மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்

Friday, April 24, 2020




மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
வாழை போல தன்னை தந்து தியாகி ஆகலாம்
உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் தெய்வம் ஆகலாம்

ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம்
உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம்
ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம்
உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம்
யாருக்கென்று அழுதபோதும் தலைவன் ஆகலாம்
மணம் மணம் அது கோவில் ஆகலாம்

மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்

மனமிருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
வழி இருந்தால் கடுகுக்குள்ளே மலையை காணலாம்
மனமிருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
வழி இருந்தால் கடுகுக்குள்ளே மலையை காணலாம்
துணிந்துவிட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்
குணம் குணம் அது கோவில் ஆகலாம்

மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
வாழை போல தன்னை தந்து தியாகி ஆகலாம்
உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் தெய்வம் ஆகலாம்

திரைப்படம்: சுமைத்தாங்கி (1962)
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
வரிகள்: கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்: P.B.ஸ்ரீனிவாஸ்

* தினேஷ்மாயா *

0 Comments: