வரட்டுமே !!

Monday, May 24, 2021

 நான் வாழ்க்கையை முழுவதுமாக வாழ்ந்துவிட்டேனா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், இப்போழ்தே மரணம் என்னைத் தழுவினாலும் இவ்வுலகை விட்டு விடைப்பெற என் மனம் தயாராகிவிட்டது. வாழ்க்கையின் மீது துளியும் வெறுப்பில்லை. உலகின் மீதும், உலகத்து மானிடர்கள் மீதும்கூட எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை. வாழ்க்கை என்பதன் அர்த்தம் கொஞ்சம் கொஞ்சமாக எனக்குப் புரிய துவங்கியிருக்கிறது. அதனால், நான் கண்ட உண்மைகளை வெளியில் சொல்ல முடியாமல், எவருடனும் பேசுவதில் நாட்டம் காட்டாமல் இருக்கிறேன். உண்மை என்னவென்று உணர்ந்தவன், அதை பிறருக்கு சொல்ல விரும்பமாட்டான். ஏனென்றால், இங்கே இருப்பவர்கள் எவருக்கும் உண்மை என்பது ஒரு கசப்பான விடயம். அதை கேட்கும் பக்குவமோ, நேரமோ அல்லது பொறுமையோ இல்லை. 

மனம் செம்மையாகிவிட்ட காரணத்தால், மரணம் ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை. மரணம்தானே. வந்தால் வரட்டுமே ! என்று மனம் தயாராகிவிட்டது !!

* தினேஷ்மாயா *

0 Comments: