இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே

Sunday, September 16, 2012




இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னைக்கண்டு.. உன்னைக் கண்டு
என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே

தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே
தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே - இதை
எண்ணி எண்ணி .. எண்ணி எண்ணி
எண்ணி எண்ணி எந்தன் நெஞ்சம் ஏங்குதே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே

கண்கள் நாடும் கண்ணாளா எந்தன் கீதமே
எந்த நாளும் உன் சொந்தம் தான் ஆனதிலே
கண்கள் நாடும் கண்ணாளா எந்தன் கீதமே
எந்த நாளும் உன் சொந்தம் தான் ஆனதிலே
கொஞ்சிப் பேசும் நம் எண்ணம் போல் பாரிலே - இனி
கொள்ளை கொள்ளை இன்பம் தானே வாழ்விலே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே

துள்ளி ஆடும் பெண் மானே எந்தன் வாழ்விலே
இன்ப தீபம் உன் ரூபம் தான் மாமயிலே
துள்ளி ஆடும் பெண் மானே எந்தன் வாழ்விலே
இன்ப தீபம் உன் ரூபம் தான் மாமயிலே
வெள்ளம் போலே என் ஆவல் மீறுதே - ஒரு
எல்லையில்லா இன்பம் அலை மோதுதே
தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே

அன்பில்
ஊறும் மெய்க் காதல் போலே பாரிலே
இன்பம் எதும் வேறில்லையே ஆருயிரே
கன்னல் சாறும் உன் சொல்லைப் போல் ஆகுமோ? - என்னைக்
கண்டும் உந்தன் வண்டு விழி நாணுமோ?

இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே
தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே
எண்ணி எண்ணி என்தன் நெஞ்சம் ஏங்குதே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே

திரைப்படம்: வீரபாண்டிய கட்டபொம்மன்
பாடியவ்ர்கள் : P.சுசீலா, P.B.ஸ்ரீனிவாஸ்
இசை: ஜி. ராமநாதன்
வரிகள்: கு.மா. பாலசுப்பிரமணியம்

- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: