தக்காளி சட்னி

Tuesday, August 22, 2023

இங்கே அனைத்து மனிதர்களும், தங்களுக்கென்று ஒன்று நடந்தால் மட்டுமே அதை பெரிதாக நினைத்து எதிர்வினை ஆற்றுகிறார்கள். பிறருக்கு அது நடந்தால் அதை ஒரு விஷயமாகவே கருதுவதில்லை.

தான் செய்யும் தவறு பெரிதாக தெரியாது. ஆனால் அதே தவறை பிறர் செய்தால் அது பூதாகாரமாக ஆக்குவார்கள். இது மனித இயல்பு என்பதை உணர்ந்தப் பின்னர், நிம்மதி என் மனதில் ஆட்கொண்டுவிட்டது.

இந்த  மனிதர்களே இப்படித்தான் என்கிற ஞானம் வந்தாகிவிட்டது. ஆகையால், நிம்மதியும் வந்தாகிவிட்டது.

இதை உணர்ந்து நீங்களும் நிம்மதி கொள்வீர்களாக ....

* தினேஷ்மாயா *