காற்றின் மொழியே....

Saturday, April 10, 2010




காற்றின் மொழியே ஒலியா இசையா
பூவின் மொழி நிறமா மணமா
கடலின் மொழி அலையா நுரையா
காதல் மொழி விழியா இதழா
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதருக்கு மொழியே தேவையில்லை

காற்றின் மொழியே ஒலியா இசையா
பூவின் மொழி நிறமா மணமா    

காற்று வீசும் போது திசைகள் கிடையாது
காதல் பேசும் போது மொழிகள் கிடையாது
பேசும் வார்த்தைப் போல மௌனம் புரியாது
கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது
உலவி திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது
காதல் பேசும் மொழியெல்லாம் சப்த கூட்டில் அடங்காது
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்      
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதருக்கு மொழியே தேவையில்லை
காற்றின் மொழியே....

வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்
வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்
பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்
ஓசை தூங்கும் ஜாமத்தில் உச்சி மீன்கள் மொழியாகும்
ஆசை தூங்கும் இதயத்தில் அசைவுக் கூட மொழியாகும்
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதருக்கு மொழியே தேவையில்லை
காற்றின் மொழி....

படம் : மொழி
இசை : பரத்வாஜ்


உலகில் இருக்கும் அனைவருக்கும் பொதுவான மொழி இசைதான்.. மனிதன் மொழியை கண்டுபிடிக்காத காலத்தில் சைகை மற்றும் ஓசைகளின் மூலமே பேசிக் கொண்டான்.. 

மனதை லேசாக்கும் பாடல் இது.. எவ்வளவு அருமையான பாடல் இது தெரியுமா.. சொல்ல வார்த்தைகளே இல்லை.. இதை உணர்வு பூர்வமாக ரசிக்க வேண்டும்..

அன்புடன் -

தினேஷ்மாயா 

0 Comments: