வசந்த காலம்

Friday, May 08, 2020




பத்து வருடங்களுக்கு முன் இந்நேரம் நான் கல்லூரி இறுதி ஆண்டு முடித்து இருந்தேன். தேர்வுகள் முடிந்தாகிவிட்டது ஆனால் இன்னமும் பட்டம் வாங்கவில்லை.

திரும்பி பார்க்கிறேன் !

இன்று எதேச்சையாக என் Gmail – ஐ திறந்து, கடைசியில் இருந்து படிக்கத்துவங்கினேன். அப்பப்பா… எத்தனை எத்தனை அருமையான நினைவுகள். அன்று பேசிய பெரும்பாலான நண்பர்கள் இன்று தொடர்பில் இல்லையென்றாலும், அவர்களுடன் நான் பேசிய அந்த GTALK உரையாடல்களை திரும்ப படிக்கையில் மனம் புத்துணர்வு அடைகிறது. மீண்டும் கல்லூரியில் படிப்பதாய் ஓர் உணர்வை எனக்கு தருகிறது.

தேவதைப்போல் வந்த அவள், அவளுடன் படிக்கும் அனைவரும் எனக்கும் நண்பர்கள், என் வலைப்பக்க வாசகர்கள், என் பள்ளி நண்பர்கள், என் கல்லூரி நண்பர்கள் இப்படி என் மனதில் இடம்பிடித்த சிலருடனான உரையாடல்கள் என் மனதை வருடி செல்கிறது.

அன்றைய காலகட்டம் பெரும்பாலும், அவளுடைய நினைவுகளாலும் அவளுக்கான கவிதைகள் எழுதுவதிலும், என் வலைப்பக்கத்தை நிரப்புவதிலும், மனதிற்கு நெருக்கமான சில நண்பர்களுடன் பேசுவதிலுமே செலவழித்திருக்கிறேன் எனலாம்.

திரும்பவும் கிடைக்காத அந்த வசந்த காலத்தை இப்போது என் மனதில் அசைப்போட்டு பார்க்கிறேன். உள்ளம் மகிழவும் மனம் நெகிழவும் ஆனந்த கண்ணீர் வழிந்தோடி என் கைகளில் விழுகிறது…….

* தினேஷ்மாயா *

0 Comments: