திருமகள்..

Monday, December 31, 2018




         இன்று காலையில் அலுவலகம் வரும் வழியில் ஒரு காட்சியை கண்டேன். ஒரு ஆட்டோவில் 6 பேர் பயணித்திக்கொண்டிருந்தனர். பின்னிருக்கையில், பெண்கள் மற்றும் குழந்தைகள். முன்னிருக்கையில் ஓட்டுனருக்கு அருகே அந்த குடும்பத்தலைவர் அமர்ந்திருந்தார். இது எங்கும் நடக்கும் விஷயம்தான். ஆனால், பின்னிருக்கையில் அமர்ந்திருக்கும் ஒரு குட்டி குழந்தை, சுமார் 3 முதல் 4 வயது இருக்கும் அந்த சுட்டிக்குழந்தை, முன்னிருக்கையில் ஓட்டுனருடன் அமர்ந்திருக்கும் தன் தந்தையை பிடித்துக்கொண்டிருந்தது. அவர் கீழே விழுந்துவிடக்கூடாது என்பதற்காக. 

      அந்த குழந்தையின் எடை சுமார் 10-15 கிலோ இருக்கலாம். அந்த தந்தையின் எடை சுமார் 70 கிலோ இருக்கலாம். 70 கிலோ எடை இருக்கும் தந்தையை அந்த 15 கிலோ எடை இருக்கும் குழந்தை பிடிப்பதால் எந்த பலனும் இல்லைதான். ஆனால், அந்த தந்தையை கீழே விழாமல் பிடித்திருப்பது அந்த குழந்தையின் பாசம்தான். அக்காட்சி எனக்கு நெகிழ்ச்சியை தந்தது.


* தினேஷ்மாயா *

0 Comments: