மனிதனை மதிப்போம்

Thursday, December 06, 2018




சமீபத்தில் எனக்கு ஒரு குறுந்தகவல் வந்தது.

அது கொஞ்சம் பெரிய செய்தி. ஆனால் அதில் சொல்லப்பட்ட விஷயம், "தாயை பழித்தாலும் தண்ணீரை பழிக்காதே."

இதுதான் எனக்கு கொஞ்சம் கோபத்தை வரவழைத்தது. இந்த கருத்தை யார் சொல்லியிருப்பார்கள்? மனிதனுக்கு மரியாதை தராமல் தண்ணீருக்கு மரியாதையும் முக்கியத்துவமும் தருவதை எப்படி பார்ப்பது ?

மனிதனை மதிக்க முதலில் இந்த சமூகத்திற்கு சொல்லிகொடுப்போம். அதன்பிறகு, மாட்டையும், தண்ணீரையும் மதிக்க சொல்லிக்கொடுப்போம். அனைத்து உயிர்களும் ஒன்றுதான். ஆனால், சகமனிதனை பழித்து இன்னபிறவற்றை துதிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ?

* தினேஷ்மாயா *

0 Comments: