என்ன செய்வேனடி?

Thursday, April 01, 2010




எப்படி முடிந்தது..???
உன்னால் மட்டும்
எப்படி முடிந்தது..???
என் இதயத்தின் துடிப்பாக 
உன் இதயத்தை
கொடுத்துவிட்டு
என்னை மறந்துபோக !!!!
உனக்கு மட்டுமா?
இல்லை இல்லை
எனக்கே என்னை
கிடைக்காமல்
செய்து விட்டாயே??
நீ உடைத்து போன
என் இதயத்தை ஒட்டவைக்க
இன்றும் முயற்சிக்கிறேன்
முடியவில்லை
பாதியை வைத்து கொண்டு
என்ன செய்வேன்?
மீதி இன்னமும்
உன்னில் இருக்கையில்..!!!


-யாரோ யாருக்காகவோ...


இதயத்தை தொலைத்தவனாய் -

தினேஷ்மாயா 

0 Comments: