மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்

Friday, April 24, 2020




மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
வாழை போல தன்னை தந்து தியாகி ஆகலாம்
உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் தெய்வம் ஆகலாம்

ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம்
உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம்
ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம்
உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம்
யாருக்கென்று அழுதபோதும் தலைவன் ஆகலாம்
மணம் மணம் அது கோவில் ஆகலாம்

மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்

மனமிருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
வழி இருந்தால் கடுகுக்குள்ளே மலையை காணலாம்
மனமிருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
வழி இருந்தால் கடுகுக்குள்ளே மலையை காணலாம்
துணிந்துவிட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்
குணம் குணம் அது கோவில் ஆகலாம்

மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
வாழை போல தன்னை தந்து தியாகி ஆகலாம்
உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் தெய்வம் ஆகலாம்

திரைப்படம்: சுமைத்தாங்கி (1962)
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
வரிகள்: கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்: P.B.ஸ்ரீனிவாஸ்

* தினேஷ்மாயா *

முதுமைக் காலம்




இன்றைய இளைய சமுதாயத்தினர் தங்கள் பெற்றோர்களையும், சமூகத்தில் சந்திக்கும் வயதானோரையும் கோபத்துடனும் அவ மரியாதையாகவும் நடத்துவதை சில இடங்களில், சில நேரங்களில் பார்க்க முடிகிறது. 

அவர்கள் அனைவருக்கும் நான் ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறேன். முதுமை என்பது இயற்கையானது, ஒவ்வொரு மனிதருக்கும் முதுமை வந்தே தீரும். இன்று நாம் இளமையாக இருக்கிறோம் என்கிற ஒரே காரணத்தால் நம்மைவிட வயதில் முதியவர்களை என்றும் தவறாக எண்ணக்கூடாது, தவறாக பேசக்கூடாது. இன்று நாம் இளமையாக இருக்கலாம், ஆனால் நாளை முதுமை நமக்கும் வரும்.

முதுமை என்பது கொடியது,  இளமை நிரந்தரமானதல்ல ஆனால் முதுமை நிச்சயமானது. அதை என்றும் மறந்து விடக்கூடாது.

* தினேஷ்மாயா *

திருத்தொண்டத்தொகை

Wednesday, April 08, 2020





தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
  திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
  இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
  விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
  ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.  1


இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன்
  ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்
கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன்
  கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்
மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்
  எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்
அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க் கடியேன்
  ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.  2


மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்
  முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்
செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்
  திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்
மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
  வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த
அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்
  ஆரூரான் ஆரூரில் அம்மானுக் காளே.  3


திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
  திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்
பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன்
  பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கும் அடியேன்
ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்
  ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன்
அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்
  ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.  4


வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்
  மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்
  ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்
நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்
  நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன்
அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்
  ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.  5


வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
  மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன்
சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்
  செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன்
கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவார்க்கும் அடியேன்
  கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்
ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்
  ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.  6


பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன்
  பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன்
மெய்யடியான் நரசிங்க முனையரையர்க் கடியேன்
  விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன்
கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்
  கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்
  ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.  7


கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த
  கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்
நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற
  நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்
துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்
  தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்
அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவார்க் கடியேன்
  ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.  8


கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்
  காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்
மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்குந் தஞ்சை
  மன்னவனாம் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்
புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி
  பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்
அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்
  ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.  9


பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
  பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
  திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
  முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்
  ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.  10


மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்
  வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்
தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன்
  திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன்
என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்
  இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்
அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்
  ஆரூரில் அம்மானுக் கன்ப ராவாரே.  11


அ௫ளியவர் : சுந்தரர்
திருமுறை : ஏழாம் திருமுறை (தேவாரம்)
பண் : கொல்லிக்கௌவாணம்
நாடு : சோழநாடு காவிரித் தென்கரை
தலம் : ஆரூர்
சிறப்பு: திருத்தொண்டத்தொகை


திருத்தொண்டத் தொகை என்பது நாயன்மார்கள் 63பேர் மற்றும் தொகையடியார்கள் 9பேர் ஆகிய 72 சிவனடியார்களைப் பற்றி சுந்தர மூர்த்தி சுவாமிகள் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும்.

சுந்தர மூர்த்தி சுவாமிகள் ஒரு நாள் திருவாரூரில் தேவாசிரியன் மண்டபத்தில் குழுமியிருந்த சிவனடியார்களைப் பணியாது திருக்கோயிலினுள் சென்றார் என்ற தவறான எண்ணத்தில் விறன்மிண்டர் என்பவர் சுந்தரரையும் அவருக்கு அருள் செய்த சிவபிரானையும்புறகுஎன்று ஒதுக்கினார்.

அதனால் மனம் நொந்த சுந்தரருக்கு சிவபெருமான் அடியார் பெருமைகளை எடுத்துரைக்கும் வகையில்தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்என்று அடியெடுத்துக் கொடுக்க, ஒவ்வொரு அடியாருக்கும் தான் அடியேன் எனக் கூறிதிருத்தொண்டத் தொகைஎனும் 11 பாடல்களைப் பாடி அருளினார்.

இந்தப் பாடல்களே சேக்கிழார் பெரியு புராணம் என்னும் நூல் எழுத உதவியாக இருந்தன. பெரியு புராணம் மூலம் நாயன்மார்கள் மற்றும் தொகையடியார்கள் வரலாறு  வெளியுலகுக்குத் தெரிய வந்தது.


* தினேஷ்மாயா *