என் கொரோனா கேள்விகள்

Wednesday, April 08, 2020




உலகையே அச்சுறுத்திவரும் கொரோனாவிற்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் பலவும் ஈடுபட்டிருக்கிறது. இன்றைய தேதியில் சுமார் பதினைந்து இலட்சம் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், சுமார் மூன்று இலட்சம் மக்கள் இதில்ருந்து குணமடைந்திருக்கிறார்கள், சுமார் என்பதாயிரம் மக்கள் இயற்கையோடு கலந்துவிட்டார்கள். இந்த நோய்க்கான தடுப்பூசியும், குணமாக்கும் மருந்தும் இன்னும் ஓராண்டிற்குள் சந்தைக்கு வந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அது சந்தைக்கு வந்தப்பின்னர் என்ன நடக்கும் என்றுதான் என் சிந்தனை.

உலகில் இருக்கும் அனைவருக்கும் அந்த தடுப்பூசியை போட முடியுமா? அவ்வளவு தடுப்பூசி கையிருப்பு இருக்குமா? அனைவருக்கும் தடுப்பூசி சாத்தியம் இல்லை என நினைக்கிறேன். அப்படி இருக்கையில், பணம் படைத்தவர்களால் மட்டுமே இந்த தடுப்பூசியை எடுத்துக்கொள்ள முடியும். அப்படியானால், இந்த தடுப்பூசியை ஏழை எளிய மக்கள் எடுத்துக்கொள்ள முடியாதா? அல்லது அது அவர்களை சென்றடைய பல ஆண்டுகள் ஆகும் அல்லவா. அதுவரை இதன் தாக்கத்தில் இருந்து அவர்களை எப்படி பாதுகாப்பது? ஒருவேளை இந்த தடுப்பூசியை கண்டுபிடிக்கும் நிறுவனம் மனிதாபிமான அடிப்படையில் இதை இலவசமாக விநியோகம் செய்யுமா? அதை பெருமுதலாளிகள் அனுமதிப்பார்களா? கருவறை முதல் கல்லறைவரை அனைத்திலும் பணம் சம்பாதிக்கும் இந்த மனித கூட்டம் இந்த விஷயத்தில் என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
* தினேஷ்மாயா *

0 Comments: