சொந்தம்

Sunday, September 30, 2012




    பிறக்கும்போது பெயர்கூட இல்லாமல் தான் பிறந்தோம். ஆனால் எங்கிருந்து வந்தது இந்த பெயர், புகழ், மானம், மரியாதை, கௌரவம், சொத்து இவையெல்லாம். சரி எங்கிருந்தோ வந்திருக்கட்டும் விடுங்கள். அவற்றை எங்கு கொண்டு செல்ல போகிறோம் நாம். சுடுகாட்டிற்கா?

   நாம் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, சுடுகாட்டில் வெட்டியானுக்கு நாம் வெறும் பிணம் தான். கடைசியில் எதுவும் நம் கூட வருவதில்லை. நம் பெயர் கூட மாறி, பிணம் என்றாகிவிடுகிறோம். ஆனால் இது எனக்கு சொந்தம் அது உனக்கு சொந்தம் என்று பாகுபாட்டினை நாமே வகுத்து பகைமையையும் வளர்த்து வருகிறோம். இந்த மாயையை எப்போது நாம் உணர்ந்து வாழப்போகிறோம் என்பது எனக்கு தெரியவில்லை.

- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: