெரியார் இன்னமும் நம் சமூகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்பதற்கு பல உதாரணங்கள் சொல்லலாம்.


இன்றும் கூட பெரியார் சிலையை உடைக்கிறார்கள் அவர்  சிலை மீது காலணி வீசுகிறார்கள் என்றால் அது அவருடைய கொள்கைகளும் அவரும் இன்னும் நம்மிடையே வாழ்ந்து வருகிறார் என்பதற்கு ஒரு சான்று ஆகும். இதுபோன்ற தரம்கெட்ட செயல்களால் அவரின் புகழ் ஒன்றும் குறைந்துவிடாது மாறாக அவரின் புகழ் சமூகத்தில் அனைவரிடமும் சென்று சேர வழிவகுக்கிறது.

 நம் சமூகத்தோடு பின்னிப்பிணைந்திருக்கும் பெரியாரின் கருத்துக்களை யார் வந்தாலும் எவர் வந்தாலும் மாற்ற முடியாது மறுக்க முடியாது.

பெரியாரின் 140 ஆவது பிறந்தநாளில் அவரின் சமூகநீதி கொள்கைகளையும் அவரையும் வழங்குவதில் நான் கர்வம் கொள்கிறேன்.

பெரியார்
தோற்றம்: 17.09.1879
மறைவு: சமூக அவலங்கள் இருக்கும் வரை அவர் மறைய மாட்டார்.

தினேஷ்மாயா

சமூக போராளிகள்..

Saturday, August 25, 2018


இன்றைய சமூக போராளிகளை

வெறும் சமூக ஊடகங்களில் மட்டுமே

காணமுடிகிறது...

* தினேஷ்மாயா *

60 நிமிட குழந்தை

Tuesday, August 21, 2018


         பூமிக்கு வந்து 60 நிமிடங்கள் மட்டுமே ஆன மற்றுமொரு புதிய விருந்தினர் இந்த குழந்தை. இந்த பிஞ்சு குழந்தையின் கண்களில் அப்படியொரு அமைதி. இன்னும் 60 ஆண்டுகளுக்கு மேல் இப்பூமியில் ஓடி ஆடி நடமாடப்போகும் இவனுக்கு சக மனிதன் என்கிற முறையில் மனமார்ந்த வாழ்த்துகள் :-)

புகைப்படம் : இணையத்தில் இருந்து எடுத்தது. 

* தினேஷ்

தோழா தோழா


Ji, Bro, Boss.. நமக்கு அறிமுகம் இல்லாதவர்களை இந்த பெயர்களை சொல்லி அழைப்போம். இவை அந்நிய மொழிகளாக இருந்தாலும், அவை நமக்கு பரிச்சயமாகிவிட்டது.

ஆனால், நம்.தாய்மொழியாகிய தமிழில், "தோழர், தோழா, தோழரே, நண்பா" இப்படி அழைப்பதற்கு தயக்கம் காட்டுகிறோம்.

இதில் புது வதந்தி ஒன்று பரவி வருகிறது. ஒருமுறை அதிகம் பழக்கம் இல்லாத நபர் ஒருவரை தோழர் என்று அழைத்தேன். அதற்கு அவர் கேட்டார், ஜி, நீங்க ஏதோ இயக்கத்தில் இருக்கி மாதிரி பேசுறீங்களே என்றார். நான் அவருக்கு என்ன பதில் சொல்வது ?

தோழர் என்பது ஒரு அழகான தமிழ் சொல். அது சகோதரத்துவம் ஓங்க பயன்படுத்தும் சொல். அதை மக்கள் மனதில் எப்படி விதைக்கப்பட்டிருக்கிறது பாருங்கள் !?

சல்லிக்கட்டு போராட்டத்தின்போது, கோவை காவல்துறை உயரதிகாரி ஒருவர் இப்படி பேட்டியளித்தார். உங்களை யாராவது தோழர் என்று அழைத்தால் அவரிடமிருந்து விலகியிருக்க பாருங்கள். அவர் ஏதாவது இயக்கத்தை சேர்ந்தவராக இருக்கலாம்.

மக்களுக்கு பகுத்தறிவு புகட்ட உருவான "இயக்கங்கள்" தான் இன்று ஆட்சியில் இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. இயக்கம் என்பது தவறானது அல்லவே. தவறான நோக்கத்தில் இயங்குவதுதான் தவறானது.

என்ன தோழரே !

நான் சொல்வது சரிதானே !?

* தினேஷ்மாய்

படித்ததில் பிடித்தது

Thursday, August 09, 2018

அன்பும் கடன் மாதிரிதான் 

திருப்பி கொடுக்காத போதுதான் 

பிரச்சனையே..!

- படித்ததில் பிடித்தது

* தினேஷ்மாயா *

ஆதிராவிடன்



தி.மு.கழகத்தின் தலையாய தலைவர் டாக்டர்.கலைஞர்.கருணாநிதி ஐயா அவர்களின் மறைவு, திராவிடத்தின் கடைசி தூண் சரிந்து விழுந்ததற்கு சமம்.

இன்றுதான் திரு.ஞானராஜசேகரன் அவர்கள் இயக்கத்தில் திரு.சத்யராஜ் அவர்கள் நடிப்பில் வெளியான “பெரியார்” திரைப்படம் பார்த்து முடித்தேன். திராவிடத்தின் விதைகளை இம்மண்ணிலும், நம் மனதிலும் விதைத்தவர். சுயமரியாதை என்பதை நம் தமிழ் சமூகத்திற்கு எடுத்துக்காட்டாய் விளங்கி புரியவைத்தவர்

திராவிட கொள்கைகள் இன்று இருக்கும் அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டில் இல்லை. வெறும் கட்சி பெயர்களில் மட்டுமே இருக்கிறதென்பதை புரிந்துக்கொண்டேன். நம் சரித்திரத்தை படிக்க நான் விரும்புகிறேன். ஆதி திராவிடனைப்பற்றி, லெமூரியாப்பற்றி, பண்டைத்தமிழ் சமூகம்பற்றி, திராவிடத்தைப்பற்றி, திராவிடம் பேசிய தலைவர்கள் பற்றி, ஆங்கிலேயன் வந்தது முதல் போனது வரையான வரலாறுப்பற்றி, அன்றைய மற்றும் இன்றைய அரசியல் கட்சிகள் பற்றி, அன்றைய மற்றூம் இன்றைய சமூக கட்டமைப்பு பற்றி, இன்றைக்கு இன்னமும் இருக்கின்ற சமூக அவலங்கள் பற்றியெல்லாம் படித்து தெரிந்துக்கொள்ள விரும்புகிறேன். இவைகளைப்பற்றிய என் தேடலும், இதன்மூலம் கிடைக்கப்போகும் அறிவும் என்னுடனே நின்றுவிடாமல், என் சமூகத்திற்கு நிச்சயம் தாரைவார்ப்பேன். சமூகம் இன்னும் வளர, சமூகநீதி இன்னும் தழைத்தோங்க என்னால் இயன்றதை செய்யப்போகிறேன்.

* தினேஷ்மாயா *

My baby

Saturday, July 28, 2018

I thought it was my baby. I cared for it , loved it, took utmost care. It will run to me when sacred, cry to me when sad.... I thought it  Was my baby . I admired its innocence , loved its talks, believed its words....... I thought it was my baby...... It will make few mistakes and I will teach or correct it... Sometimes spank it ... All I wanted was the baby should have a good future... I wanted it to be happy .... I wanted to protect it.... Give all my love and happiness to it... When it was down with fever I hated god for the sufferings the baby was going through.... Yes now I hate the god to know that it is not my  baby..... It left once its parents came..... I thought it was mine... I showered love when no one loved it.. But now its parents want to love it so it went away with them...... It was my stupidity to think other's baby as mine.... The baby had love but there was no one to receive it ... When I received it and reciprocated triple fold....the baby said," I now knew what love is but I want it from my parents and not from you AFTERALL YOU ARE NOT MY MOTHER, I AM NOT YOUR BABY".
     
 Thank you baby for letting me know.

MY INSTINCTS

There is always a belief that our instinct knows what is going to happen in future.

நல்லவன்

நல்லவனாய் வாழ்வது

இக்காலத்தில்

பாவச்செயலே !

* தினேஷ்மாயா *

தனிமை

தனிமை வலி கொடுத்தாலும்

நிம்மதியையும் சேர்த்தே கொடுக்கும்..

* தினேஷ்மாயா *

உன்னால்..

உன்னுள் விழுந்ததால் பிறந்தேன்..

உன்னால் விழுந்ததால் இறந்தேன்..

* தினேஷ்மாயா *

வீழ்ச்சி

வீழ்த்திவிட்டாய்..

வீழ்ந்துவிட்டேன்..

* தினேஷ்மாயா *

நின்னை சரணடைந்தேன்

Friday, July 27, 2018



*தினேஷ்பூர்ணிஷா*

பக்தி ஆண்டுகள் தூரம்

Wednesday, May 23, 2018



இதுவே நின் திருவிளையாடல்..

இரண்டு ஆண்டிகளுக்கு பிறகுதான்

என் வேம்டுதல் உனக்கு கேட்டிருக்கிறது..

அப்படியானால்,

உனக்கும் எனக்குமான தூரம் இரண்டு பக்தி ஆண்டுகள்..

இனி நம்மிடையே இருக்கும் தூரத்தை குறைத்து

உன்னை என்னில் அடைக்கப்போகிறேன்.

என் பக்தியால்..

* தினேஷ்மாயா *

மானுட பதர்கள் !

   சமீபத்தில் இணையத்தில் உலாவரும்போது சில அரிய விஷயங்களை கண்டேன். உங்கள் வீட்டில் அதிக செல்வம் சேர வேண்டுமா - இந்த மந்திரத்தை சொல்லுங்கள். இந்த யந்திரத்தை பூசை செய்யுங்கள். இந்த இடத்தில் இந்த பொருளை வையுங்கள். பணத்தை ஈர்க்கும் அதிசய மூலிகை. பணம் உங்கள் பாக்கெட்டில் வந்து விழுந்துக்கொண்டே இருக்கும். நீங்கள் செய்ய வேண்டியது இது மட்டும்தான்....

இப்படி பல கவர்ச்சி வாசகங்களோடு பல வீடியோக்களை காண நேர்ந்தது. ஆக மொத்தம் ஒன்றை புரிந்துக்கொண்டேன். இதில் எவனும், உழைத்தால் பணம் வரும் என்று சொல்லவில்லை. குறுக்கு வழியில் உழைக்காமல் கோடீஸ்வரன் ஆவது எப்படி என்றே சிந்திக்கும் கூட்டம் அதிகமாகிவிட்டது என்பதை உணர முடிந்தது.

உழைப்பே உயர்வு..

உழைக்காமல் சேரும் செல்வம், சொல்லாமலே சென்றுவிடும்..

இந்த உண்மை நம் மானுட பதர்களுக்கு எப்போது புரியும் ?

* தினேஷ்மாயா *

Miss You Coimbatore. Byeeeeee

Tuesday, May 15, 2018



Bye Bye Coimbatore..

Miss you a lot..

Wait for my comeback..

Will come here with greater achievement sooonnnn :-)

* dhineshmaya *

WO(MAN)

Monday, May 14, 2018



Man - Basket of Logics & Reasons

Woman - Basket of Emotions & Feelings

* தினேஷ்மாயா *

அவளும் நானும்...

Thursday, May 03, 2018



இதுநாள்வரை என் வாழ்க்கை வேறுமாதிரி இருந்தது.. அவள் வந்தபிறகு என் வாழ்க்கையின் வானவில் காலம், வசந்த காலம் துவங்கிவிட்டது என்றே சொல்லலாம்.

ம்.. அடிக்கடி சண்டக்கோழியாய் மாறிடுவாள். பல நேரங்களில் சின்ன சண்டைகள். சில நேரங்களில் பெரிய சண்டைகள். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அவள் சண்டைப்போடும்போது நான் பெரும்பாலான நேரம் அமைதியாகவும்.பொறுமையாகவும் இருப்பேன். அவள் சண்டைப்போடும்போது அவளுடன் நானும் சண்டைப்போடுவதில்லை என்கிற காரணத்துக்காகவெல்லாம் சண்டை வரும். எவ்வளவு சண்டை வந்தாலும் அந்த சண்டைக்கு பிறகு சமாதானம் ஆவது சுவையாக இருக்கும்.

பல நேரங்களில் கொஞ்சுவாள். சில நேரங்களில் எரிமலையாய் பொங்குவாள். 
இரண்டுமே இரசிக்கும்படியாய் இருக்கும்..

அவள் தன் வாழ்நாளில் இதுவரை சமைக்காத பல உணவு வகைகளை எனக்காக முயற்சி செய்து சமைப்பாள். வித்தியாசமான உணவுகளையும் சமைப்பாள். இருப்பினும் அவளின் உணவுகள் அத்தனையும் வித்தியாசமாகவே இருக்கும் !

சுவற்றில் எங்கு பார்த்தாலும் அவளின் நெற்றிப்பொட்டுகள் வானத்தை நட்சத்திரங்கள் அலங்கரிப்பதுபோல் அலங்கரிக்கும்.

புதுப்புது சடங்குகள் சம்பிரதாயங்கள் சொல்லி கொடுப்பாள். கேள்வி கேட்டால், திட்டுதான் கிடைக்கும். விதண்டாவாதம் செய்யாமல் அதை கேட்டுக்கொள்வது சால சிறந்தது.

தியாகங்கள் நிறைய செய்து இருக்கிறாள், எனக்காக, இன்னமும் பல தியாகங்கள் செய்துக்கொண்டுதான் இருக்கிறாள்..

அவளின் செல்ல விளையாட்டில் நான் கட்டாயம் பங்கு பெறனும். இல்லாவிட்டால், குழந்தையை விட அதிகமாக அடம் பிடிப்பாள்.

இதுவரை எனக்கு தெரியாத பல விஷயங்களை தெளியப்படுத்தினால். அதில் சந்தேகம் கேட்டால், முதலில் சிறிய அடி கிடைக்கும் அப்புறம் விளக்கமும் கிடைக்கும்.

சாப்பாடு ஊட்டி விடுவது, எனக்கு விளையாட்டாய் அலங்காரம் செய்வது என என்னை தன் குழந்தையாகவே மாற்றிவிட்டாள்..

கொஞ்சம் சோம்பல், நிறைய வெகுளித்தனம், அதிக பேச்சு, அதீத சிந்தனை, எக்கச்சக்க குழந்தைத்தனம், ஏடாகூடமான சேஷ்டைகள், அப்பப்போ எட்டிப்பார்க்கும் திமிர், இப்படி ஏராளமாக சொல்லிக்கொண்டே போகலாம்.

அதிக பொறுப்புகளை தாங்கிக்கொண்டிருப்பதால், இங்கே பதிய நேரம் கிடைப்பதில்லை. இன்னும் இரு மாதங்களில் மீண்டு வருகிறேன் மீண்டும் வருகிறேன் இங்கே..

அப்போது அதிகம் பகிர்கிறேன் என்னவளைப்பற்றி.. ...

நன்றி..

* தினேஷ்பூர்ணிஷா *

Action



You have enough motivation..

Now its time..

Go.. Do it in Action !

* தினேஷ்மாயா *

இது ஒரு காதல் கதை !

Wednesday, March 14, 2018






























* தினேஷ்பூர்ணிஷா *