சின்னப்பயளே சின்னப்பயளே

Sunday, December 11, 2011




சின்னப்பயளே சின்னப்பயளே
சேதி கேளடா…
சின்னப்பயளே சின்னப்பயளே
சேதி கேளடா…
நான் சொல்லப்போற
வார்த்தயை நல்லா எண்ணிப்பாரடா..
நீ எண்ணிப்பாரடா..
சின்னப்பயளே சின்னப்பயளே
சேதி கேளடா…

ஆழும் வளரனும் அறிவும் வளரனும்
அதுதான்டா வளர்ச்சி…
ஆழும் வளரனும் அறிவும் வளரனும்
அதுதான்டா வளர்ச்சி…
உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே
நீ தரும் மகிழ்ச்சி..
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே
நீ தரும் மகிழ்ச்சி..
நாளும் ஒவ்வொரு பாடும் கூறும்
காலம்தரும் பயிற்சி..
உன் நரம்போடுதான் பின்னி வளரனும்
தன்மான உணர்ச்சி…
சின்னப்பயளே சின்னப்பயளே
சேதி கேளடா…

மனிதனாக வாழ்ந்திட வேணும்
மனதில் வையடா
தம்பி மனதில் வையடா
வலர்ந்து வரும் உலகத்துக்கே
நீ வலது கையடா
நீ வலது கையடா…
தனியுடமை கொடுமைகள் தீர
தொண்டு செய்யடா…
நீ தொண்டு செய்யடா…
தனியுடமை கொடுமைகள் தீர
தொண்டு செய்யடா…
நீ தொண்டு செய்யடா…
தானாய் எல்லாம் மாறும் என்பது
பழைய பொய்யடா…
எல்லாம் பழைய பொய்யடா…
சின்னப்பயளே சின்னப்பயளே
சேதி கேளடா…


வேப்பமர உச்சியில் நின்னு
பேயொன்னு ஆடுதுன்னு……
வேப்பமர உச்சியில் நின்னு
பேயொன்னு ஆடுதுன்னு……
விளையாட போகும்போது
சொல்லிவைப்பாங்க..
உந்தன் வீரத்தை கொழுந்திலேயே
கிள்ளிவைப்பாங்க..
வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வார்த்தைகளை
வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக்கூட நம்பிவிடாதே..
நீ வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து
வெம்பிவிடாதே…
நீ வெம்பிவிடாதே…
சின்னப்பயளே சின்னப்பயளே
சேதி கேளடா…

திரைப்படம் : அரசிளங்குமாரி
பாடியவர் : டி.எம்.எஸ்

- என்றும் அன்புடன்
தினேஷ்மாயா

0 Comments: