Need of the Hour

Sunday, December 20, 2020


 Hey All...

I just wanted to post as much number of posts in 2020 as I did in the year 2019. 

Last year I have tried to made 138 posts. 

This year this is my 139th post.

(Wow. Somehow am progressing and not settling for the low).

Will be back by next year with much more interesting posts (which I have already noted down, but no time to pen it down).

Happy New Year All..

HOPE.. is the fuel for LIFE.. 

Be Positive. Better days are coming.......

Stay Happy...

Love You All..

See ya soonnnnn .... 

* DhineshMaya* 

My Thoughts about book reading

 



* DhineshMaya* 

உயிர் என்ற ஒன்று

 உடலுக்குள்ளே ஒளிந்திருக்கும் உயிரின் நிறம் என்ன?

அதன் வடிவம் என்ன?

அது அழகாக இருக்குமா ? 

அது அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்குமா? 

இல்லை வேறுபடுமா? 

பிரிந்த உயிர் எங்கே போகிறது? 

உயிர் என்ற ஒன்று உண்மையாகவே இருக்கிறதா? 

 எங்கே அது இருக்கிறது? 

அதன் அளவு என்ன?

*தினேஷ்மாயா *

கடவுள்

 தேசமெலாம் அலைந்து திரிந்து தேடி கண்டுக் கொண்டேன். தேகத்தினுள்தான் அவன் குடிக்கொண்டு இருக்கிறான் என்பதை. 

என் உள்ளொளி பேரொளியாய் இருக்க, புற இருள் என்செய்யும்??

கட உள்ளத்தை. அங்கே உள்ளான் உன் 

கடவுள்

*தினேஷ்மாயா *

உன் கடமை

 

நீ தீக்குச்சி

உன்னை உரசி பற்ற வைக்கும் ஒரு சிறு கருவியே ஆன்மீகம், மதம், கடவுள் இவையெல்லாம்.

உரசிய பிறகு பிரகாசிக்க வேண்டியது உன் ஒருவனின் கடமை மட்டுமே.

*தினேஷ்மாயா *

மனத்திருப்தி


 

கல்லுக்கு ஊற்றுவதை ஏன் ஏழைகளுக்கு கொடுக்கக்கூடாது என கேட்கிறோம். ஆனால், சமூக ஊடகங்களில் பதிவிடும் அறிவுள்ள நாம், கல்லாதவர்களை நாடிச்சென்று அவர்களுக்கு எழுத்தறிவு புகட்டலாமே ?

ஆத்திகமோ நாத்திகமோ, எதுவாக வேண்டுமானாலும் இரு.

அதற்கு முன், மனிதனாய் இரு. அவனவன் மனத்திருப்தி அவனவனுக்கு...

*தினேஷ்மாயா *

Random Thoughts 7.86


 

Random Thoughts - 2.0

உடலை எரிக்கையில் உயிரும் எரியுமோ ?

உடலோடு சேர்ந்து உயிரும் வளருமோ?

வலி என்பது உடலுக்குத்தானே. உயிருக்கும் வலிக்குமோ?

உயிர் உருவானபோது வலித்ததா? தெரியாது.. 

உயிர் பிரியும்போது வலிக்குமா? அதுவும் தெரியாது. உயிர் நீங்கிய எவரும் வந்து சொன்னதில்லை அவ்வுண்மையை.

* தினேஷ்மாயா *

Random Thoughts


 * தினேஷ்மாயா *


மு. வரதராசன்

 


* தினேஷ்மாயா *

Insomniac Thoughts - 1


 * தினேஷ்மாயா *

அன்புமழை

 

கவலை இல்லாமலும் 

கண்ணீர் வருமாப்போலே, 

மழைகளில்லாமலும் 

இவள் குடைகொண்டு நடக்கிறாள்.  

என் அன்புமழை பிடித்திலையோ ?

* தினேஷ்மாயா *

திருநங்கைகளின் குரல்



 “என்ன பெயர் 

சொல்லி வேண்டுமானாலும்

எங்களைக் கூப்பிடுங்கள்

மனிதநேயம் ம(றை)றந்த

மனிதர்களே

என்னவோ போல் மட்டும்

எங்களைப் பார்க்காதீர்கள்..”

- ஆஷாபாரதி

சமீபத்தில் நான் படித்த ஒரு புதுக்கவிதை இது. படித்த அந்நொடியே என்னை கவர்ந்தது. குரலற்றவர்களின் குரலாக ஒலிக்கும் இந்த கவிதை, விளிம்புநிலை மாந்தகளான திருநங்கைகளின் உள்ளத்து உணர்வை நமக்கு திரையிட்டுக் காட்டுகிறது. அவர்களும் சமூகத்தில் சமமாக நடத்தப்பட வேண்டியவர்களே. இயற்கை செய்த பிழைக்கு, அவர்களுக்கு தண்டனை கொடுப்பது என்ன நியாயம்?


* தினேஷ்மாயா *

என்னுயிர் நீ தானே

Wednesday, November 11, 2020



* தினேஷ்மாயா *

குறள் வெண்பா - 8

Friday, November 06, 2020

 

வேல்யாத்திரை சென்றும் பயனில்லை வேலவன்

குறவர்மருகன் என்பதை ஏற்காதபோழ்து..

- தினேஷ்மாயா


மெய்ம்மயக்கம் !!

 

“க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் “

வேறொன்றுமில்லை

அவளைக்கண்டு 

மெய்ம்மறந்தேனோ என்று 

சுயபரிசோதனை செய்துக்கொண்டேன் !!

* தினேஷ்மாயா *

குறள் வெண்பா - 7

Thursday, November 05, 2020

 

மரணிக்க எவரும் தயாரில்லை இக்கனமே

மரணிக்க வல்லான் ஞானி..

* தினேஷ்மாயா *


குறள் வெண்பா - 6

 

காதல் காமமாய் மாறுகையில் உணரலாம்

மனிதன் விலங்கின் மிச்சம்..


* தினேஷ்மாயா *

குறள் வெண்பா - 5

 

அன்பே அனைத்திற்கும் ஆதாரம் ஆகையால்

அதனுள் நீமூழ்கிப் போ.


* தினேஷ்மாயா *

குறள் வெண்பா -4

Wednesday, November 04, 2020

 

இரவில் உறக்கமின்றி தொலைப்பேசியில் மூழ்கியோர்க்கு
ஆயுள்குறைவாம் அறிவியலாளர்கள் கண்டவுண்மை..

- தினேஷ்மாயா

குறள் வெண்பா -3

 


இறையென மறையெனயேதும் தேவையில்லை அறமே தன்

வாழ்வின் நோக்காய் கொண்டவர்க்கு..

* தினேஷ்மாயா *

மணமேடை ஏறினாள்


 மனதினுள் காதலுடன்

ஆழ்மனதில் கவலையுடன்

புறத்தே புன்னகையுடன்

கழுத்தில் மாலையுடன்

கைகூடாக் காதலின் பாரத்தோடு

குடும்ப மானமெனும் பாரமும் ஏற்றி

மணமேடை ஏறினாள்

மாதொருத்தி !!

* தினேஷ்மாயா *

குறள் வெண்பா - 2


“ கனவே கனவாய் மாறிடா வண்ணம்
   எண்ணம் கொண்டு விரைந்தெழு”

* தினேஷ்மாயா *

குறள் வெண்பா

 


திடிரென ஒரு ஆசை வந்தது. குறள் வெண்பா வடிவில் கவிதை எழுத முயற்சி செய்யலாமே என்று.

தொல்காப்பியர் வகுத்த இலக்கணத்தை மனதில் வைத்துக்கொண்டு எழுத இப்போதைக்கு முடியாது. அதை கைவர கற்கவில்லை யான் இன்னும்.

புதுக்கவிதை வடிவில் குறள் வெண்பா என் முதல் முயற்சி - இதோ 

“ இமையாள் மைவிழியாள் என்னவள் நிகராகமாட்டாள்
   உமையாள் என்னவள் பேரழகின்முன்”

* தினேஷ்மாயா *

Random Thoughts

Saturday, October 31, 2020

 


Yes. I'm here to share my random thoughts.

I design my thoughts. My thoughts design my life..

Just because my thoughts are random, doesn't mean that my life is random.

Random thoughts are channelized and focused well to create a meaningful vision. That vision leads me.

I make mistakes.

Either in my thoughts, or in its improper/ineffective implementation. But my life is never a mistake.

It always surprises me each and every second.

Everything that happens in life has a purpose. But don't worry. You will never understand that purpose, unless you learnt the lessons the life taught you previously.

I've stated learning the lessons of life, slowly and steadily. Now I can talk to my life, I can design my life and I can change my life.

Yes. When you orient your frequency with that of the universe/life, everything is possible. Owning a Ferrari sometimes won't give you happiness but helping a tiny creature like ant in saving its life from the glass of water you are about to drink, will give you greater happiness.

Purpose of life is not independent living. It lies in interdependence and living for others. Be happy at whatever moment comes to you in life. After all, this moment shall pass by. Either happiness or sad. Why worry. Just live.

Life is noun, live is verb. Living is continuous.

Yes.. This amazing life is also a continuous one.

P.S.: Don't expect any special note from this post. These are just random thoughts..

* தினேஷ்மாயா *

ஒரு கதை சொல்லட்டுமா ?

Friday, October 30, 2020


இலட்சத்தில் ஒருவனாகி, 

பின்

பத்தாயிரத்தில் ஒருவனாகி,

பின்

மூவாயிரத்தில் ஒருவனாகி,

பின்

ஆயிரத்தில் ஒருவனாக

மாறியவனின் கதையை

உங்களுக்கு சொல்லட்டுமா ?!

அவன் கதையை எழுதிக்கொண்டிருக்கிறேன்.. இது மிகப்பெரிய உழைப்பு, பல ஆராய்ச்சிகள், சுய கேள்விகள், திருத்தங்கள், தடைகள் இவற்றையெல்லாம் கடந்து அந்த கதையை எழுத ஆரம்பித்துவிட்டேன். அந்த கதை முடிந்ததும் இங்கே உங்களுடன் பகிர்கிறேன்.

நன்றி

* தினேஷ்மாயா *


மார்கழி பூவே

Friday, September 11, 2020



 

மார்கழி மாதத்தில்


வாசலில் கோலமிட்டு


மார்கழி பூவை வைப்பார்கள்...


ஆனால் இங்கோ - தரையில்


பாவை ஒருத்தி


பூவாய் பூத்திருக்கிறாள்...


* தினேஷ்மாயா *

எண்ணத்துப்பூச்சி



வண்ணங்களை பூசியதால் நீ


வண்ணத்துப்பூச்சியானாய்..


உன் எண்ணங்களை பூசியதால் நான் 


எண்ணத்துப்பூச்சியானேன்..


* தினேஷ்மாயா *

தொலைந்தேன்


 என் விடலையில்


உன்னுள் தொலைந்து


காதலை இரசித்தேன்..


முப்பதுகளின் தொடக்கத்தில்


என்னுள்ளேயே தொலைந்து


வாழ்க்கையை இரசிக்கிறேன்..


* தினேஷ்மாயா *

தேசாந்திரி


தேசாந்திரியாய்


திரிய ஆசை...


இருக்கிறேன் இங்கே


கடமையாற்றியும்


கட்டுண்டும் !!


* தினேஷ்மாயா *

பாலைவனச்சோலை

Thursday, September 10, 2020


 

பாலைவனமான என் வாழ்வில் வந்த


சொலையம்மா நீ !!


* தினேஷ்மாயா *

கொழுசு


 

சிலம்பினால் அறியப்பட்டவள் கண்ணகி


கொழுசால் அறியப்படுபவள் என் காதலி..


* தினேஷ்மாயா *

அவள் கொலுசு


 

நடந்துவரும் அவளை மிதந்துவர வைக்கும்..


தொலைவில் வருகையிலேயே அவள் -


வரவை தெரியப்படுத்தும்... 


ஊடலின் போது - சலசலப்பும்


கூடலின் போது - சிலுசிலுப்பும் !!


* தினேஷ்மாயா *

தேவதைகளின் தேவதை


 

பேதை


பெதும்பை


மங்கை


மடந்தை


அரிவை


தெரிவை


பேரிளம்பெண்..


சங்க இலக்கியங்களில் பெண்களை இந்த ஏழு வகையினுள் அடைத்துவிடுவார்கள்.


ஆனால், எந்த வகையிலும் அடைக்கமுடியாத


தேவதைகளின் தேவதை என்னவள் !!


* தினேஷ்மாயா *

வித்தகன்


 

கடலில் மூழ்கி முத்தெடுக்கும் 


வித்தை அறிகிலேன்..


ஆனால் - உன்னுள் மூழ்கி


முத்தங்கள் எடுக்கும் வித்தையை


நன்கறிவேன்..


* தினேஷ்மாயா *

கருங்கடல்


 

நீலக்கடல்


அவள் கடலலையினில்


காலை நனைத்தப்பின்


கருங்கடலாய் 


நிற மாற்றம் கொண்டது..


* தினேஷ்மாயா *


அமைதி


 

புயலுக்கு பின் அமைதியாம்


நான் - புயலிலேயே அமைதி காண்கிறேன்..


என் காதல் புயலாய் வீச


உன் கண்கள் அமைதியாய்...


* தினேஷ்மாயா *

மகிழ்ந்திருப்போம்...


நான் வெளிவிடும் மூச்சுக்காற்றை நீ சுவாசித்து 


அதை நீ வெளியிட்டப்பின் நான்  மீண்டும் சுவாசித்து


குளிர் காற்றை வெப்பமாக்கும் இந்த கூடலில்


மெய்மறந்து மேல் சாய்ந்து


மகிழ்ந்திருப்போம்...


* தினேஷ்மாயா *

பெரிய பெரிய ஆசை

Sunday, September 06, 2020


காற்றைப் போல


எல்லைகள் கடந்து


உலகை சுற்றி வர பேராசை !


* தினேஷ்மாயா *

காதலில் விழுந்தேன்


அவள் பார்வையை அனுப்பி


தன் கண்கள் எனும் சிறையில்


அடைக்கப் பார்க்கிறாள்..


தப்பிக்க நினைத்து


அவள் காதலில் விழுந்துவிட்டேன்..


* தினேஷ்மாயா *

எல்லாம் சுகமே


 தூக்கில் தொங்குவதும்


சுகமே..


எப்போது உன்னை உரசும்


உன் தோடுகளுக்கு..


* தினேஷ்மாயா *

வயலில் வயலின்


 

நீ வயலின் வாசிப்பதால் 


இசை பிறக்கவில்லை...


அந்த வயலின் நடுவே 


ஒய்யாரமாய் வீற்றிருக்கும்


பொன்சிலையான உன்னை


வருடி செல்லும் கோடைக்காற்றே


இசையாய் பிரதிபலிக்கிறது !!


* தினேஷ்மாயா *

ராதே ராதே !!


 

காத்திருப்பு 


தவிப்பு அல்ல


அது ஒரு 


தவம்...


எனக்கு ராதை உணர்த்திய பாடம் !!

* தினேஷ்மாயா *

கண் பேசும் வார்த்தைகள்


 ஆம்..


கண்கள் பேசும் வார்த்தைகள்


புரிவதில்லைதான்..


எனக்கு அதன் அர்த்தங்கள் வேண்டாம்..


எனை மயக்கும் பேரழகே போதுமே..


* தினேஷ்மாயா *

கொள்ளையடித்தாய்.


 மனதைக் கொள்ளையடித்தாய் சரி


ஆனால் - ஏன் 


உன் முகத்திற்கு வெள்ளையடித்தாய் ?


* தினேஷ்மாயா *

ஒரு விநோதமான சிந்தனை

Friday, September 04, 2020


 

இன்று மதியம் வீட்டு பால்கனியில் நின்று காற்று வாங்கிக்கொண்டிருந்தேன்.

அப்போது ஒரு விசித்திரமான, விநோதமான சிந்தனை வந்து மறைந்தது.

இறக்கும் போது எப்படி இருக்கும். இறக்கும் உணர்வு எவ்வாறு இருக்கும் என்றெல்லாம் நினைத்தேன்.

அந்த நொடி சிலருக்கு வயது மூப்பின் காரணமாக உடனே வந்துவிடும், சிலருக்கு பிணிக் காரணமாக இழு இழு என்று இழுத்து பிறகே உயிர் பிரியும், சிலருக்கு எதிர்பாராமல் எந்த நேரத்திலும் எந்த விதத்திலும் வந்து சேரும்,  சிலர் தாங்களாகவே அந்த நொடியை தேடிக்கொள்வர்.

ஆனாலும், அனைவருக்கும் அந்த ஒரு நொடி ஒரேமாதிரியாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த மனித மூளைக்கு தெரியும். உயிர் என்றால் என்ன, உயிர் பிரியும் தருவாயில் அந்த மூளைக்கு உயிர் பிரியப்போகிறது என்று உணர முடியுமா ? அப்படி மனித உடல் உயிர் வாழ்வதை நீட்டிக்க எதையாவது செய்யுமா அல்லது, போதுமென தன் உழைப்பை முடித்துக்கொண்டு உயிரிடம் சரணடைந்துவிடுமா ?

உயிர் பிரியும் அந்த தருவாய் எப்படி இருக்கும் ?

வலி நிறைந்ததாக இருக்குமா ? ? ?

ஒரு விடயம் நீங்கள் கவனித்தீர்களா. இதுவரை மரணித்த எவரும் அந்த தருணம் எப்படி இருக்கும் என்று மீண்டு வந்து வாழ்பவர்களிடம் சொன்னதுமில்லை, அப்படி சொல்ல நினைத்தாலும் சொல்ல முடிவதுமில்லை. மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதையும் அவர்களால் நம்மிடம் பகிர்ந்துக் கொள்ளவும் முடிவதில்லை.

இதுதான் வாழ்க்கையின் இரகசியம் என்பதோ ?

அல்லது, இதனால்தான் வாழ்க்கையே இரகசியமாக இருக்கிறதோ ?

* தினேஷ்மாயா *



உன் உயிர்

Monday, August 24, 2020

 

அரசாங்கம் தளர்வுகள் அறிவித்துவிட்டது..

ஈ-பாஸ் திட்டம் கைவிடப்பட்டது..

பணியாளர்கள் வேலைக்கு செல்லலாம்..

கடைகளை திறந்து வியாபாரம் செய்யலாம்..

இதுபோன்ற விடயங்களைக் கண்டு நீங்கள் கவனக்குறைவாக இருக்க வேண்டாம்.

உண்மையில் கொரோனாத் தொற்று முழுவதும் குறையவில்லை, கட்டுக்குள்ளும் வரவில்லை..

உன் வாழ்க்கை உன் கையில் என்று சொன்ன காலம் போய்,

உன் உயிர் உன் கையில் என்றாகிவிட்டது..

* தினேஷ்மாயா *

இலவசம்

Saturday, August 22, 2020


 பிறர்மீது


அளவற்ற அன்பு


எல்லையற்ற கருணை -  செலுத்துபவரா நீங்கள் ?


இதோ வாருங்கள் -


துயரமும் துன்பமும்


உங்களுக்கு இலவசம் !!


* தினேஷ்மாயா *

ஓர் சந்தர்ப்பம்

 

மனம் கசிந்து

ஒட்டுமொத்த கண்ணீரும்

தீரும்படி அழ வேண்டும்..

அப்படியோர் சந்தர்ப்பம்

எங்ஙனம் வாய்க்கும் ?!

* தினேஷ்மாயா *

விநாயக சதுர்த்தி

 


* தினேஷ்மாயா *

இவர்கள் இப்படித்தான் ?!


இந்த ஊரடங்கில் இதுவரை பேச நேரம் கிடைக்காத பல நண்பர்களிடமும் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி ஒரு முறை எனது நெருங்கிய நண்பனுடன் பேசிக் கொண்டிருந்தேன்.

அவனுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. கலப்புத் திருமணம் செய்துகொண்டவன். இருவர் வீட்டிலும் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லை என்பதால் இருவரும் தங்களின் குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார்கள்.

அவனுக்கு இப்போது 7 வயதில் ஒரு பெண் குழந்தை, 5 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. அவர்கள் இருவரின் குடும்பமும் இதுவரை இவர்களையும், குழந்தைகளையும் வந்து பார்க்கவில்லை என்று அவன் சொன்னான்.

நான் கேட்டேன், இந்த 10 ஆண்டுகளில் நீ அவர்களிடம் பேசுவதற்கு ஏதும் முயற்சி செய்தாயா என்று. அவன், இல்லை இந்த 10 ஆண்டுகளில் நான் ஒருமுறை கூட அவர்களிடம் பேச முயற்சி செய்யவில்லை எங்கள் இருவரின் குடும்பத்தாரும் எங்களிடம் பேசவோ தொடர்புகொள்ளவோ இல்லை. அவங்க எப்பவுமே இப்படித்தான். மனுஷனை விட சாதி தான் முக்கியம்னு இருக்கிறவங்க என்றான்.

அவனிடம் பேசிக் கொண்டிருந்தபோதுதான் எனக்கு ஒன்று தோன்றியது

இங்கே நாம் யாருமே பிறருக்கு திருந்துவதற்கான ஒரு வாய்ப்பை வழங்குவதே இல்லை. ஒருவேளை அவர் திருந்தி விட்டார் என நமக்கு தெரிய வந்தாலும் அதை நாம் ஏற்பதில்லை.

இவர்கள் இப்படித்தான் என்று பொத்தாம் பொதுவாக ஒரு மனப்பான்மை நம்மிடம் உள்ளது.

ஒருவருக்கு திருந்துவதற்கான வாய்ப்பு நாம் கொடுத்துவிட்டு அதன் பின்னர் அவர் திருந்தவில்லை என்றால் அவரைப் பற்றிய ஒரு முடிவுக்கு வரலாம். அதுவும் தற்காலிக முடிவாக மட்டுமே இருக்க வேண்டும்.

ஒருவருக்கு திருந்துவதற்கான வாய்ப்பையும் கொடுக்காமல், அவர் திருந்திவிட்டாரா என்று தெரிந்து கொள்ளாமலும் அவர் அப்படித்தான் என்று முத்திரை குத்துவது படித்தவர்கள், படிக்காதவர்கள் என்கிற பேதமின்றி அனைவரும் செய்யும் மிகப்பெரிய தவறு. அது மனிதர்களுக்கு அழகல்ல.

வாழ்க்கையில் எத்தனையோ முறை ஒரு வசனத்தை கேட்டிருப்போம். மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்று. அப்படியானால் மனிதன் மாறுவான், மனித மனம் மாறும். நல்லவன் கெட்டவன் ஆகலாம், கெட்டவன் நல்லவன் ஆகலாம். இதுதான் விதி / நியதி.

ஆனால் ஒருவர் எப்போதுமே கெட்டவனாக தான் இருப்பார் என்று நாம் முத்திரை குத்துவது மிகப்பெரிய தவறு.

ஒரு பெரிய பரந்த ஆழமான விசாலமான அறிவும் மனமும் இருந்தால் மட்டுமே இந்த விஷயத்தை உணர்ந்து கொள்ள முடியும்

என்றைக்குமே இவர்கள் இப்படித்தான், அவர்கள் மாறவே மாட்டார்கள் என்று நினைக்காதீர்கள்.

வாழ்க்கை வினோதமானது, விசித்திரமானது.

ஒவ்வொரு மனிதனையும் எந்த நொடியிலும் மாற்றக்கூடிய சக்தி வாழ்க்கைக்கு உள்ளது என்பதை மறவாதீர்கள்.

அன்பை விதைத்து அன்பை அறுவடை செய்வோம்.

* தினேஷ்மாயா *

பாவ மன்னிப்பு

 

 

நம் வாழ்வில் தெரிந்தும் தெரியாமலும் பல தவறுகள், தப்புகள், குற்றங்கள், பாவங்கள் செய்கிறோம். தெரியாமல் செய்த பாவங்களுக்கும் தண்டனை உண்டு, தெரிந்து செய்யும் பாவங்களுக்கும் தண்டனை உண்டு. ஆனால், தண்டனை என்கிற ஒரு வார்த்தை என்று தோன்றியதோ அன்றே மன்னிப்பு என்கிற வார்த்தையும் கூடவே சேர்ந்து தோன்றியது.

செய்த பாவத்திற்கு மன்னிப்பு என்பது நிச்சயம் உண்டு. அனைத்து பாவங்களும் தண்டிக்கப்பட வேண்டியவை அல்ல. அதன் தன்மை இடம் பொருள் ஏவல் இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு மன்னிப்பை வழங்கலாம்.

இந்த பாவ மன்னிப்பை இறைவன்தான் வழங்க வேண்டும் என்றில்லை. மனிதர்களும் மன்னிக்கலாம். ஆனால், மனிதர்களால் மன்னிக்க முடியாத பாவங்களுக்கு பாவ மன்னிப்பை இறைவனிடம் மட்டுமே கேட்க முடியும்.

ஒருவர் வாழ்வில் எதாவது ஒரு தருணத்தில், நான் என்ன பாவம் செய்தேனோ ஏன் இத்தனை துன்பங்களை அனுபவிக்கிறேன் என்கிற நிலை என்றாவது வந்தால், உடனேயே அவர்கள் மனம் இறைவனை நாடும். நான் என்ன பாவம் செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை, ஆனால் நான் தெரிந்தோ தெரியாமலோ எவருக்காவது பாவம் செய்திருந்தால் என்னை மன்னித்து இந்த துன்பத்திலிருந்து மீட்டு என்னை காக்க வேண்டும் என்று பிரார்த்திப்போம்.

இது ஒரு இயல்பான விடயம்தான். ஆனால் நான் சொல்ல வருவது என்ன தெரியுமா ?

நீங்கள் பாவ மன்னிப்பு கேட்கும் முன்னர், நீங்கள் உங்களுக்கு பிறர் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களை உங்கள் மனதில் தூக்கி சுமந்துக்கொண்டு வன்மத்தோடும் கோபத்தோடும் இருப்பதை விட்டுவிட்டு, அவர்கள் தாமாக உங்களிடம் வந்து பாவ மன்னிப்பு கேட்கவில்லை என்றாலும், நீங்களாகவே அவர்களின் பாவத்தை மன்னித்துவிடுங்கள்.

மன்னிப்பது தெய்வ குணம் என்பார்கள். உங்களுக்கு பிறர் செய்த பாவத்தை நீங்கள் மன்னித்தால் மட்டுமே, நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ பிறருக்கு செய்த பாவத்திற்கு இறைவனிடம் மன்னிப்பு கேட்கும்போது இறைவன் உங்கள் பிரார்த்தனையை பரிசீலிப்பான்.

மன்னிக்க தெரிந்த ஒருவனுக்கே அவனுக்கான மன்னிப்பும் வழங்கப்படும்.

மன்னிக்க மறுப்பவனுக்கு அவனுக்கான மன்னிப்பும் மறுக்கப்படும்.

அன்பை மட்டுமே பரப்புவோம். அன்பே சிவம் என்பதை உணர்ந்து வாழ்வோம்.

* தினேஷ்மாயா *

திருமணம் - வெற்றியா தோல்வியா ?

Friday, August 21, 2020


திருமணத்தின் தோல்வி என்பது -

ஏன் இந்த நபரை திருமணம் செய்தோம் என்று

எண்ணும்போது அல்ல...

இவரைவிட , நாம் மனதில் நினைத்த

வேறொரு நபரை திருமணம் செய்திருந்தால்

மணவாழ்க்கை சிறப்பாக அமைந்திருக்கும் - என்னும்

எண்ணம் தோன்றும்போது

அந்த திருமணம் தோல்வியில் முடிவதாய்

கருதப்படுகிறது..

ஆனாலும், நம் சமூக கட்டமைப்பு

அன்பின் உதவியால் அந்த திருமணத்தை

விவாகரத்து வரை செல்லவிடாமல்

மீண்டும் இணைத்து வெற்றி காண்கிறது..

இதை மேலைநாடுகளில் காணமுடியாது..

* தினேஷ்மாயா *

ஊமை விழிகள்

Thursday, August 20, 2020

 

உன் விழிகள் 

மை விழிகள் மட்டுமல்ல..

காதலும் மௌனமும் மட்டுமே 

பேசும் - அழகான

ஊமை விழிகள் !!

* தினேஷ்மாயா *

கடனும் வட்டியும்

Wednesday, August 19, 2020

 

கொடுத்த கடனை

திரும்பக் கேட்கிறாள்…

அவள் இதயம் !

வட்டியுடன் திரும்ப

கொடுத்து விட்டேன்..

பிரிவெனும் வலி !

* தினேஷ்மாயா *

இதுவே சொர்க்கம்

 

பனிக்காலம் !!

அறையின் காற்றில் எங்கும்

சில்லென்ற பனித்துளி…

போர்வைக்குள் இதமான துயில்…

எழவே கூடாதென்ற கங்கனம்…

நெஞ்சே எழு என ஒலிக்கும் அலாரம்…

தலையில் தட்டி அவனையும்

தூங்க வைக்கும் சோம்பல்…

போர்வைக்குள்ளே – திரும்பிப் படுக்கையில்

உலகையே விழுங்க பார்க்கும் ஒரு

பெரிரிரிரிய்ய்ய்ய கொட்டாவி…

கனவில் நீ !!

அடடா !!

இதுவே சொர்க்கம் !!!

* தினேஷ்மாயா *

பிரதிபலிப்பு

 

காற்றின் ஈரப்பதமே

வானவில்லாய் பிரதிபலிக்க..

உன்மீதான என் காதலே

கவிதைகளாய் !!

* தினேஷ்மாயா *


மெய்சிலிர்ப்பு

 

நீ பிறந்து நடக்க ஆரம்பித்தபோது

உன் பாதம் முதலில் பூமியில் பட்டபோது

பூமிக்கு மெய்சிலிர்த்தது..

அப்போது உருவானதுதான்

இந்த மரங்கள் எல்லாம்!!

 * தினேஷ்மாயா *

காதல் போர்

 


நம் இருவருக்குமிடையில் மட்டும்

நடக்கும் போர்…

முடிவில்லா போர்…

மஞ்சள்கயிற்றோடு வருகிறேன்..

அதுவே வெள்ளைக்கொடி இங்கே…

இங்கே உயிரிழப்புகள் இருக்கா...

உயிரின் உற்பத்தி மட்டுமே உண்டு !!

* தினேஷ்மாயா *

தேன் முத்தம் !


வெள்ளைத்தாளில் ஏதேதோ கிறுக்கி

அழிப்பானால் அழித்தது குழந்தை..

வெள்ளைத்தாள் உன் தேனிதழ்

அழிப்பான் என் இதழ்

குழந்தை நான் !!

* தினேஷ்மாயா *

உன்னுள் மூழ்கி ..

 

கடலில் மூழ்கி மட்டுமே

முத்து எடுக்கலாம என்றில்லை..

உன்னுள் மூழ்கி முத்தோடு

உன் முத்தத்தையும் எடுத்துக்கொண்டு

கரை சேர்ந்துவிட்டேன்..

அதை நீ அறிவாயா ?

* தினேஷ்மாயா *

சமூகநீதி காத்த கருணாநிதி


பல நாட்கள் கழித்து என் தோழி ஒருவரிடம் பேசினேன். கருணாநிதி அவர்களின் நினைவு நாளான அன்று அவர் என்னை தொலைபேசியில் அழைத்திருந்தார். அன்றுதான் என்னுடைய வாட்ஸ் அப்பில் கலைஞர் கருணாநிதி அவர்களைப் பற்றி ஒரு தகவல் பதிவிட்டிருந்தேன். அந்த தகவலை இங்கே இந்த வலைப்பக்கத்திலும் கடவுள் ஏற்பு என்கிற தலைப்புல் பதிவிட்டிருக்கிறேன்.

 வழக்கமான நலம் விசாரிப்பு மற்றும் பிற கதைகள் எல்லாம் பேசிவிட்டு பிறகு பொதுவாக ஒரு விஷயத்திற்கு பேச வந்தோம். அப்போது அவர் சொன்னார் எனக்கு என்ன இருந்தாலும் தனக்கு கலைஞரை அவ்வளவாக பிடிக்காது என்றார். நான் காரணம் என்ன என்று கேட்டேன்.

அவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் ஒரு கிராமத்தில் இருப்பவர். அவரின் பள்ளி பருவத்தில் கருணாநிதி அவர்கள் ஆட்சியில் இருக்கும் பொழுது இலவசமாக சீருடை, புத்தகங்கள் இவையெல்லாம் வழங்கப்பட்டது. ஆனால் அந்த இலவச பொருட்கள் அனைத்தும் தாழ்த்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. இவர்கள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு குடும்பம் என்று அன்றுதான் அந்த தோழி என்னிடம் சொன்னார். அதனால், அவர்களுக்கு அரசின் எந்தவொரு சலுகையும் கிடைக்கவில்லை, அதனால் பள்ளிப் பருவத்தில் பல இன்னல்களை சந்தித்ததாக சொன்னார்.

மேலும் சில விஷயங்களையும் பகிர்ந்தார். அவர்களுடைய தாத்தா (அப்பாவின் அப்பா) ஊரில் மிகப்பெரிய நிலக்கிழார்.நிறைய ஏக்கரில் நிலங்கள் உள்ளது. அவர்களின் அப்பா அவரின் தாத்தாவுடன் சண்டை போட்டுக்கொண்டு பிரிந்து வந்ததால் அந்த தாத்தா இவர்களுக்கு எந்த ஒரு சொத்தையும் தரவில்லை. அதனால் இவர்கள் குடும்பம் பொருளாதாரரீதியாக கொஞ்சம் கஷ்டப்பட்டது.

இவர்கள் குடும்பத்தில் மூன்று பெண்கள். அவருடைய அக்கா பள்ளிக்கூடத்தில் படிக்கும் பொழுது சீருடைகள் வாங்க, புத்தகங்கள் வாங்க பணம் இருக்காது. ஆனால் அதே பள்ளிக்கூடத்தில் படிக்கும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு அரசாங்கம் இலவசமாக சீருடை புத்தகங்கள் அளித்தது. அவர் சொல்வதற்கு சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர், இப்போது இல்லை.

ஜெயலலிதா அம்மையார் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு அனைத்து சமூக மக்களுக்கும் இலவசமாக புத்தகம் வழங்கினார். எங்கள் ஊரிலேயே ஜெயலலிதா அவர்கள் அனைவருக்கும் இலவசமாக புத்தகம் வழங்கியதால்தான் நிறைய பெண்கள் படிக்க முடிந்தது. எங்கள் குடும்பத்தில் அனைத்து பெண்களும் பள்ளிக் கல்வியை முடித்து கல்லூரி கல்வி படிக்கும் வாய்ப்பு கூட ஜெயலலிதா அவர்களால் தான் ஏற்பட்டது. அதனால் எனக்கு ஜெயலலிதா அவர்களைப் பிடிக்கும். கருணாநிதி அவர்களை இந்த காரணத்தினாலேயே பிடிக்காது என்றார்.

அதற்கு நான் சொன்னேன் உங்களுக்கு பல விஷயங்கள் தெரியவில்லை. தெரியாத விஷயங்களை வைத்தும், உங்களுக்கு தெரிந்த விஷயங்களை மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு முடிவுக்கு வரக்கூடாது என்றேன். என்ன விஷயம் என்பதைத் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லத் துவங்கினேன்.

நீங்கள் சொல்கிறீர்கள், உங்கள் தாத்தா நிறைய நிலம் வைத்திருப்பவர் பல சொத்துக்களுக்கு அதிபதி ஆனால் உங்கள் அப்பா அவருடன் சண்டை போட்டுவிட்டு வந்ததால் உங்களுக்கு எந்த சொத்தும் இல்லை. அதனால் நீங்கள் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்ட குடும்பத்தை சார்ந்தவர்கள்.

ஆனால் கருணாநிதி அவர்கள் ஏன் மிகவும் பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் மாணவர்களுக்கு இலவசமாக அனைத்தையும் வழங்கினார் என்றால், உங்களுக்கு உங்கள் தாத்தாவிடமிருந்த குடும்பப் பிரச்சினையால் உங்களுக்கு அந்த நிலம், சொத்து வந்து சேரவில்லையே தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால் மிகவும் பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு நிலம் என்பதே கிடையாது. அவர்களுக்கு சொந்தமாக நிலம் எதுவும் கிடையாது, அவர்கள் நிலத்தில் கூலிக்காக வேலை செய்த கூலி ஆட்கள் தான். தினக்கூலியாக வேலை செய்தவர்களை வேலையை விட்டு போ என்றால் அவர்களுக்கு வேலை கிடையாது கூலி கிடையாது எதுவும் கிடையாது. அவர்கள் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும்.

நிலம் வைத்துக் கொண்டு குடும்ப பிரச்சனையால் பொருளாதார ரீதியாக பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவுவதா? அல்லது நிலமே இல்லை, எந்த ஒரு சொத்தும் இல்லை அதனால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட சமூக மக்களுக்கு உதவுவதா என்றால் ஒரு அரசாங்கம் நிச்சயமாக இந்த மக்களுக்கு தான் அதிகமாக உதவ முன்வரும். அதைத்தான் முதல்வர் கருணாநிதி அவர்கள் செய்தார். ஆனால் பின்னாளில் அனைத்து சமூக மக்களுக்கும் அரசு பள்ளிக்கூடத்தில் இலவசமாக சீருடை புத்தகம் எல்லாம் வழங்க முடிவெடுத்தார்கள்.

அவருடைய எண்ணம் உயர் சமூக மாணவர்களை ஒதுக்கிவிட்டு மற்ற சமூக மாணவர்களை மட்டுமே வளர்ப்பது அல்ல.

உயர்ந்த ஜாதி என்று சொல்லிக் கொண்டு இருக்கும் மக்களுக்கு இணையாக அவர்களாலேயே கீழ்ஜாதி என்று ஒதுக்கப்படும் மக்களுக்கு அனைத்து சலுகைகளும் சென்று சேர்ந்து அவர்களும் இவர்களுக்கு இணையாக வளர வேண்டும் என்ற ஒரே தொலைநோக்கு மற்றூம் சமூக நோக்கு பார்வையால் செயல்படுத்தப்பட்ட திட்டம் தான் அது என்றேன்.

என்றைக்குமே கருணாநிதி என்பவர் சமூக நீதி காத்த கருணாநிதி.

என் தோழியும் நான் சொன்ன கருத்தை பிறகு ஆமோதித்தார்.

என் கருத்திற்கு உங்கள் கருத்து என்ன ?

* தினேஷ்மாயா *