வேர் கிளை

Friday, November 22, 2019




நிலத்தில் நீரில்லாததால்

தன் தாகம் தீர்த்துக்கொள்ள

கிளைகளை வேர்களாய் மாற்றி

வானத்தை நோக்கி செல்கிறதோ

இம்மரம் ?!

* தினேஷ்மாயா *

மேரா நாம் அப்துல் ரஹ்மான்

Thursday, November 21, 2019




எண்ணத்தில் நலம் இருந்தால் இன்பமே எல்லோர்க்கும் !
அன்புள்ள தோழர்களே ! அஸ்ஸலாமு அலைக்கும் !

ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்
அவனே அப்துல் ரஹ்மானாம்
ஆண்டான் இல்லை அடிமை இல்லை
எனக்கு நானே எஜ்மானாம்
ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்
அவனே அப்துல் ரஹ்மானாம்
ஆண்டான் இல்லை அடிமை இல்லை
எனக்கு நானே எஜ்மானாம்
மேரா நாம் அப்துல் ரஹ்மான்..
மேரா நாம் அப்துல் ரஹ்மான்..
மேரா நாம் அப்துல் ரஹ்மான்..
மேரா நாம் அப்துல் ரஹ்மான்..

ஆடும் நேரத்தில் ஆடி பாடுங்கள்
ஆனாலும் உழைத்தே வாழுங்கள் !
ஆடும் நேரத்தில் ஆடி பாடுங்கள்
ஆனாலும் உழைத்தே வாழுங்கள் !
வாழ்வில் நாட்டம் ஓய்வில் ஆட்டம்
இரண்டும் உலகில் தேவை
ஆடும் போதும் நேர்மை வேண்டும்
என்றோர் கொள்கை தேவை
மேரா நாம் அப்துல் ரஹ்மான்..
மேரா நாம் அப்துல் ரஹ்மான்..
மேரா நாம் அப்துல் ரஹ்மான்..
மேரா நாம் அப்துல் ரஹ்மான்..

யாரும் அறியாமல் செய்யும் தவறென்று
ஏமாற்றும் நினைவை மாற்றுங்கள்
யாரும் அறியாமல் செய்யும் தவறென்று
ஏமாற்றும் நினைவை மாற்றுங்கள்
ஒன்றில் ஒன்றாய் எங்கும் நின்றான்
ஒருவன் அறிவான் எல்லாம்
காலம் பார்த்து நேரம் பார்த்து
அவனே தீர்ப்பு சொல்வான் !
மேரா நாம் அப்துல் ரஹ்மான்..
மேரா நாம் அப்துல் ரஹ்மான்..
மேரா நாம் அப்துல் ரஹ்மான்..
மேரா நாம் அப்துல் ரஹ்மான்..

உலகம் ஒன்றாக எதிரே நின்றாலும்
அஞ்சாமல் கருத்தை கூறுங்கள்
வந்தான் வாழ்ந்தான் போனான்
என்றா உலகம் நினைக்க வேண்டும் ?
சொன்னான் செய்தான் ! என்றே நாளும்
ஊரார் சொல்ல வேண்டும் !!!

ஒன்றே சொல்வான் நன்றே செய்வான்
அவனே அப்துல் ரஹ்மானாம்
ஆண்டான் இல்லை அடிமை இல்லை
எனக்கு நானே எஜ்மானாம் !
மேரா நாம் அப்துல் ரஹ்மான்
மேரா நாம் அப்துல் ரஹ்மான்
மேரா நாம் அப்துல் ரஹ்மான்
மேரா நாம் அப்துல் ரஹ்மான் !

படம்: சிரித்து வாழ வேண்டும்
இசை: மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.
வரிகள்: புலமைப்பித்தன்
பாடியவர்: டி.எம்.எஸ்.


* தினேஷ்மாயா *

சுதந்திர பறவைகள்

Saturday, November 16, 2019


        நேற்று சாலையில் வருகையில், ஒரு பள்ளிக்கூட பேருந்து ஒன்று என்னை கடந்து சென்றது. அது வேறொரு ஊரிலிருந்து இங்கே சுற்றுலா வந்திருக்கும் பேருந்து. அதெப்படி எனக்கு தெரியும் என்கிறீர்களா ? அந்த பேருந்தில் இருக்கும் மாணவர்கள் அனைவரும் ‘ஓ’வென கத்திக்கொண்டும், ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருந்ததை என்னால் காண முடிந்தது. அதை காண்கையில் எனக்கு ஒரு விஷயம் தோன்றியது. இது ஒன்றும் ஒழுங்கீனமான செயல் இல்லை. ஆனால், பள்ளியில் இவர்கள் இப்படி இருக்கமாட்டார்கள், மாறாக இதுபோல் சுற்றுலாக்களில் இவர்கள் அதிகம் துள்ளளோடு இருப்பார்கள். இதன் முக்கிய காரணம் என்னவென்றால், பள்ளியில் இவர்களை அடைத்து வைத்து, இவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறார்கள், இதுப்போன்ற தருணங்களில் மட்டுமே இவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள். இவர்கள் இப்படி செல்வதை சாலையில் செல்லும் மற்ற பயணிகள் இரசிப்பார்கள் என்று சொல்லிட முடியாது. இவர்களுடன் வரும் ஆசிரியர்களும் இவர்களை கட்டுப்படுத்த விரும்புவதில்லை. 

                     கூண்டில் அடைத்துவைக்கும் பறவைகள் திறந்துவிட்டால், வானில் சிறகடித்து சுதந்திரமாய் பறக்கத்தானே செய்யும் ! குழந்தைகளை, மாணவர்களை பள்ளிக்கூடம் என்னும் மனக்கூண்டில் அடைத்துவைத்து இரசிக்கும் இனமாக நாம் மாறிவிட்டோம் என்பதே நிதர்சனம்....

* தினேஷ்மாயா *
                   

கத்தியும் புத்தியும்

Thursday, November 14, 2019




- பகிர்ந்தது

* தினேஷ்மாயா *

அக்கறை

Tuesday, November 12, 2019



நண்பன் எடுத்துரைப்பான்

மனைவி இடித்துரைப்பாள்

இரண்டுமே நம்மீது இருக்கும் அக்கறையே

* தினேஷ்மாயா *

பெண்ணுக்காக..

Saturday, November 02, 2019



பெண்ணுக்காக அடித்துக்கொள்ள கூடாது என்பார்கள்.

ஆனால்,  நாங்கள் அடித்துக்கொள்கிறோம்.

நானுன் என் மனைவியும்!

எங்கள் பெண் குழந்தையை யார்

அதிகம் கொஞ்சுவது என்று ....

* தினேஷ்மாயா *

நம்பிக்கை மட்டுமே !


வாழ்க்கையில் நான் உடைந்து போகும் போதெல்லாம்

நம்பிக்கை மட்டுமே என்னை மீண்டும் மீண்டும் ஒட்ட வைக்கிறது..

* தினேஷ்மாயா *