என்ன கற்றோம் ?

Wednesday, December 30, 2015



    இவ்வுலகம் எத்தனையோ போர்களை கண்டிருக்கிறது. குருதி சொட்ட சொட்ட பல கோரமான போர்களைப் பற்றியெல்லாம் சரித்திரம் சொல்கிறது. இந்த போர்களில் இருந்தும், சரித்திரத்தில் இருந்தும் நாம் என்ன கற்றோம் ?

போர்கள் மீண்டும் மீண்டும் வருவதை பார்க்கையில், நாம் நமது சரித்திரத்தில் இருந்து எதையும் கற்கவில்லை என்பது தெளிவாகிறது. நம்மிடையே மனிதம் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்துவருவதையும் தெளிவாக காட்டுகிறது.

* தினேஷ்மாயா *

அதிகார வர்க்கத்தின் அடிமைகள் !

Monday, December 28, 2015



அரசு அதிகாரிகள்...

அதிகார வர்க்கத்தின் அடிமைகள் !

* தினேஷ்மாயா *

இறையருள்



  நான் செய்யும் தவறுகளுக்கு உடனுக்குடன் எனக்கு தண்டனைகள் கிடைக்கும்போதுதான் உணர்கிறேன், இறைவன் என்னுடனே இருக்கிறான் என்பதை..

* தினேஷ்மாயா *

முத்தம்

Sunday, December 20, 2015


தினமும் அதிகாலையில் 

உன்முகம் பார்த்தே நான் கண்விழிக்க வேண்டுமடி..

கண்ணில் ஒரு முத்தம்

கண்ணத்தில் ஒரு முத்தம்

இவற்றுடன் என் நாள் துவங்க வேண்டும்...

* தினேஷ்மாயா *

சொல்லி வையுங்கள்


யாராவது எங்காவது என்னவளைப் பார்த்தால் 

அவளிடம் சொல்லி வையுங்கள்..

அவளை நினைத்து இங்கே ஒருத்தன்

பித்து பிடித்தவன்போல் இருக்கிறான் என்று..

* தினேஷ்மாயா *

சம்மதம் மட்டும் போதும்



என்னடி யோசனை ?

நேற்று நான் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்லலாம் என்றா யோசிக்கிறாய் ?

அதிகம் யோசிக்காதே..

உன் சம்மதம் மட்டும் சொல் போதும்..

* தினேஷ்மாயா *

கள்வனின் காதலி


என் ராணியே..

என் மனம் கவர் கள்ளியே..

இந்த கள்வனின் காதலியே..

எங்கிருக்கிறாயோ நீ ?

* தினேஷ்மாயா *

நீதானே



உலகமே காதலுக்கு அர்த்தம் புரியாமல் திணறியபொழுது,

உன் மௌனத்தால் என் காதலுக்கு அர்த்தம் சொன்னவள் நீதானே !

* தினேஷ்மாயா *

காகித கப்பல்



மூழ்கும் என்று தெரிந்தாலும்

மழையில் காகித கப்பல் விடுவது

அலாதி இன்பம்தான்..

* தினேஷ்மாயா *

பள்ளிப் பருவ காதல்..


பள்ளிப் பருவ காதல்..

அவள் பெயரை வருகை பதிவேட்டில் யாருமறியா வண்ணம் திருட்டுத்தனமாய் பார்ப்பது..

அவள் அமரும் இடத்தில் யாரும் வருவதற்கு முன்னர் சென்று அமர்வது..

அவள் வரும் மிதிவண்டியின் அருகில் என் மிதிவண்டியை நிறுத்திவைப்பது..

அவள் பிறந்தநாளன்று நண்பர்களுக்கு நான் மிட்டாய் கொடுப்பது..

அவளிடம் தயங்கி தயங்கி பேசுவது..

அவள் இருக்கும்போது அவளின் நெருங்கிய தோழியிடம் வேண்டுமென்றே சண்டையிடுவது..

அவள் கடந்து செல்கையில், நண்பர்கள் என் பெயரை சத்தமாய் அழைக்க நான் அவர்களை அடிப்பது...

காதல் என்றால் என்னவென்றே தெரியாத வயதில் இதுதான் உலகின் புனிதமான காதல் என்று நினைப்பது..

வராத கவிதையை வரவைத்த் எழுத முனைவது..

பாட்டு போட்டியின்போது அவள் எங்கிருக்கிறாளோ அவளையே பார்த்துக்கொண்டு பாடுவது..

வேண்டுமென்றே அவளிடம் பேனா கடன் வாங்கி திருப்பி தராமல் இருப்பது..

அவள் அப்பா பெயரையும் அவள் வரும் இடத்தின் பெயரையும் எப்படியோ தெரிந்துக்கொண்டு YELLOW PAGES-ல் அவள் வீட்டு தொலைபேசி எண்ணை தேடுவது..

ஒருவழியாக அவள் வீட்டு தொலைபேசி எண்ணை கண்டுபிடித்து அடிக்கடி அழைத்து அவள் குரலுக்காக ஏங்கியிருப்பது..

இப்படி பள்ளிப் பருவ காதல் பல நீங்கா நினைவுகளோடும் அனைவர் மனதிலும் இன்னமும் இருக்கும் என்று நினைக்கிறேன்..

* தினேஷ்மாயா *

நீ என்னுள்


பேனா எடுத்தேன்..

உன்னை நினைத்து

ஏதேதோ கிறுக்கினேன்..

அப்போதுதான் உணர்ந்தேன்

நீ என்னுள் வந்துவிட்டதை..

* தினேஷ்மாயா *

காதல் கொண்டேன்



இயற்கையின் அனைத்து விதிகளுக்கும் அப்பாற்பட்டுதான்

நான் உன்மீது காதல் கொண்டேன்..

* தினேஷ்மாயா *

திகட்டாத காதல்



உயிர்கள் தோன்றி பல கோடி ஆண்டுகள் ஓடிவிட்டாலும்

இன்னமும் திகட்டாமல் இருப்பது காதல் மட்டும்தான்..

* தினேஷ்மாயா *

போடி..



போடி..

கவிதை எழுத நினைக்கும்பொழுதெல்லாம்

உன்னழகால் என் கவிதையையும் 

என்னையும் கொன்றுவிடுகிறாயடி..

* தினேஷ்மாயா *

விதியை மாற்று


விதியை கொஞ்சம் மாற்றி எழுதேன்..

உன்னை நினைக்கையில் கவிதை வருகிறது..

தூக்கம் போகிறது..

இனிமேல்,

உன்னை நினைக்கையில் தூக்கம் வரட்டும்..

அப்போதுதான் என் கனவில் நீ வருவாயடி..

அங்கே உனக்கான கவிதையை எழுதிக்கொள்கிறேன்..

* தினேஷ்மாயா *

பாக்கியம்


இது போதும் பெண்ணே..

நான் எப்போதும் உன்னருகில் இருந்து

உன்னை பார்த்துக்கொள்ளும் பாக்கியம்..

* தினேஷ்மாயா *

நீ வருவதால்..



மழையின்றி நனைகிறேன்

வானவில்லாய் நீ வருவதால்..

* தினேஷ்மாயா *

பூந்தென்றல்

+

அதிகாலை வீசும் பூந்தென்றல் நீ..

நீ எனை வருடி செல்லும்போது

இந்நாள் புதிதாய் உதயமாகிறது..

என் நாள் முடிவது உன்மடியில் தான்..

* தினேஷ்மாயா *

உதவுவோம்


  இரயிலில் விற்பனை செய்யும் மக்களிடம் எதாவது பொருட்களை வாங்குவோம். பிச்சை எடுக்காமல் சுயமாக உழைக்கும் இவர்களை ஊக்குவிப்போம் உதவுவோம்.

* தினேஷ்மாயா *

சம நீதி




   சட்டம் என்பது மக்களுக்காக இயற்றப்பட்டது என்றால், அந்த சட்டத்தை ஏன் மக்கள் புரிந்துக்கொள்ளும்படி இயற்றலாமே. மக்கள் எந்தவொரு சட்டப் பிரச்சனை என்றாலும் வழக்குறைஞர்களை நாட வேண்டி இருக்கிறது. அனைத்து சட்டங்களும் மக்களுக்கு புரியும்படி இருந்தால்தான் சட்டம் உண்மையாக மக்களுக்காக இயற்றப்பட்டது என்றாகுல் இல்லையென்றால் பணம் படைத்தவனும் மெத்த படித்தவனும்தான் சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு தனகேற்றது போல வளைத்துக்கொள்ள முடியும்...

* தினேஷ்மாயா *

My Lord



    பெரும்பாலும் உலகெங்கிலும் இருக்கும் நீதிமன்றங்களில் நீதிபதிகளை "MY LORD" என்று அழைக்கும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது. சட்டம் என்பது அனைவருக்கும் சமமானதே. தீர்ப்பை வழங்கும் ஒரே காரணத்தால் நீதிபதிகளை கடவுளுக்கு இணையாக வைத்து கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்வது ?

* தினேஷ்மாயா *

அகராதி

Saturday, November 14, 2015


என் வாழ்க்கைக்கான அகராதி நீ..

என் வாழ்க்கைக்கான அர்த்தம் நீ..

* தினேஷ்மாயா *

விடுகதைதான்..


உன் பார்வை எப்பொதும் எனக்கு

விடுகதைதான்..

எவ்வளவு சிந்தித்தாலும்

விடை கிடைப்பதேயில்லை..

* தினேஷ்மாயா *

கணக்கு


கணக்கில் வைத்துக்கொண்டுதான் இருக்கிறேன்..

நீ என்னை உன் கண்களால் எத்தனைமுறை

தாக்கினாய் என்பதை...

நம் திருமணத்திற்குப் பிறகு

எப்படி திருப்பிக்கொடுக்கிறேன் என்று மட்டும் பார்...

* தினேஷ்மாயா *

சிலநெரங்களில்..


சிலநெரங்களில்..

இசை என்னை ஆட்கொள்வதுபோல

நீ கூட என்ன ஆட்கொண்டதில்லையடி..

* தினேஷ்மாயா *

காதல் ரேகை


ஜோதிடம் பார்க்கும் இடத்தில் சொன்னார்கள்..

எனக்கு ஆயுள் ரேகை நீளம் என்று...

அதெல்லாம் இருக்கட்டும் -

காதல் ரேகை எவ்வளவு நீளம் என்று கேட்டுவைத்தேன் நான்..

* தினேஷ்மாயா *

உன்னிடமே விட்டுவிட்டேன்..


என் ஆசைகள் அனைத்தையும்

உன்னிடம் கொட்டித்தீர்த்துவிட்டேன்..

இனி அவற்றை என்ன செய்யவேண்டுமோ

அதை உன்னிடமே விட்டுவிட்டேன்..

* தினேஷ்மாயா *

எனக்கென்ன ?



எனக்கு மகிழ்ச்சி தரும் செயல்களை

பிறருக்கு மனவருத்தமின்றி நான் செய்யும்வரை

யார் என்ன சொன்னால் எனக்கென்ன ?

* தினேஷ்மாயா *

உனக்காக மட்டும்


இந்த வாழ்க்கை உன்னுடையது..

இந்த உலகம் உனக்கானதுதான்..

ஆனால், உன் வாழ்க்கையை

உனக்காக மட்டும் வாழ்ந்துவிட்டு செத்துப்போகாதே..

பிறர்காகவும் வாழ்..

* தினேஷ்மாயா *

வார்த்தை ஜாலம்


ஊற்றாய் பெருக்கெடுத்தாலும்

சொட்டு சொட்டாய்தான் வருகிறது

என் கவிதைக்கான வார்த்தைகள்...

உன் கண்கள்தான் அதில் பாதியை

பறித்துக்கொள்கிறதே !!

* தினேஷ்மாயா *

மர்ம முடிச்சுகள்


வாழ்க்கையின் மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படும்போது,

எவர்க்கும் புரியாத இரகசியங்கள் வெளிவரும்...

* தினேஷ்மாயா *

உணவு

Inline images 1




நாம் உணவை உண்கிறோம் என்பதைவிட

உணவு நம்மை உண்கிறது என்பதே நிதர்சனமான உண்மை..

* தினேஷ்மாயா *

குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்..


நேற்றைய குழந்தைகளான இன்றைய இளைஞர்களுக்கும்

நாளைய இளைஞர்களான இன்றைய குழந்தைகளுக்கும்

என் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்..

* தினேஷ்மாயா *

வண்ணங்கள்

Friday, November 13, 2015


பற்பல வண்ணங்கள்

என்னுள்

பற்பல எண்ணங்களை

அவ்வப்போது தூவிவிட்டு செல்கின்றன

* தினேஷ்மாயா *

போதவில்லை


என் செல்ல மகளை கொஞ்ச 24 மணிநேரம் போதவில்லை..

நாம் வெள்ளி கிரகத்திற்கு குடியேறிவிடுவோமா மனைவியே ?

* தினேஷ்மாயா *

வீரமும் அச்சமும்


வீரத்தமிழனின் புகைப்படத்தை பகிர்ந்துக்கொள்ள

இங்கு பல தமிழக இளைஞர்கள் ஏனோ அஞ்சுகின்றனர்..

* தினேஷ்மாயா *

உன்னை அணைக்க


விளக்கை அணைப்பது

உன்னை அணைக்க..

* தினேஷ்மாயா *

இரகசியம்


பூட்டிவைத்த இரகசியம் அனைத்தும்

ஒருநாள் வெளிவரும்..

இதுவே இரகசியத்தின் இரகசியம்..

* தினேஷ்மாயா *

மறதி


அன்றாட வாழ்க்கை

நமக்கு நிறைய கற்றுக்கொடுத்தாலும்

நாம் அதில் பெரும்பாதியை

மறந்தேபோகிறோம்..

* தினேஷ்மாயா *

வஞ்சகம்


வஞ்சகமான உலகில்

அப்பாவியாய் வாழ்வது

சோதனையும் கூட சாதனையும் கூட..

* தினேஷ்மாயா *

விதை


காற்றின் வேகத்தில் நான் ஆடலாம், சாயலாம், மரித்தும் போகலாம்..

என் விதையை விட்டுத்தான் செல்கிறேன்..

* தினேஷ்மாயா *

திகட்டாத ஒன்று


உயிரினங்கள் தோன்றி எத்தனை ஆண்டுகள் உருண்டோடினாலும் -

என்றைக்குமே திகட்டாத ஒன்று உண்டென்றால், அது

காதல் காதல் காதல்....

* தினேஷ்மாயா *

மச்சி


எங்கள் நட்பைப் பற்றி

கவிதை ஒன்றை எழுத சொன்னான் நண்பன்..

“மச்சி...

நம் நட்பே ஒரு கவிதை தானே ?!”

* தினேஷ்மாயா *

கொள்ளை


அனைவருக்கும் சரிசமமாகத்தான்

இயற்கை கொடுத்திருக்கிறது..

அனைத்து உயிர்களும் தத்தம் தேவைக்கு

வளங்களை எடுத்துக்கொண்டிருக்க -

மனிதன் மட்டும்

கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறான்..

* தினேஷ்மாயா *

யுக்தி


போரில் வென்றிட தடுக்க பல யுக்திகள் ...

அமைதியை நிலைநாட்ட ஒன்றுகூட இல்லை...

* தினேஷ்மாயா *

தனித்தீவு


காதலர்கள் காதலிக்க

தனித்தீவு தேவயில்லை..

இரு காதலர்கள் ஒன்றிணைந்தால்

அவர்களே தனித்தீவுதான்..

* தினேஷ்மாயா *

மிடாஸ்


மிடாஸ் மன்னன் தொட்டதெல்லாம் பொன் ஆகுமாம்.

ஆனால் -

நான் பார்ப்பதெல்லாம் நீ ஆகிறதே ...

* தினேஷ்மாயா *

உன் மனம்

Thursday, November 12, 2015


என் மனம் இரும்புதான்..

ஆனால் -

உன் மனம்தான் காந்தமாயிற்றே !

* தினேஷ்மாயா *

மண்வாசமும் உன்வாசமும்



மழையின்போது மண்வாசமும்

மழை இல்லாத போது உன்வாசமும்

என்னை அதிகம் ஈர்க்கின்றன...

* தினேஷ்மாயா *

காத்திருக்க வேண்டியதில்லை..


உனக்காக கவிதை எழுத முனையும்பொழுதெல்லாம்

வார்த்தை வர நான் காத்திருக்க வேண்டியதில்லை..

உன் கண்கள் தான் எனக்கு வார்த்தைகளை

அள்ளித்தந்துக்கொண்டே இருக்கிறதே..

* தினேஷ்மாயா *