ராஜா என்பார் மந்திரி என்பார்

Thursday, January 24, 2019



ராஜா என்பார் மந்திரி என்பார்
ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ
ஒரு உறவுமில்லை அதில் பிரிவுமில்லை
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்

ராஜா என்பார் மந்திரி என்பார்
ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ

கல்லுக்குள் ஈரமில்லை
நெஞ்சுக்குள் இரக்கமில்லை
ஆசைக்கு வெட்கமில்லை
அனுபவிக்க யோகமில்லை
கல்லுக்குள் ஈரமில்லை
நெஞ்சுக்குள் இரக்கமில்லை
ஆசைக்கு வெட்கமில்லை
அனுபவிக்க யோகமில்லை

பைத்தியம் தீர வைத்தியம் இல்லை
உலகில் எனக்கு ஒரு வழியில்லை

ராஜா என்பார் மந்திரி என்பார்
ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ

நிலவுக்கும் வானமுண்டு
மலருக்கும் வாசமுண்டு
கொடிக்கொரு கிளையுமுண்டு
எனக்கென்று என்னவுண்டு
நிலவுக்கும் வானமுண்டு
மலருக்கும் வாசமுண்டு
கொடிக்கொரு கிளையுமுண்டு
எனக்கென்று என்னவுண்டு

ஏன் படைத்தானோ இறைவனும் என்னை
மனதில் எனக்கு நிம்மதி இல்லை

ராஜா என்பேன் மந்திரி என்பேன்
ராஜ்ஜியம் உனக்கு உண்டு
ஒரு ராஜகுமாரன் உண்டு
நல்ல உறவுமுண்டு அதில் பரிவுமுண்டு
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுவதேன் நாளும்

தெய்வத்தில் உன்னைக் கண்டேன்
தினம்தினம் பூஜைசெய்தேன்
நிலவுக்குக் களங்கமென்று
உறவுக்குள் விலகி நின்றேன்
தெய்வத்தில் உன்னைக் கண்டேன்
தினம்தினம் பூஜைசெய்தேன்
நிலவுக்குக் களங்கமென்று
உறவுக்குள் விலகி நின்றேன்

மயக்கமும் ஏனோ கலக்கமும் ஏனோ
உலகில் உனக்கு சரித்திரம் உண்டு

ராஜா என்பேன் மந்திரி என்பேன்
ராஜ்ஜியம் உனக்கு உண்டு
ஒரு ராஜகுமாரன் உண்டு
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுவதேன் நாளும்
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுவதேன் நாளும்

திரைப்படம்: புவனா ஒரு கேள்விக்குறி (1977)
இசை: இளையராஜா
குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
வரிகள்: பஞ்சு அருணாசலம்


* தினேஷ்மாயா *

0 Comments: