என்னவளே !

Wednesday, March 15, 2017





என்னவளுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான்.

என் வலைப்பக்கத்தை நீ படித்து முடிக்கையில் உனக்கொன்று புரிந்திருக்கும். என் வாழ்வில் காதலி ஒருத்தி இருந்தாள் என்று. ஆனால், நான் அதை உனக்கு உணர்த்த விரும்பவில்லை. எனக்கு காதலி இருந்தாள் என்பதைவிட, என்னுள் ஓர் ஆழமான அழகான காதல் இருந்தது என்பதைதான் உனக்கு உணர்த்த விரும்புகிறேன். அந்த காதலை அந்த குறுகிய காலத்தில் அவள்மீது வைத்திருந்தேன். அவள் பிரிந்த பின்னர் சில காலம் காதலே வேண்டாம் என்றிருந்தேன். பின்னர், காதல் இல்லாமல் எவராலும் இருக்க முடியாது என்று உணர்ந்தபின்பு, வரப்போகும் உனக்காக என் காதலை வளர்த்து வருகிறேன். உண்மையான அன்பின் வெளிப்பாடு என்பது ஒளிவு மறைவு இல்லாத உறவே. என்னை உனக்கு பிடிக்கும் முன், என்னை புரிந்துக்கொள். என்னை புரிந்துக்கொள்ளும் அனைவருக்கும் என்னை பிடிக்கும். நீ என்னை புரிந்துக்கொள்ளவே என் வலைப்பக்கத்தை செதுக்கிக்கொண்டிருக்கிறேன். உன்னிடம் மறைக்க எதுவும் இல்லை எனக்கு. வெறும் மனைவியாக உன்னை நான் நினைப்பேனேயானால் இதை மறைத்திருப்பேன். என்னுயிர் தோழி நீ. உன்னிடம் மறைக்க எதுவுமில்லை என்னிடம். எல்லாம் படித்துவிட்டு, என்னை கொஞ்சமாச்சும் புரிந்துகொள்ள முடிந்தால், பதில் சொல் !

* மாயாவிற்காக காத்திருக்கும் நான் *

* தினேஷ்மாயா * 

0 Comments: