நெஞ்சமே நெஞ்சமே…

Friday, June 30, 2023


நெஞ்சமே நெஞ்சமே…

கொஞ்சியே சொல்லுதே… ஆரீரோ…

தஞ்சமே தஞ்சமே…

சொந்தமாய் வந்ததே… ஆராரீரோ…


நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்…

சொல்லவே இல்லையே முன்பு யாரும்…

கெஞ்சியோ மிஞ்சியோ நின்ற போதும்…

அன்புதான் வெல்லுமே எந்த நாளும்…


ஒளி எங்கு போகும்…

உன்னை வந்து சேரும்…

அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று…

நம்பி செல்ல நஞ்சம் இல்லையே…


நெஞ்சமே நெஞ்சமே…

கொஞ்சியே சொல்லுதே… ஆரீரோ…

தஞ்சமே தஞ்சமே…

சொந்தமாய் வந்ததே… ஆராரீரோ…


நெஞ்சமே நெஞ்சமே…

கொஞ்சியே சொல்லுதே… ஆரீரோ…

தஞ்சமே தஞ்சமே…

சொந்தமாய் வந்ததே… ஆராரீரோ…


நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்…

சொல்லவே இல்லையே முன்பு யாரும்…

கெஞ்சியோ மிஞ்சியோ நின்ற போதும்…

அன்புதான் வெல்லுமே எந்த நாளும்…


ஒளி எங்கு போகும்…

உன்னை வந்து சேரும்…

அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று…

நம்பி செல்ல நஞ்சம் இல்லையே…


நெஞ்சமே நெஞ்சமே…

கொஞ்சியே சொல்லுதே… ஆரீரோ…

தஞ்சமே தஞ்சமே…

சொந்தமாய் வந்ததே… ஆராரீரோ…


கண்ணோரம் கொட்டும் மின்னல்…

அசைந்தாடும் பூவில் உயிர் தேனாய் ஊற…

வெக்கம் அங்கும் இங்கும்…

ரெக்கை கட்டுதே…


உன் வாசம் தாயாய் தலை கோத…

மனம் பூக்குதே…

நெற்றி முத்தம் வைக்குதே…

தீ பற்றிக்கொண்ட காட்டுக்குள்ளே…


பாடல் நீயே… ஓஓ…

நெஞ்சமே நெஞ்சமே…

கொஞ்சியே சொல்லுதே… ஆரீரோ…


தஞ்சமே தஞ்சமே…

சொந்தமாய் வந்ததே… ஆராரீரோ…


இன்றுதான் விண்ணிலே பாய்கிறேன்…

வெண்ணிலா வெளிச்சத்தில் காய்கிறேன்…

என்னவோ என்னிலே…

வண்ணமாய் பொங்குதே…


ம்ம்… துள்ளும் பாட்டிலே…

எழும் விசை…

என்னை மீட்டுதே… ஓஓஓஓ…


நெஞ்சமே நெஞ்சமே…

பக்கம் நீ வந்ததாள்…

திக்கெல்லாம் வெள்ளி மீனே…


நீ தஞ்சமே தஞ்சமே…

உன்னை நீ தந்ததால்…

முள்ளெல்லாம் முல்லைத்தேனே…


ஓ ஓ… செல்லமே செல்லமே…

உள்ளங்கை வெல்லமே…

தித்திக்கும் முத்தமே…

கொஞ்சம் தாயேன்…


ஓ ஓ… செல்லமே செல்லமே…

உள்ளங்கை வெல்லமே…

அந்திபூ காட்டுக்கே கூட்டிப்போயேன்…

காட்டுக்கே கூட்டிப்போயேன்…


நெஞ்சமே நெஞ்சமே…

கொஞ்சியே சொல்லுதே… ஆரீரோ…

தஞ்சமே தஞ்சமே…

சொந்தமாய் வந்ததே… ஆராரீரோ…


நீ அஞ்சிலே பிஞ்சிலே கண்ட காயம்…

சொல்லவே இல்லையே முன்பு யாரும்…

கெஞ்சியோ மிஞ்சியோ நின்ற போதும்…

அன்புதான் வெல்லுமே எந்த நாளும்…


ஒளி எங்கு போகும்…

உன்னை வந்து சேரும்…

அந்த மஞ்சும் பஞ்சும் ஒன்றே என்று…

நம்பி செல்ல நஞ்சம் இல்லையே…


நெஞ்சமே நெஞ்சமே…

கொஞ்சியே சொல்லுதே… ஆரீரோ…

தஞ்சமே தஞ்சமே…

சொந்தமாய் வந்ததே… ஆராரீரோ…


திரைப்படம்: மாமன்னன் 

வரிகள்: யுகபாரதி 

இசை: ஏ.ஆர்.ரஹ்மான் 

குரல்: விஜய் யேசுதாஸ் & சக்திஸ்ரீ கோபாலன்


பல நாட்கள் கழித்து மனதை வருடும் ஒரு இன்னிசை !!
திரும்ப திரும்ப கேட்கிறேன்..

* தினேஷ்மாயா *

0 Comments: