வரட்டுமே !!

Monday, May 24, 2021

 நான் வாழ்க்கையை முழுவதுமாக வாழ்ந்துவிட்டேனா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், இப்போழ்தே மரணம் என்னைத் தழுவினாலும் இவ்வுலகை விட்டு விடைப்பெற என் மனம் தயாராகிவிட்டது. வாழ்க்கையின் மீது துளியும் வெறுப்பில்லை. உலகின் மீதும், உலகத்து மானிடர்கள் மீதும்கூட எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை. வாழ்க்கை என்பதன் அர்த்தம் கொஞ்சம் கொஞ்சமாக எனக்குப் புரிய துவங்கியிருக்கிறது. அதனால், நான் கண்ட உண்மைகளை வெளியில் சொல்ல முடியாமல், எவருடனும் பேசுவதில் நாட்டம் காட்டாமல் இருக்கிறேன். உண்மை என்னவென்று உணர்ந்தவன், அதை பிறருக்கு சொல்ல விரும்பமாட்டான். ஏனென்றால், இங்கே இருப்பவர்கள் எவருக்கும் உண்மை என்பது ஒரு கசப்பான விடயம். அதை கேட்கும் பக்குவமோ, நேரமோ அல்லது பொறுமையோ இல்லை. 

மனம் செம்மையாகிவிட்ட காரணத்தால், மரணம் ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை. மரணம்தானே. வந்தால் வரட்டுமே ! என்று மனம் தயாராகிவிட்டது !!

* தினேஷ்மாயா *

ABC - கவிதை !

Monday, May 17, 2021


உன் A-காந்தப் பார்வை

என்மீது B-ரங்கியாய் துளைக்க

என் C-று இதயமோ 

நொறுங்கிப் போகிறதடி..

* தினேஷ்மாயா *


ஒன்னுமில்லை

Monday, May 10, 2021

 பெரும்பாலும் பலர் என்னிடம் "என்னாச்சு" என வினவும் நேரங்களில்

"ஒன்னுமில்லை" என்கிற பொதுவான பதிலையே அவர்களிடம் தூவிவிட்டு நடையை கட்டுகிறேன்.

அந்த "ஒன்னுமில்லை" அல்லது "Nothing. Am alright" என்னும் வாசகத்திற்குள் சொல்லி புரிய வைக்க முடியாத, சொல்ல முடியாத, சொல்ல விரும்பாத, சொல்லக் கூடாத, சொன்னால் மட்டும் புரிந்துவிடுமா, சொல்லி மட்டும் என்னாகப் போகிறது இப்படி பல அர்த்தங்கள் புதைந்திருக்கலாம்.

வலியை மறைத்துக்கொண்டு நான் உதிர்க்கும் அந்த குறும் புன்னகை, பின்னாளில் ரணமாய், ஆறா வடுவாய் என் மனதில் விருட்சமாய் வளர்ந்திருக்கும்..

* தினேஷ்மாயா *

நிழலினை நிஜமும்...

Monday, May 03, 2021

நடமாடும் சாபமா நான் இங்கே இருக்க

விதி செய்த சதியா தெரியலம்மா
கடல் தூக்கும் அலையும் கடலில் தான் சேரும்
அது போல என்னையும் சேத்துக்கம்மா
உன் பிள்ளை என்று ஊர் சொல்லும் போது
எனக்கே நான் யாரோ என்றாகி போனேன்
ஒத்த சொந்தம் நீயிருந்தால் போதுமம்மா
மொத்த பூமி எனக்கே தான் சொந்தமம்மா
பத்து மாசம் உள்ளிருந்தேன் பக்குவமா
பூமிக்கு நான் வந்ததென்ன குத்தமம்மா ஆ..


பாடல்: நிழலினை நிஜமும் பிரிந்திடுமா 
படம்: ராம்

#பிடித்த_வரிகள்

* தினேஷ்மாயா *