நெஞ்சமே நெஞ்சமே…

Friday, June 30, 2023


நெஞ்சமே நெஞ்சமே…

கொஞ்சியே சொல்லுதே… ஆரீரோ…

தஞ்சமே தஞ்சமே…

சொந்தமாய் வந்ததே… ஆராரீரோ…


நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்…

சொல்லவே இல்லையே முன்பு யாரும்…

கெஞ்சியோ மிஞ்சியோ நின்ற போதும்…

அன்புதான் வெல்லுமே எந்த நாளும்…


ஒளி எங்கு போகும்…

உன்னை வந்து சேரும்…

அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று…

நம்பி செல்ல நஞ்சம் இல்லையே…


நெஞ்சமே நெஞ்சமே…

கொஞ்சியே சொல்லுதே… ஆரீரோ…

தஞ்சமே தஞ்சமே…

சொந்தமாய் வந்ததே… ஆராரீரோ…


நெஞ்சமே நெஞ்சமே…

கொஞ்சியே சொல்லுதே… ஆரீரோ…

தஞ்சமே தஞ்சமே…

சொந்தமாய் வந்ததே… ஆராரீரோ…


நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்…

சொல்லவே இல்லையே முன்பு யாரும்…

கெஞ்சியோ மிஞ்சியோ நின்ற போதும்…

அன்புதான் வெல்லுமே எந்த நாளும்…


ஒளி எங்கு போகும்…

உன்னை வந்து சேரும்…

அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று…

நம்பி செல்ல நஞ்சம் இல்லையே…


நெஞ்சமே நெஞ்சமே…

கொஞ்சியே சொல்லுதே… ஆரீரோ…

தஞ்சமே தஞ்சமே…

சொந்தமாய் வந்ததே… ஆராரீரோ…


கண்ணோரம் கொட்டும் மின்னல்…

அசைந்தாடும் பூவில் உயிர் தேனாய் ஊற…

வெக்கம் அங்கும் இங்கும்…

ரெக்கை கட்டுதே…


உன் வாசம் தாயாய் தலை கோத…

மனம் பூக்குதே…

நெற்றி முத்தம் வைக்குதே…

தீ பற்றிக்கொண்ட காட்டுக்குள்ளே…


பாடல் நீயே… ஓஓ…

நெஞ்சமே நெஞ்சமே…

கொஞ்சியே சொல்லுதே… ஆரீரோ…


தஞ்சமே தஞ்சமே…

சொந்தமாய் வந்ததே… ஆராரீரோ…


இன்றுதான் விண்ணிலே பாய்கிறேன்…

வெண்ணிலா வெளிச்சத்தில் காய்கிறேன்…

என்னவோ என்னிலே…

வண்ணமாய் பொங்குதே…


ம்ம்… துள்ளும் பாட்டிலே…

எழும் விசை…

என்னை மீட்டுதே… ஓஓஓஓ…


நெஞ்சமே நெஞ்சமே…

பக்கம் நீ வந்ததாள்…

திக்கெல்லாம் வெள்ளி மீனே…


நீ தஞ்சமே தஞ்சமே…

உன்னை நீ தந்ததால்…

முள்ளெல்லாம் முல்லைத்தேனே…


ஓ ஓ… செல்லமே செல்லமே…

உள்ளங்கை வெல்லமே…

தித்திக்கும் முத்தமே…

கொஞ்சம் தாயேன்…


ஓ ஓ… செல்லமே செல்லமே…

உள்ளங்கை வெல்லமே…

அந்திபூ காட்டுக்கே கூட்டிப்போயேன்…

காட்டுக்கே கூட்டிப்போயேன்…


நெஞ்சமே நெஞ்சமே…

கொஞ்சியே சொல்லுதே… ஆரீரோ…

தஞ்சமே தஞ்சமே…

சொந்தமாய் வந்ததே… ஆராரீரோ…


நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்…

சொல்லவே இல்லையே முன்பு யாரும்…

கெஞ்சியோ மிஞ்சியோ நின்ற போதும்…

அன்புதான் வெல்லுமே எந்த நாளும்…


ஒளி எங்கு போகும்…

உன்னை வந்து சேரும்…

அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று…

நம்பி செல்ல நஞ்சம் இல்லையே…


நெஞ்சமே நெஞ்சமே…

கொஞ்சியே சொல்லுதே… ஆரீரோ…

தஞ்சமே தஞ்சமே…

சொந்தமாய் வந்ததே… ஆராரீரோ…


திரைப்படம்: மாமன்னன் 

வரிகள்: யுகபாரதி 

இசை: ஏ.ஆர்.ரஹ்மான் 

குரல்: விஜய் யேசுதாஸ் & சக்திஸ்ரீ கோபாலன்


பல நாட்கள் கழித்து மனதை வருடும் ஒரு இன்னிசை !!
திரும்ப திரும்ப கேட்கிறேன்..

* தினேஷ்மாயா *

ரெஹானா பாத்திமா வழக்கு !


 

இன்றைக்கு கேரளா உயர் நீதிமன்றம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. 

நிர்வாணம் என்பது எப்போதும் அருவருப்பானதல்ல என்று கூறியிருக்கிறது.

வழக்கின் சாரம்:

ரெஹானா பாத்திமா என்கிற சமூக செய்பாட்டாளர் ஒரு வீடியோ வெளியிட்டார். அதின் தன் மேலுடம்பில் உடை எதுவும் இல்லாமல் தன் குழந்தை தன் உடலில் வர்ணம் தீட்டுவதுபோல ஒரு வீடியோ. 

அதனால் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து 13 நாட்கள் சிறையில் அடைத்தது கீழமை நீதிமன்றம். பின்னர் அவரை சிறையில் இருந்து கேரளா உயர்நீதிமன்றம் விடுவித்தும், இந்த வழக்கை இரத்து செய்தும் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஒரு ஆண் மேலாடை இன்றி சுதந்திரமாக செயல்படும் இந்த நாட்டில் பெண்ணுக்கு அவ்வாறு செயல்பட உரிமைகள் மறுக்கப்படுவதென்பதை எப்படி பார்ப்பது. அதற்காக அனைத்து பெண்களும் அந்த உரிமையை விரும்பவில்லை. ஆனால் அப்படி விரும்பும் பெண்களுக்கு அந்த உரிமைகளை மறுப்பது எப்படி நியாயமாகும்?

ஒரு பெண்ணுக்கு தன்னுடைய உடல் மீது முழு சுதந்திரமும் அதிகாரமும் இருக்கிறது. அது ஒரு பெண்ணின் அடிப்படை உரிமை. அதை யாரும் தடுக்க முடியாது.

அந்த வீடியோவில் தன் உடல்மீது தன் குழந்தையை வர்ணம் தீட்ட அனுமதிப்பதென்பதை ஒரு கலையாக மட்டுமே அவர் காண்பிக்க விரும்புகிறார். அதில் கொச்சையாக எதுவும் இல்லை. அது பார்க்கும் கண்களில் தான் இருக்கிறது. 

ஒரு தாய்க்கும் குழந்தைக்குமான உறவென்பது ஒரு புனிதமான உறவு. அதை இங்கே எவராலும் கேள்விக்குள்ளாக்க முடியாது. ஒரு தாய் தன் உடல்மீது தன் குழந்தையை வர்ணம் தீட்ட அனுமதிப்பதால் அந்த குழந்தையை எந்த விதத்திலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தவில்லை.

ஒரு ஆண் குழந்தை தன் தாயின் மேலுடம்பை பார்த்து வளரும்போது, பிற பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்க மாட்டான் என்பது பாத்திமா அவர்களின் வாதம். அது ஏற்புடையதும் கூட.

ஒரு பெண் தன் உடம்பை இப்படித்தான் வெளிப்படுத்த வேண்டும் என்று ஒரு ஆணாதிக்க சமுதாயம் எப்படி முடிவு செய்ய முடியும்? அது அந்த பெண்ணுக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ? அவளுக்கான சுதந்திரம் இல்லை என்றுதானே அர்த்தம்?

நீங்கள் கலாச்சார காவலர்களாக நடிப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள். 

காலவெள்ளத்திற்கு ஏற்ப கலாச்சாரம் தன்னை தகவமைத்துக்கொண்டு முன்னேறிக்கொண்டே இருக்கும். அதற்கு எவரின் காவலும் தேவையில்லை..

ஆண் பெண் அனைத்து விதத்திலும் சமம் என்பதை தினம்தினம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் போல. அப்போதுதான் இந்த ஆணாதிக்க சமூகத்திற்குப் புரியுமோ ?


* தினேஷ்மாயா *

நன்றி !!

Tuesday, June 27, 2023


 

நான் இப்போது அதிகம் இங்கே எழுதுவதில்லை. நேரம் கிடைக்கவில்லை என்பது மட்டுமே காரணம். இன்னமும் அதே வேகம் இருக்கிறது. சிந்தனை மேலும் மெருகேறியிருக்கிறது, பார்வை விசாலமடைந்திருக்கிறது, எல்லாவற்றிலும் ஒரு தெளிவும் எதையும் புது கோணத்தில் அணுகும் ஆற்றலும் கிடைக்கப்பெற்றிருக்கிறது.

என் ஆசையெல்லாம், இப்போது ஓடுவதுபோல இல்லாமல், பொறுமையாக நகரும் வாழ்க்கை வேண்டும். அப்போது என் வலைப்பக்கத்தில் அதிகம் அதிகம் எழுதவேண்டும். அது விரைவில் நடந்தேறும். 

அதுவரை, நான் இங்கே எழுதினாலும் சரி எழுதாவிட்டாலும் சரி, அடிக்கடி என் வலைப்பக்கத்தை வந்து பார்த்துவிட்டு செல்லும் உங்களைப்போன்ற புனித ஆத்மாக்களுக்கு என் உளங்கனிந்த நன்றி !!!

எனக்காக இல்லாவிடினும், உங்களுக்காகவாவது இனி நான் அதிகம் எழுத முயல்கிறேன்.

* தினேஷ்மாயா *

உண்மையான காதல்




 தினமும் காதல் மொழிகளை பரிமாறிக்கொள்வது மட்டுமே காதல் ஆகிவிடாது !

தடைகள் ஏற்படும்போது, வாழ்வில் கடக்க முடியாத தருணங்கள் வரும்போது உண்மையான காதல் சரியான செயல்பாடுகள் வாயிலாக தானாகவே வெளிப்படும் !!

- From the movie "Hello Meera"

* தினேஷ்மாயா *