பிரிவொன்றை சந்தித்தேன்....

Wednesday, April 14, 2010









பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று
நீ என்ற தூரம் வரை நீளாதோ எந்தன் குடை
நான் என்ற நேரம் வரை தூ்ராதோ உந்தன் மழை
ஓடோடி வாராயோ அன்பே அன்பே அன்பே அன்பே
அன்பே அன்பே அன்பே அன்பே..

பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று

ஒரு வரி நீ .. ஒரு வரி நான்..
திருக்குறள் நாம் உண்மை சொன்னேன்
தனிதனியே பிரித்து வைத்தால்
பொருள் தருமோ கவிதை இங்கே

உன் கைகள் என் பேரால் துடைக்கின்ற கை குட்டை
நீ தொட்ட அடையாளம் அழிக்காது என் சட்டை
என்னை நானே தேடி போனேன்
பிரிவினாலே நீயாய் ஆனேன்

பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று
நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று

கீழ் இமை நான் மேல் இமை நீ
பிரிந்ததில்லை கண்ணே கண்ணே
மேல் இமை நீ பிரிந்ததனால்
புரிந்துகொண்டேன் காதல் என்றே

நாம் பிரிந்த நாளின் தான்
நம்மை நான் உணர்ந்தேனே
நாம் பிறந்த நாளில் தான்
நம் காதல் தெரிந்தேனே
உள்ளம் எங்கும் நீயே நீயே
உயிரின் தாகம் காதல் தானே..

பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று

நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று
நீ என்ற தூரம் வரை நீளாதோ எந்தன் குடை
நான் என்ற நேரம் வரை தூ்ராதோ உந்தன் மழை
ஓடோடி வாராயோ அன்பே அன்பே அன்பே அன்பே
அன்பே அன்பே அன்பே அன்பே..

படம் : பிரியாத வரம் வேண்டும்..


ரொம்ப அருமையான பாடல்.. காதலில் இருப்பவர்களுக்கும் காதலை பிரிந்தவர்களுக்கும் இந்த பாடல் நிச்சயம் பிடிக்கும்...

 - தினேஷ்மாயா

0 Comments: