மானுட பதர்கள் !

Wednesday, May 23, 2018

   சமீபத்தில் இணையத்தில் உலாவரும்போது சில அரிய விஷயங்களை கண்டேன். உங்கள் வீட்டில் அதிக செல்வம் சேர வேண்டுமா - இந்த மந்திரத்தை சொல்லுங்கள். இந்த யந்திரத்தை பூசை செய்யுங்கள். இந்த இடத்தில் இந்த பொருளை வையுங்கள். பணத்தை ஈர்க்கும் அதிசய மூலிகை. பணம் உங்கள் பாக்கெட்டில் வந்து விழுந்துக்கொண்டே இருக்கும். நீங்கள் செய்ய வேண்டியது இது மட்டும்தான்....

இப்படி பல கவர்ச்சி வாசகங்களோடு பல வீடியோக்களை காண நேர்ந்தது. ஆக மொத்தம் ஒன்றை புரிந்துக்கொண்டேன். இதில் எவனும், உழைத்தால் பணம் வரும் என்று சொல்லவில்லை. குறுக்கு வழியில் உழைக்காமல் கோடீஸ்வரன் ஆவது எப்படி என்றே சிந்திக்கும் கூட்டம் அதிகமாகிவிட்டது என்பதை உணர முடிந்தது.

உழைப்பே உயர்வு..

உழைக்காமல் சேரும் செல்வம், சொல்லாமலே சென்றுவிடும்..

இந்த உண்மை நம் மானுட பதர்களுக்கு எப்போது புரியும் ?

* தினேஷ்மாயா *

0 Comments: