தூங்காதே தம்பி தூங்காதே..

Sunday, December 11, 2011





தூங்காதே தம்பி தூங்காதே..
தூங்காதே தம்பி தூங்காதே..
நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே…
தூங்காதே தம்பி தூங்காதே..
நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே…
தூங்காதே தம்பி தூங்காதே..

நீ தாங்கிய உடையும் ஆயுதமும்
பல சரித்திர கதை சொல்லும் சிறைக்கதவும்…
நீ தாங்கிய உடையும் ஆயுதமும்
பல சரித்திர கதை சொல்லும் சிறைக்கதவும்…

சத்தி இருந்தால் உனை கண்டு சிரிக்கும்
சத்தி இருந்தால் உனை கண்டு சிரிக்கும்
சத்திரம்தான் உனக்கு இடம் கொடுக்கும்…

தூங்காதே தம்பி தூங்காதே..
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே…
தூங்காதே தம்பி தூங்காதே..


நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள்
நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்…
நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்கள்
நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்…

சிலர் அல்லும் பகலும் தெரு கல்லாய் இருந்துவிட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார்…
அல்லும் பகலும் தெரு கல்லாய் இருந்துவிட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக் கொண்டார்…

விழித்துக்கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொண்டார்….
விழித்துக்கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொண்டார்
உன்போல் குறட்டை விட்டோரெல்லாம் கோட்டைவிட்டார்…

தூங்காதே தம்பி தூங்காதே..
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே…
தூங்காதே தம்பி தூங்காதே..

போர்ப்படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான்
போர்ப்படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான்
உயர்பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான்
கொண்ட கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான்
இன்னும் பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால்
பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா…

தூங்காதே தம்பி தூங்காதே..
சோம்பேறி என்ற பெயர் வாங்காதே…
தூங்காதே தம்பி தூங்காதே..
தம்பி தூங்காதே…

திரைப்படம் : நாடோடிமன்னன்

- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: