காதலியே காதலியே காதலை ஏன் மறந்தாய்..?

Friday, April 09, 2010



காதலியே காதலியே
காதலை ஏன் மறந்தாய்..?எத்தனையோ பெண்களிளே
எனக்கென ஏன் பிறந்தாய்..?
இனிமேல் யார் துணையோ ?

இவளே கீர்த்தனையோ ?
பட்டாம்பூச்சி குளிக்கும்போது 

சாயம் போகுமோ.. ?
கண்ணும் கண்ணும் மோதும் போது 
காயம் ஆகுமோ.. ?
கண்ணாடி பொம்மை ஒன்று கல்மீது விழுந்தது என்ன.. ?

தண்ணீரில் வாழும் மீனின் தாகத்தை யார் அறிவார்.. ?
காதலியே காதலியே 

காதலை ஏன் மறந்தாய்.. ?
எத்தனையோ பெண்களிளே 
எனக்கென ஏன் பிறந்தாய்.. ?
உள்ளங்கையில் தேடி பார்த்தேன் 

ஆயுள் ரேகை இல்லையே.. ! 
கனவு மட்டும் எனக்கு உண்டு 
கண்ணை காணவில்லையே.. !

கடற்கரை மணலில் எல்லாம் 

காதல் ஜோடி கால்தடம்.. !
எந்தன் பாதம் எங்கே வைப்பேன் 
வந்து சொல்வாய் என்னிடம்.. !
ஒரு வீணையை கைகளில் கொடுத்து 

என் விரல்களை ஏனடிபறித்துவிட்டாய்.. ? 
ஒரு காதல் நாடகம் நடத்தி 
அடி நீ எனை திரையிட்டு மறைத்தாய்.. !
கண்ணாடி பொம்மை ஒன்று கல்மீது விழுந்தது என்ன.. ?

தண்ணீரில் வாழும் மீனின் தாகத்தை யார் அறிவார்.. ?
தூங்கும் போது கண்கள் இரண்டும் 

போர்வை கேட்க கூடுமோ.. ?
தண்ணீர் மீது பூக்கும் பூக்கள்
காய்ச்சல் வந்து சாகுமோ.. ?
இறந்து போன காதல் கவிதை 

இரங்கல் கூட்டம் போடுதோ.. ? 
எனக்குள் இருக்கும் உந்தன் இதயம் 
எகிறி குதித்து ஓடுதோ.. ?

ஒரு சுதந்திர கிளியாய் பறந்தேன் 

எனைஜோசிய கிளியாய் சிறையெடுத்தாய்.. ! 
ஒரு வாரத்தில் ஏழு நாட்கள் 
என் காதல் விடுமுறை நாளோ.. !

கண்ணாடி பொம்மை ஒன்று கல்மீது விழுந்தது என்ன.. ?

தண்ணீரில் வாழும் மீனின் தாகத்தை யார் அறிவார்.. ?



காதலியே காதலியே
காதலை ஏன் மறந்தாய்..?எத்தனையோ பெண்களிளே
எனக்கென ஏன் பிறந்தாய்..?

இனிமேல் யார் துணையோ ?
இவளே கீர்த்தனையோ ?



பட்டாம்பூச்சி குளிக்கும்போது 
சாயம் போகுமோ.. ?
கண்ணும் கண்ணும் மோதும் போது 
காயம் ஆகுமோ.. ?


படம் : ஜித்தன்..

- தினேஷ்மாயா 

0 Comments: