அருள்புரிவாய் ஈசா !

Friday, March 31, 2017




என் வாழ்நாளின் ஒரே ஆசை, பேராசை எல்லாம் ஒன்றுதான்..

பலமுறை திருவண்ணாமலை கிரிவலம் சென்று வந்திருக்கிறேன். நினைத்தபோது கிளம்பி ஈசனை தரிசித்து, இடைக்காடரின் ஆசிப்பெற்று, கிரிவலம் வந்திருக்கிறேன். ஆனால், ஒவ்வொரு மாதமும் கிரிவலம் செல்லும் பழக்கத்தை கடந்த 10 மாதங்களாக கடைப்பிடித்து வருகிறேன். எவ்வளவு வேலை இருந்தாலும், நான் எங்கிருந்தாலும், மாதம் ஒருமுறை திருவண்ணாமலை கிரிவலம் வந்து விடுவேன். சில நேரங்களில் ஈசன், ஒரே மாதத்தில் என்னை இரண்டுமுறை எல்லாம் கிரிவலம் வரும்படி வரம் அருள் செய்துள்ளார். என் வாழ்நாள் ஆசை ஒன்றுதான். நான் இவ்வுலகைவிட்டு ஈசனை அடையும் அந்த நொடிவரை, ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலையை கிரிவலம் வரவேண்டும் என்பது மட்டுமே. அதற்கு ஏற்ப எனக்கான வேலையையும், உடல் நலத்தையும், செல்வத்தையும், அன்பும் பண்பும் கொண்ட மனையாளையும் ஈசன் தருவார் என்றும் எனக்கு தெரியும். அவனருளாலே அவன்தாழ் வணங்கி அவனை நினைத்தே உருகி, அவன் என்னை ஆட்கொண்டு, அவன் எம்மை அவனடி சேர்க்கும்வரையில், மலையே உருவான என் ஈசனை வலம்வந்துக்கொண்டே இருக்க வேண்டும்.


அருள்புரிவாய் ஈசா !

* தினேஷ்மாயா *

0 Comments: