கொலை..

Sunday, December 12, 2010



ஒரு ரோஜாகூட

கொலை செய்யும் என்பதை,

உன்னைக்கண்ட பின்னரே உணர்ந்தேன்..

அன்புடன் 
 தினேஷ்மாயா 

நந்தலாலா...

Wednesday, December 08, 2010




நந்தலாலா


இத்திரைப்படத்தைப் பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை..

இது திரைப்படமே இல்லை.. திரையில் நமக்கெல்லாம் படம் காட்டாமல்,
பாடம் சொல்லியிருக்கிறார் இயக்குனர்...

இதுப்போன்ற திரைப்படத்தை நமக்கு தந்தமைக்காக படத்திற்காக பணியாற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி..

இசைஞானியின் இசையும், பிண்ணனி இசையும் மனதை வருடுகிறது..

மிஷ்கின் அவர்கள் தன் கதாப்பாத்திரத்தில் மிகவும் பொருந்தியுள்ளார்..

கதையில் வரும் அனைவரும் தங்கள் பாத்திரங்களை சரிவர செய்துள்ளனர்..

நான் படத்தை இங்கே விமர்சனம் செய்யவில்லை..

படத்தில் நான் ரசித்த சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.

நந்தலாலா

இந்த படம் முழுவதையுமே ரசித்தேன் நான்..

மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையை எனக்கு நன்றாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்.. அவர்களும் அன்பிற்காக ஏங்குவதை மிக அருமையாக பதிவு செய்திருக்கிறார்.

தாயின் பாசத்திற்க்காக ஏங்கும் சிறுவன் அவனைப் போல் இருக்கும் குழந்தைகளை ஒட்டுமொத்தமாக பிரதிபலித்திருக்கிறான்..

தாயைத் தேடி செல்லும் இரு பிஞ்சு உள்ளங்களின் பயணத்தில் சந்திக்கும் ஒவ்வொரு விஷயமும் உயிரை அப்படியே உருவி தன்வசம் வைத்துக் கொள்கிறது..

சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெண்ணிற்கு உதவி செய்ய சென்று, அந்த பெண்ணிடம் பலமுறை அடித்தும் “வலிக்குதா ?”  என்று அப்பாவியாய் கேட்பது ரொம்ப அருமை..

இளநீரை திருடிக்கொண்டு ஓடி, ஒரு தாத்தா இவர்களை துரத்திச் சென்று மயங்கி கீழே விழ, பின்னர் இவர்கள் அவருக்கு உதவி செய்யும் காட்சி அருமை...

இவர்களுக்கு வழி காட்டி உதவும் ஒரு ஊனமுற்றவரின் கொம்பு ஒரு சண்டையின் போது உடைந்துவிட, அவர் “ ஐயோ ! என் கால் போச்சே ! ” என்று கதறும்போது அரங்கமே மனதிற்குள் பதறியது.. அருமையான காட்சி..

இவர்களின் நிலையை அறிந்து இவர்கள் பயணத்தின் வரும் அனைவரும் இவர்களுக்கு உதவுவது மனிதர்கள் இன்னும் இவ்வுலகைவிட்டு செல்லவில்லை என்பதை எனக்கு எடுத்து சொல்லியது...

பாடல்கள் கதையோடு ஒன்றிவிட்டது.. ஒவ்வொரு பாட்டும் மனதை கனமாக்குகிறது.. இசைஞானியின் குரலில் வரும் இரண்டு பாடல்களும், ஒன்னுக்கொன்னு துணையிருக்கும் உலகத்திலே பாடல் கண்ணீரை வரவழைக்கிறது...

இது ஒரு படமாக இன்றி ஒரு பாடமாக நமக்கு எடுத்து சொல்லியிருக்கிறார்....


“உயிரே .. 
  உயிரே ..
  நந்தலாலா .. 
  என் உயிரை ..
  உன் கையில் எடுத்துக்கொண்டாய் ..
  இவ்வுலகை ..
  நன்றாக எடுத்துச்சொன்னாய் ..

என்றும் அன்புடன் ..


தினேஷ்மாயா

மின்னல் தாக்கியது..

Monday, December 06, 2010



மழைக்காலம்..

என்னவள் அவள் வீட்டைவிட்டு
வெளியே வந்து நின்றாள்..

நான் அவள் வீட்டை கடந்து சென்றேன்...

மறுநாள் செய்தி -


வாலிபரை மின்னல் தாக்கியது ! ! !



என்றும் அன்புடன் ..

தினேஷ்மாயா

படிப்பு...

Wednesday, November 24, 2010



நான் என்னவளின் மனதைப் படித்துக் கொண்டிருக்கிறேன்...

என்னவளோ,

தேர்விற்காக படித்துக் கொண்டிருக்கிறாள்... :)




என்றும் அன்புடன் ..
தினேஷ்மாயா

ஒரு கிலோ அரிசி, ஒரு ரூபாய் !!!



உங்கள் எல்லோருக்கும் தெரியும் நம் தமிழக அரசு, ஒரு கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்கு நியாய விலைக்கடை மூலமாக விநியோகம் செய்து வருகிறது என்று..

நீங்கள் எப்பவாச்சும் அந்த அரிசியை பார்த்திருக்கீங்களா. ஒரு முறை நான் ஒரு நியாய விலைக்கடைப் பக்கம் செல்ல நேர்ந்தது. அப்போது அங்கே அரசு அளிக்கும் ஒரு ரூபாய் அரிசியை விநியோகம் செய்துவந்தனர் ஊழியர்கள்.

அந்த அரிசியை வக்கீல் வண்டு முருகன் வீட்டில் இருந்து எடுத்து வந்து இருப்பார்கள் போல.. அரிசியில் பார்க்கும் இடமெல்லாம் வண்டுகள் அதிகம் இருந்தது. இந்த அரிசி எல்லாம் எங்கே இருந்து சார் கொண்டு வரீங்கனு கேட்டேன். அதெல்லாம் சொல்ல முடியாது, எங்களுக்கு குடோன்ல இருந்து வருது அவ்ளோதான் என்று ரொம்ப பொருப்பாக பதில் சொன்னார்.

யோவ் என்னாயா நினைச்சுட்டு இருக்கீங்க நீங்க.. மனுஷனுங்கதானா நீங்கெல்லாம்.. சாப்பிடுற சாப்பாட்டில வண்டு இருந்தா நீங்க சாப்பிடுவீங்களாயா. நீங்கனு நான் இங்க கேட்பது அரசியல் வியாதிகளையும், பொறுப்பற்ற அரசு அதிகாரிகளையும்.. ஏதோ தேர்தல் நேரத்தில் ஓட்டுக்களை அள்ள நினைத்து வாய்க்கு வந்த அறிக்கைகளையும் வாக்குறுதிகளையும் தந்துவிடுவது, தேவைப்பட்டால் அதை நிறைவேற்றுவீங்க, இல்லைனா அதை அப்படியே கிடப்பில் போட்டுடுவீங்க.

அவனுங்களை சொல்லி தப்பில்லை, அதை நம்பி ஓட்டுப்போடுறீங்களே உங்களைத்தான் திட்டனும், ரூம்போட்டு உதைக்கனும். எப்பயா நீங்களெல்லாம் திருந்துவீங்க. புத்தர் அமர்ந்த போதி மரத்தின் அடியில் போய்ட்டு உட்கார்ந்துட்டு வாங்க. அப்பவாச்சும் உங்களுக்கு ஞானம் பிறக்குதானு பார்ப்போம்..

நான் மேலே போட்டிருக்கும் புகைப்படம், அந்த நியாய விலைக்கடையில் வண்டுகள் நிறைந்த அரிசியை எடைப்போட்டு மக்களுக்கு விநியோகம் செய்கின்றனர்...

வாய் வலிக்க பேசும் அரசியல்வியாதிகளே, தயவு செய்து கொஞ்சம் மக்களையும் கவனியுங்க. வெறும் கருப்புப் பணத்தை பதுக்குவதிலேயே கவனமாய் இருக்காதீங்க...


என்றும் அன்புடன் ..
தினேஷ்மாயா