நேரம்

Saturday, May 30, 2020



    அனைவருக்கும் பொதுவாக இருப்பது நேரம். ஆனால், அனைவரும் அதை ஒரேமாதிரி செலவழிப்பதில்லை. நாம் நம்முடைய நேரத்தை எப்படி செலவு செய்கிறோம் என்பதே நம் நிகழ்காலத்தையும், நம் எதிர்காலத்தையும், நம் வாழ்வின் வளர்ச்சியையும் தீர்மானிக்கிறது.

நேரத்தை சேமிக்கவும் முடியாது, ஆனால், வீணடிக்க முடியும். 

எவன் ஒருவன் தன் நேரத்தை பயனுள்ளதாக மாற்றுகிறானோ அவனுக்கே இந்த உலகம் தலைவணங்கும், அவனே இங்கே தலைவனாக அறியப்படுகிறான். ஆழ்ந்து சிந்தித்தால் இந்த உண்மை புலப்படும்.

* தினேஷ்மாயா *

0 Comments: