In you !!!

Monday, July 31, 2017


காபூல் நகரின்
சீர் எல்லாம்
அணில் திருடுகிறது
பேஷா !!

#புரிகிறதா?

* தினேஷ்மாயா *

நாமிருவரும் !!


நாமிருவரும் -

எப்போது காதலிக்க தொடங்கினோம்

என தெரியவில்லை;

எந்த நொடியில் குழந்தை தூங்கியது என

தாய் அறிவாளா என்ன ?

#நன்றி: இணையம்

* தினேஷ்மாயா *

இதை சொல்லியே ஆகனும்


" இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள்..

காதல் பிறந்திருக்கிறது !! "

இதை நான் மனதார சொல்லும் நேரம் வந்துவிட்டது..

( தபு சங்கர் - அவர்களின் நூல் ஒன்றின் தலைப்பு இது)

* தினேஷ்மாயா *

மாயாஜாலம்


நீ கேட்கிறாய்..

இப்போதெல்லாம் என் வலைப்பக்கத்தில்

பதிவுகள் அதிகம் இருப்பதில்லையே, ஏன்? என்று..

இதுநாள்வரை, நீ யாரென்று தெரியாமல்

உனக்காக பதிவுகளை இங்கே எழுதிவந்தேன்..

இப்போது நீ "என் மாயா" வந்துவிட்டதால்,

என் மனதில் இருப்பதெல்லாம்

உன்னிடமே பேசிவிடுகிறேன்..

* தினேஷ்மாயா *

யாருடைய இதயம்?


அது யாருடைய இதயம்,

யாருக்கு அந்த இதயம் என்று கேட்கிறாய்!

பதில் தெரிந்துக்கொண்டே,

கேள்வி கேட்பவள்தானே நீ!!

அது என் இதயம்தான் என்பதும்

அது என்றுமே உனக்காகத்தான் என்பதும்

உனக்குதான் எப்போதோ தெரியுமே கண்ணே !!

* தினேஷ்மாயா *

KD calls KB !!

Saturday, July 29, 2017


* தினேஷ்மாயா *

The only change !


Hey KD.. Pls note it..

This is the only change I want to bring in your life..

And I mean it..

* தினேஷ்மாயா *

சிவசக்தி


என் சக்தியை

சிவனாகிய என்னுள் தேடினேன்..

என் தேடலின் பயனாய்

நீ கிடைத்தாய் !!

* தினேஷ்மாயா *

மின்னலே!



மின்னல் போல வந்து வந்து போகிறாய்..

மின்னலே ! என் பார்வையை பறித்திடாதே !

உன்னைக் காணவே கண்கள் கொண்டுள்ளேன்..

* தினேஷ்மாயா *

v.i.P...

Friday, July 28, 2017


* தினேஷ்மாயா *

ஆண்டவன் கட்டளை

Thursday, July 27, 2017



இது ஆண்டவன் கட்டளை !!

* தினேஷ்மாயா *

கொள்ளைக்காரி


போகிறபோக்கில் திரும்பி பார்ப்பது ஏனோ ?

நீ என்னை கடந்து செல்லும்போதே

பாதி கொள்ளை அடித்துவிட்டாய் என்னை..

மிச்சமிருக்கும் மீதியையும் கொள்ளைக்கொள்ள

திட்டமிடுகிறாயோ?

* தினேஷ்மாயா *

எப்படி மறப்பேன்?


அவள் கேட்டாள்..

நாம் பேசாமலிருந்தால் என்னை மறந்துவிடுவாயோ? என்று -

போடி KD !
உன் பெயர், உன் முகம், நீ யார் இப்படி எதுவுமே தெரியாமலே உனக்கொரு பெயர் வைத்து 8 ஆண்டுகளாக உன் நினைவில் வாழ்ந்து வருகிறேன்..

பேசாமலிருந்தால் மறந்துவிடுவேனா என்பது என்னிடம் கேட்பது அர்த்தமற்றது..

* தினேஷ்மாயா *

நாட்டியம்

Wednesday, July 26, 2017


The most happiest part of the life is,

Seeing your woman achieving her dreams and vision - and

You're encouraging and supporting her !!

என் வெற்றிக்குப்பின் என்னவள் இருப்பாள்..

என்னவளின் வெற்றிக்குப்பின் நான் இருப்பேன் !

* தினேஷ்மாயா *


I loved this post..

Monday, July 24, 2017

#shared

* தினேஷ்மாயா *

உணர்வுகள் போதாதா


நாம் பேசிக்கொள்ளக்கூடாதாம் !

சில நாட்களுக்கு ....

அவர்களுக்கு புரியவில்லை - நாம்,

வார்த்தைகள் இல்லாமலும்

பார்த்துக்கொள்ளாமலும்

தொடர்பில் இல்லாமலும்கூட

பேசிக்கொண்டிருக்கிறோம் என்று..

பேசிக்கொள்ள வார்த்தைகள் அவசியமா என்ன ?

உணர்வுகள் போதாதா கண்ணே ?

* தினேஷ்மாயா *

பேசக்கூடாது !


பார்க்கும் பார்வை நீ

என் வாழ்வும் நீ

என் கவிதை நீ

பாடும் ராகம் நீ

என் நாதம் நீ

என் உயிரும் நீ
___________

காலைப் பனியும் நீ

கண்மணியும் நீ

என் கனவும் நீ

மாலை மயக்கம் நீ

பொன் மலரும் நீ

என் நினைவும் நீ
___________

#பேசக்கூடாது !

* தினேஷ்மாயா *

மணமாலையும் மஞ்சளும் சூடி


மணமாலையும் மஞ்சளும் சூடி

புது கோலத்தில் நீ வரும் நேரம்

#மணமாலையும் மஞ்சளும் சூடி

* தினேஷ்மாயா *

கொஞ்சம் கண்ணெடுத்து பாரு !!



சிறு ஓடையில் ஒரு ஓரமா

மனசோட ஒரு காதல்

மெதந்தோடுதடா !

உனை பார்த்ததும் வழி ஓரமாகொஞ்சம் கண்ணெடுத்து பாரு !!

உயிரோட ஒரு பாதி

கழண்டோடுதடா !

என் ஆச ரொம்ப பாவம்

கொஞ்சம் கண்ணெடுத்து பாரு !!

நீ ரோச பார்வை வீச

மதிகெட்டு திரியும் மதிய பாரு !

#ஹே_சண்டக்காரா

* தினேஷ்மாயா *

விக்ரம் வேதா


விக்ரம் வேதா..

படம் நல்லா இருக்கு...

அதுவும், மாதவன் & ஷ்ரத்தா ஜோடியின் நடிப்பு அருமை..

வழக்கம்போல் விஜய் சேதுபதி பிண்ணியிருக்கிறார்..

பிண்ணனி இசை அருமை.

பாடல்கள் ஓ.கே.

சில இடங்களில் வசனம் மிக அருமை.

சண்டை காட்சிகள் 'எப்போதும் போல' ரகம்தான்.

எப்படியிருந்தாலும் சரி...

படம் நல்லா இருக்கு..

* தினேஷ்மாயா *

ம்...



உன் மெய்யெழுத்துக்கள் இன்று முதல் 17 மட்டுமே...

ம் - எனக்கு தந்துவிட்ட காரணத்தால் !!

* தினேஷ்மாயா *

S !!



From now on, my english language has oly 25 alphabets.

I gave my "S" to her 😇

* தினேஷ்மாயா *

Yes !


The day has come !!

* தினேஷ்மாயா *

வாழ்த்துக்கள் !

Sunday, July 23, 2017



தேவதையை பெற்றெடுத்த தேவதைக்கு !

பிறந்தநாள் இன்று !

* தினேஷ்மாயா *

அணில் கடித்த பழமே ;-)



அணில் கடித்த பழம் இனிக்குமாம்..

எப்போது உன் இதழை அணில் கடித்ததடி ?!

* தினேஷ்மாயா *

உன் மூச்சுக்காற்று



அவள் சொன்னாள்..

" நீ உயிர்வாழ உணவு, உறக்கம் ஏதும் தேவையில்லை. இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் காற்று ஒன்றே போதும்" என்று...

அது கொஞ்சம் உண்மைதான்.
பிரபஞ்சத்தின் காற்று வேண்டாம்.

உன் ஒருத்தியின் மூச்சுக்காற்று போதும் கண்ணே !!

* தினேஷ்மாயா *

காதலும் பிறக்கும்


சிவ சிவ என்றிட
சங்கடங்கள் தீரும்
சிவ சிவ என்றிட
மங்கலங்கள் சேரும்
சிவ சிவ என்றிட
வல்வினைகள் ஓடும்
சிவ சிவ என்றிட
நல்வினைகள் நாடும்
சிவ சிவ என்றிட
காதலும் பிறக்கும் !!!

#அன்ன-பூர்ணி

* தினேஷ்மாயா *

நேரம் போவது தெரியவில்லை


அது என்னவோ தெரியவில்லை..

உன்னுடன் பேசும்போது மட்டும், நேரம் போவதே தெரியவில்லை. நேரத்தை பார்க்கும் எண்ணமே வருவதில்லை..

..... because you make me happy

* தினேஷ்மாயா *

மூன்றாவது மனிதன்?

Saturday, July 22, 2017


அவள் சொல்கிறாள் !!

மூன்றாவது மனிதர்கள்தாமே நாம் என்று !

உனக்கு தெரியவில்லை ! நான் மூன்றாவது மனிதர்கள் இல்லை. நம்மிருவருக்கும் முன்னமே பரிச்சயம் இருக்கிறது. நாம் இதற்கு முன்னர் ஒன்றாக இருந்துள்ளோம். 

புரியவில்லையா !?

பிரபஞ்சமானது, பெரு வெடிப்பு நடக்கும் முன்னர், சுமார் 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், எல்லாம் ஒற்றைப்புள்ளியில் சுருங்கியிருந்தது. அந்த ஒற்றைப்புள்ளி வெடித்துதான், இந்த பிரபஞ்சமே உருவானது. அப்படியானால், நாமும் அந்த ஒற்றைப்புள்ளியில் இருந்துதான் வந்துள்ளோம் !

ஆம். சுமார் 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னமே நாமிருவரும் ஒன்றாக இருந்துள்ளோம். ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் ஆகியுள்ளோம். இப்போது சொல்லேன் ?

நாமிருவரும் மூன்றாவது மனிதர்களா ?

* தினேஷ்மாயா *

போடி KD



அவள்: என் பிறந்தநாள் வரை நீ கூட இருப்பாயா ?

அவன்: போடி KD !! நான் உன் வாழ்நாள் முழுவதும் கூட இருப்பேன் என்று ஏன் இன்னும் உனக்கு புரியவில்லை ?!

* தினேஷ்மாயா *

வலிக்குதடி..

Friday, July 21, 2017


இன்று நான் - கீழே விழுந்து அடிப்பட்டதுகூட,

அவ்வளவு வலிக்கவில்லை..

ஆனால்,

இன்று நீ - உரைத்த - உன் ஒற்றை வார்த்தை

அத்துனை வலிக்குதடி..

* தினேஷ்மாயா *

ஓகே ஜானு !!


பிரிந்தாலும் பிரிவோமே.. புரியாமல் இணைவோமே..

சில நேரம் சிரிப்போமே.. பல நேரம் பறப்போமே..

#மெண்டல்_மனதில்

* தினேஷ்மாயா *

பெயர் என்னவோ ?!




உன்னால் நான்,

உன்னுள் தொலைந்தேன் !!

தொலைந்த என்னை,

உன்னுள்ளே கண்டுக்கொண்டேன் !!

என்னை கண்டபின்பும், வெளியே

மீண்டுவர மனமில்லையே !

இந்நிலைக்கு பெயர் என்னவோ !?

P.C.: Twitter / Internet

* தினேஷ்மாயா *

Weight !

BTW..

Am losing...

You're gaining...

It Seems !!

 * தினேஷ்மாயா *

KD !! ;-) :-D




Mic-1 calling Mic-2..

Over!! Over!!

KB calling me KD

Over!! Over!!

* தினேஷ்மாயா *

Count Down Starts !!

Thursday, July 20, 2017



7-0.. 6-8.. 6-9.. 6-6.. 6-7.. 6-4.........

Count Down Starts !!

* தினேஷ்மாயா *

எப்பிறப்பிலும்

Wednesday, July 19, 2017


பிறவா நிலை எனக்கு அருள்வாய் ஈசா..

பிறந்தாலும் , உனை நான் மறவா நிலை அருள்வாய் ஐயனே..

* தினேஷ்மாயா *

ராமன் தேடிய சீதை !!



மழை நின்ற பின்பும் தூரல் போல
உனை மறந்த பின்பும் காதல்

அலை கடந்த பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்

"எனக்கும் காதல் பிறந்திருக்கே
அதற்கு உன் பேர் வைக்கட்டுமா ஹோய்

எனக்குள் இதயம் தனித்திருக்கே
அதை உன்னுடன் சேர்க்கட்டுமா"

"  ராமன் தேடிய சீதை " திரைப்படத்தில் வரும் ஒரு பாடல் இது. இந்த பாடலும் இந்த வரிகளும் ஏனோ ரொம்ப பிடிச்சிருக்கு. இரண்டு தினங்களில் இப்பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று கணக்கே இல்லை. இதை நான் திரும்ப திரும்ப கேட்பதை பார்த்துவிட்டு நண்பர்கள் சிலர் குறும்பாகவும் நக்கலாகவும் விளையாட்டாகவும் கலாய்த்தார்கள். என்ன கூறினார்கள் என்று மற்றொரு பதிவில் பகிர்கிறேன். நேரம் நெருங்கிவிட்டது. உறக்கம் கண்ணை தழுவுகிறது. இரவு வணக்கம் !!

மீண்டும் சந்திப்போம் !

* தினேஷ்மாயா *

Dreams - Vision


I've got big DREAMS

have YOU got big VISION ?

#crazy_lil_lady

* தினேஷ்மாயா *

Ha ha. Yes ! She did !!

Exactly !!

She scared me !!

A Lil !!

* தினேஷ்மாயா *

Best Pair

Tuesday, July 18, 2017


a MAN with dreams

needs a WOMAN with vision !!

#shivu

* தினேஷ்மாயா *

KB


Yes ! She scared me a little..

At the very first instance !!!

* தினேஷ்மாயா *

ஒரு கோப்பைத் தேநீர்


எனக்கு இரு முரண்பட்ட பழக்கங்கள் இருக்கிறது. ஒன்று, நிறைய புத்தகங்கள் படிப்பேன். தமிழ், ஆங்கிலம் எதுவானாலும், சிறந்த நூல்களை தேர்ந்தெடுத்து படிப்பேன். இரண்டு, எந்த புத்தகமானாலும் பாதியோடு படிப்பதை நிறுத்திவிடுவேன். ஆனால், இந்த இரண்டாவது பழக்கத்தை நான் இன்றிலிருந்து கைவிடுகிறேன். இனி எந்த ஒரு புத்தகத்தை எடுத்தாலும் அதை முடித்துவிட்டுதான் அடுத்த புத்தகத்தை படிக்க வேம்டும் என்று ஒரு குறிக்கோள் கொண்டுள்ளென். 

என் அலுவலகத்தில் நூலகம் இருக்கிறது. எனக்கு என் அலுவலகத்தில் மிக பிடித்த விஷயம் இதுதான். ஒரு அரசு அலுவலகத்தில் நூலகம் வைத்திருப்பது. மதிய உணவு இடைவெளியில், அங்கு செல்வேன். நேற்று நூலகத்தில் இருந்து, ஓஷோ அவர்கள் எழுதிய " ஒரு கோப்பைத் தேநீர்" புத்தகத்தை எடுத்து வந்தேன். கொஞ்சம் தத்துவ அலைகள் அதிகமாக அடிக்கும்படியான புத்தகம்தான். இந்த புத்தகத்தை நேற்றே படிக்க தொடங்கிவிட்டேன். முடித்துவிட்டு இப்புத்தகத்தை பற்றி பகிர்கிறேன்..

இந்நூலில் இருந்து ஒரு பக்கம்.. உங்கள் பார்வைக்கு..

* தினேஷ்மாயா *

19 things - to do - for couples


1. Try Each Other's Hobbies
2. Try a New Hobby Together
3. Go On a Road Trip
4. Work on a Puzzle
5. Go for Dating ! Yes.. Dating with your hubby/wife!!
6. Just … Exist !
7. Snuggle !
8. Play a Game Together
9. Do crazy things often
10. Do Something Spontaneous
11. Improve Your Home
12. Get Caught in the Rain
13. Let Your Imaginations Run Wild Together
14. Unplug
15. Go for trekking
16. One Word: Use code words
17. Read to Each Other
18. Work on the Practical Things
19. Express childishness to eachother

* தினேஷ்மாயா *

குட்டி ரோபோ !




எந்திரன் திரைப்படத்தில் சிட்டி ரோபோ, சில நொடிகளில் ஒரு புத்தகத்தையே படித்து முடிக்கும். 

அப்படியொரு குட்டி ரோபோவை நேற்று கண்டேன் ! இவ்வளவு வேகமாகக்கூட படிக்க முடியுமா ? என்று என்னிரு புருவங்களை உயர்த்திவிட்டாள் !! அவளொரு மனுஷியா என்றும்கூட யோசித்தேன் !! பூதம் என்று சொன்னாலோ, தேவதை என்று சொன்னாலோ கோபித்துக்கொள்வாள், அதனால்தான் குட்டி ரோபோ என்றேன்..

இதுபோன்றதொரு வியப்பை வேறெவரும் எனக்கு தந்ததில்லை, இந்த குட்டி ரோபோவை தவிர !

* தினேஷ்மாயா *

அவனிடம் விட்டுவிடு



    உன் நம்பிக்கை முழுவதும் அவன் மீது வைத்துவிடு.. ஒருபோதும் உனக்கு ஏமாற்றம் என்பதே இருக்காது..

"ஓம்  #சிவ_சிவ# ஓம்"

* தினேஷ்மாயா *

ஆடியில காத்தடிச்சா...

Monday, July 17, 2017



இன்று ஆடி பிறந்தது. இன்றைய பொழுது மிகச்சிறப்பாக அமைந்தது. ஒவ்வொரு தமிழ்மாத பிறப்பிற்கும் சிவாலயம் செல்வதை சிலகாலமாக வழக்கமாக கொண்டுள்ளேன். அவ்வாறே இன்றும் அருகில் இருக்கும் அருள்மிகு பச்சைநாயகி உடனுறை பேரூர் பட்டீசுவரர் ஆலயம் சென்று தரிசித்து வந்தேன். 

  ஆடி மாதம் நன்றாக காற்று வீசி, ஐப்பசியில்.நல்ல மழை பொழிந்து மக்களின் தண்ணீர் தட்டுப்பாடு போக வேண்டும் என்று பொதுவான ஒரு வேண்டுதலை வைத்துவிட்டு வந்தேன். சரி ஆடி காற்று அம்மியையே நகர்த்துமாமே. எப்படிதான் இருக்கும் பார்த்துவிடலாம் என்று மொட்டை மாடியில் இன்று உறங்க வந்தேன். அறையில் இருக்கும் நண்பர்களை அழைத்தால், அனைவரும் பயப்படுகின்றனர். குளிர் தாங்க முடியாது, நான் வரமாட்டேன் என்றே எல்லோரும் சொன்னார்கள். அப்படி என்னதான் குளிர் அடிக்கப்போகிறது அதையும் ஒரு கை பார்த்துவிடலாம் என்று மொட்டைமாடிக்கு வந்துவிட்டேன். இதை மொட்டைமாடியில் இருந்துதான் பதிவு செய்கிறேன். மேலே இருக்கும் புகைப்படம், தொலைவில் தெரியும் அந்த ஒளி, மருதமலை முருகன் ஆலயத்தின் வெளிச்சம். இங்கே இருந்து அப்படித்தான் தெரியும். 

    அருமையான காற்று. கொஞ்சம் ஆளை சாய்க்கும் காற்றுதான். சில்லென்ற காற்று. அடடடடடா... இயற்கையின் அருமையான கொடையை மக்கள் ஏன் ஏற்க மறுக்கின்றனர் என்றுதான் புரியவில்லை. சரி, மற்றவர்கள் இரசிக்காவிட்டால் என்ன, நாம் இரசிப்போம் என்று துணைக்கு அதோ அங்கே தொலைவில் இருக்கும் என் நண்பன் மருதமலை முருகனை அழைத்துக்கொண்டேன். இன்னும் துணைக்கு இசையை அழைத்துக்கொண்டேன். 

நேரம் அதிகம் ஆகிவிட்ட காரணத்தால், இப்போதைக்கு விடைப்பெறுகிறேன்.

* தினேஷ்மாயா *

மழை நின்ற பின்பும்..


மழை நின்ற பின்பும் தூரல் போல
உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்
எனக்கும் காதல் பிறந்திருக்கே
அதற்கு உன் பேர் வைக்கட்டுமா ஹோய்
எனக்குள் இதயம் தனித்திருக்கே
அதை உன்னுடன் சேர்க்கட்டுமா

மழை நின்ற பின்பும் தூரல் போல
உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்


நீர் துளிகள் நிலம் விழுந்தால்
பூக்கள் மெல்ல தலை அசைக்கும்
என் மனதில் நீ நுழைந்தால்
மௌனம் கூட இசை அமைக்கும்
பூங்குயில்கள் மறைந்திருந்தால்
கூவும் ஓசை மறைவதில்லை
தாமரையாய் நான் இருந்தும்
தாகம் இன்னும் அடங்கவில்லை
வானும் இணைந்து நடக்கும்
இந்த பயணத்தில் என்ன நடக்கும்
வானம் இருக்கும் வரைக்கும்
இந்த வானவில் உன்னுடன் இருக்கும்
மழை துளி பனி துளி கலைந்த பின்னே
அது மறுபடி இரண்டென பிரிந்திடுமா


மழை நின்ற பின்பும் தூரல் போல
உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்


கண்ணிமைகள் கை தட்டியே
உன்னை மெல்ல அழைக்கிறதே
உன் செவியில் விழவில்லையா
உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே
உன்னருகே நான் இருந்தும்
உண்மை சொல்ல துணிவு இல்லை
கைகளிலே விரல் இருந்தும்
கைகள் கோர்க்க முடியவில்லை
உன்னை எனக்கு பிடிக்கும்
அதை சொல்வதில் தானே தயக்கம்
நீயே சொல்லும் வரைக்கும்
என் காதலும் காத்து கிடக்கும்
தினம் தினம் கனவில் வந்து விடு
நம் திருமண அழைப்பிதழ் தந்து விடு



மழை நின்ற பின்பும் தூரல் போல
உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உனை பிரிந்த பின்பும் காதல்
எனக்கும் காதல் பிறந்திருக்கே
அதற்கு உன் பேர் வைக்கட்டுமா ஹோய்
எனக்குள் இதயம் தனித்திருக்கே
அதை உன்னுடன் சேர்க்கட்டுமா

படம் : ராமன் தேடிய சீதை
இசை : வித்யா சாகர்
பாடியவர் : கல்யாணி

இன்று அதிகாலை, கோவை இரயில் நிலையத்தில் இருந்து வீடு வரும் வழியில் பேருந்தில் இந்த பாடல் ஒலித்தது. கேட்க சுகமாக இருந்தது. பாடலை பதிவிறக்கம் செய்து கேட்டேன். வரிகள் அத்துனை இனிமை. என் மனதிற்கு இந்த தருணத்தில் தேவையான வரிகளை போட்டு எழுதிய பாடல்போல நான் உணர்தேன். படத்தின் தலைப்பை பார்த்தேன். ராமன் தேடிய சீதை ! அட இதுவும் கூட, என் மனதின் தற்போதைய நிலைப்பாட்டிற்கு ஏற்றார் போல இருக்கிறதே என்று நினைத்துக்கொண்டு உள்ளூர மகிழ்ந்தேன்.. 


* தினேஷ்மாயா *