2019 வருக வருகவே...

Monday, December 31, 2018



        2018-ம் ஆண்டு வழக்கத்தைவிடவும் எனக்கு மிக சிறப்பான ஆண்டு. என் மாயா எனக்கு கிடைத்த ஆண்டு. தனியொருவனாய் சுற்றி திரிந்த எனக்கு அன்பால் கடிவாளம் போட்டாள் என்னவள். என் வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை என்னைக் காணச்செய்த ஆண்டு. சிறப்பான குடும்ப சூழல், சற்று பிரிந்திருந்தாலும் அன்பு கொஞ்சமும் குறையாத தோழி/மனைவி, புதிதாய் எனக்கு கிடைத்த அன்பான குடும்பம்,  அலுவலகத்தில் என் அடுத்த உயர்பதவிக்கான அடிக்கல், புதிதாய் இடமாற்றம் செய்யப்பட்ட சிறப்பான அலுவலகம், வேலைப்பளுவை பகிர்ந்துக்கொள்ளும் சக பணியாளர்கள், அலுவலர், இறைவனை தினம் தினம் காணும்படியான ஒரு இடத்தில் வீடு, எனக்கு அமைந்த அனைத்து சூழலும் இறையருளால் மிகச்சிறப்பான ஆண்டாக 2018-ஐ மாற்றியது.

       2019-ல் காணவிருக்கும் மிகப்பெரிய உயர்வும், வளர்ச்சியும் அதில் நான் கற்றுக்கொள்ளும் பாடங்களும் இன்னும் என்னை பக்குவப்படுத்தும் என ஆவலுடன் 2019-ஐ எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறேன்.

        2018-ல் தெரிந்தும் தெரியாதும் செய்த சிறு மற்றும் பெரிய தவறுகள் அனைத்தையும் மாற்றிக்கொண்டு புதிய மனிதனாய் பிறக்கப்போகும் 2019-ல் நானும் புதியவனாய் பிறந்து நல்ல மனிதனாய் இந்த சமூகத்திற்கு என் பணியை செய்வேன்.

            2018-ல் என் வலைப்பக்கத்தில் அதிகம் கவனம் செலுத்த முடியவில்லை. இனி 2019-ல் வழக்கம்போல் என் வலை என் பதிவுகளால் நிரம்பியிருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.


அன்புடன்

* தினேஷ்மாயா *

0 Comments: