அன்பென்ற மழையிலே

Thursday, April 01, 2010













அன்பென்ற மழையிலே
அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே!

வைக்கோலின் மேலொரு 
வைரமாய், வைரமாய்
வந்தவன் மின்னினானே!

விண்மீன்கள் கண்பார்க்க
சூரியன் தோன்றுமா
புகழ் மைந்தன் தோன்றினானே!

கண்ணீரின் காயத்தை
செந்நீரில் ஆற்றவே
சிசுபாலன் தோன்றினானே!

அன்பென்ற மழையிலே
அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே!

அதிரூபன் தோன்றினானே....


போர்க்கொண்ட பூமியில்
பூக்காடு காணவே
புகழ்மைந்தன் தோன்றினானே!
புகழ்மைந்தன் தோன்றினானே....

கல்வாரி மலையிலே
கல்லொன்று பூக்கவும்
கருணை மகன் தோன்றினானே!

நூற்றாண்டு இரவினை
நொடியோடு போக்கிடும்
ஒளியாகத் தோன்றினானே!

இரும்பான நெஞ்சிலும்
ஈரங்கள் கசியவே
இறை பாலன் தோன்றினானே!

முட்காடு எங்கிலும்
பூக்காடு பூக்கவே
புவிராஜன் தோன்றினானே!


அன்பென்ற மழையிலே
அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே!
அதிரூபன் தோன்றினானே....

வைக்கோலின் மேலொரு 
வைரமாய், வைரமாய்
வந்தவன் மின்னினானே!
வந்தவன் மின்னினானே!


அன்பென்ற மழையிலே
அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே!
அதிரூபன் தோன்றினானே....

வைக்கோலின் மேலொரு 
வைரமாய், வைரமாய்
வந்தவன் மின்னினானே!
வந்தவன் மின்னினானே!


படம் : மின்சாரக் கனவு
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்: அனுராதா ஸ்ரீராம்




அன்புடன் -


தினேஷ்மாயா 





0 Comments: