கல்லூரி..

Sunday, December 18, 2011



என் நண்பன் கல்லூரி வாழ்க்கை முடிந்து நாங்கள் வெளியே வரும்போது சொன்ன வாசகம் இது..

“ மச்சி, இந்த நாலு வருஷம் கல்லூரி இருந்துச்சு. எந்த பயமும் இல்லாம இருந்தோம். இப்போ கல்லூரிய விட்டு வெளியே வந்துட்டோம். வாழ்க்கைய நினைச்சாவே பயமா இருக்குடா”

கல்லூரி வாழ்க்கை என்பது எவ்வளவு பெரிய பாதுகாப்பான உணர்வை ஒரு மாணவனுக்கு தருகிறது பாருங்கள். பாதிக்குப் பாதி மாணவர்கள் கல்லூரி வாழ்க்கையை சரியாக பயன்படுத்தி தங்கள் வாழ்க்கையை பண்படுத்திக் கொள்கின்றனர். சிலர் பாழாக்கிக் கொள்கின்றனர்..

நான் கடைசி வரையிலும் என் கல்லூரியின் மாணவனாகவே இருந்துவிட வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்...


- என்றும் அன்புடன்..
தினேஷ்மாயா

0 Comments: