பிரபஞ்ச அழகி

Saturday, December 25, 2021

 உலக அழகி சரி.

அதென்ன பிரபஞ்ச அழகி ?

ஏன் பிரபஞ்ச அழகிப்போட்டியில் கலந்துக்கொள்ளும் அனைத்து அழகிகளும் இந்த உலகத்தில் இருந்து மட்டுமே வருகின்றனர் ? பிரபஞ்சத்தில் எத்தனையோ அழகிகள் இருக்கலாம்..

இந்த குறுகிய மனப்பான்மையை மனிதன் மாற்றிக்கொள்வானா ?


* தினேஷ்மாயா *

பெரியாரியம்


* தினேஷ்மாயா *

வானும் மண்ணும்



ஒரு பறவை

வானிற்கும் இந்த மண்ணிற்கும் இடையே

பறந்துக்கொண்டே இருக்க -

அது நம் நினைவுகள்தாம்

என மனம் அறியாதோ !

மேலே வானமாய் நீ

கீழே மண்ணாய் நான்..

* தினேஷ்மாயா *

முடிவில்லா காவியம்

 


கையில்லா ரவிக்கை !!

கட்டுப்பாடில்லா என் மனம் !!!

முடிவில்லா காவியமாய் நம்

ஊடலும் கூடலும் !

* தினேஷ்மாயா *

விண்ணுலக தேவதை

 


விளக்கொளியில் கண்டேன்

விண்ணுலக தேவதையை !!


* தினேஷ்மாயா *

சிறைப்பட்ட மனிதன்


மண்புழுக்கள்கூட தன்

உடலை இழுத்து

இழுத்துக்கொண்டு ஓர்

இடம்விட்டு மற்றோர் இடம்

ஊர்ந்துகொண்டுதான்

இருக்கின்றன.

மனிதர்கள் மட்டும்தான்,

தன் இருப்பிடத்துக்கு வெளியே

உலகம் இல்லை என்று

நினைக்கிறார்கள்..


- மறைக்கப்பட்ட இந்தியா நாவலில் எஸ்.ராமகிருஷ்ணன்


* தினேஷ்மாயா *

In Science We Trust !!

 

அறிவியலே கடவுள்

ஆன்மிகத்தில் ஓடி கடவுளைத் தேடினேன்.. 

கிடைக்கவில்லை..

அறிவியலை நாடி கடவுளைத் தேடினேன்..

கண்டுகொண்டேன்....

In Science We Trust !!

* தினேஷ்மாயா *

ஈ.வே.ரா

பெரியார்

அனைவரும் இங்கே சமம்.  நீ வேறா நான் வேறா இருக்கக் கூடாது என்று நினைத்தவரே எங்கள் ஈ.வே.ரா..

- படித்ததில் பிடித்தது -

* தினேஷ்மாயா *

தலைகோதும் இளங்காத்து..


தலைகோதும் இளங்காத்து

சேதி கொண்டுவரும்

மரமாகும் வெதை எல்லாம்

வாழ சொல்லித்தரும்

ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்


கலங்காத கலங்காத

நீயும் நெஞ்சுக்குள்ள

இருளாத விடியாத

நாளும் இங்கு இல்ல

ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்


தலைகோதும் இளங்காத்து

சேதி கொண்டுவரும்

மரமாகும் வெதை எல்லாம்

வாழ சொல்லித்தரும்


கலங்காத கலங்காத

நீயும் நெஞ்சுக்குள்ள

இருளாத விடியாத

நாளும் இங்கு இல்ல


ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்

நிழல் நிக்குதே நிக்குதே


ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்

நிழல் நிக்குதே நிக்குதே

உன்ன நம்பி நீ முன்ன போகையிலே

பாத உண்டாகும்


நிக்காம முன்னேறு

கண்ணோரம் ஏன் கண்ணீரு

நிக்காம முன்னேறு

அன்பால நீ கை சேறு


நீல வண்ண கூர இல்லாத

நிலமிங்கு ஏது

காலம் எனும் தோழன் உன்னோடு

தடைகள் மீறு


மாறுமோ தானா நிலை

எல்லாமே தன்னாலே

போராடு நீயே

ஆறம் உண்டாகும் மண்மேலே


மீதி இருள் நீ கடந்தால்

காலை ஒளி வாசல் வரும்

தோளில் நம்மை ஏந்தி கொள்ளும்

நமக்கான நாள் வரும்


தலைகோதும் இளங்காத்து

சேதி கொண்டுவரும்

மரமாகும் வெதை எல்லாம்

வாழ சொல்லித்தரும்


கலங்காத கலங்காத

நீயும் நெஞ்சுக்குள்ள

இருளாத விடியாத

நாளும் இங்கு இல்ல


ரொம்ப பக்கம்தான் பக்கம்தான்

நிழல் நிக்குதே நிக்குதே

உன்ன நம்பி நீ முன்ன போகையிலே

பாத உண்டாகும்


நிக்காம முன்னேறு

கண்ணோரம் ஏன் கண்ணீரு

நிக்காம முன்னேறு

அன்பால நீ கை சேறு


நிக்காம முன்னேறு

கண்ணோரம் ஏன் கண்ணீரு

நிக்காம முன்னேறு

அன்பால நீ கை சேறு


படம்: ஜெய்பீம்

வரிகள் : ராஜூமுருகன்

குரல்: பிரதீப் குமார்

இசை: ஷான் ரோல்டன்


பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு தன்னம்பிக்கையூட்டும் பாடல் என் மனதை தொட்டிருக்கிறது. இசை, வரிகள், குரல் எல்லாம் கச்சிதமாக பொருந்தி என் மனதில் தென்றலாய் வருடிச்செல்கிறது. Loop-ல் அதிகம் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் இந்தப்பாடலை.


* தினேஷ்மாயா *

Homo sapiens

Thursday, December 23, 2021

 

Dear Mother Nature,

Homo sapiens is a failure model..

- DhineshMaya