நிலாக்காலம் !

Wednesday, December 07, 2011




வண்ணத்துப்பூச்சியின்
இரண்டு சிறகுகளாய்
படபடத்துக் கொண்டு
துள்ளித் திரிந்த
காலம்…
கவலை என்பதை
கனவிலும் நினைத்திறாத
காலம்…
நாள்முழுதும் நண்பர்களுடன்
விளையாடியே கழித்த
காலம்…
வீட்டிலும் பள்ளியிலும்
உணராத சுதந்திரத்தை
ஆற்றங்கரை மணலின்
விளையாட்டில் உணந்த
காலம்…
அதுவே நம் பள்ளிப்பருவம்
எனப்படும்
நிலாக்காலம் !

- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: