அம்மம்மா தம்பி என்று நம்பி

Sunday, September 16, 2012




அம்மம்மா
தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான்
அம்மம்மா
தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான்
தாய் என்றும் தந்தை என்றும் தன்னை நினைத்தான்
தாய் என்றும் தந்தை என்றும் தன்னை நினைத்தான்
அது உனக்காக வாழ்ந்த உள்ளம் அல்லவோ
அது உனக்காக வாழ்ந்த உள்ளம் அல்லவோ
அம்மம்மா
தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான்

கையில் வைத்து காத்திருந்தால்
காலடியில் காத்திருக்கும்
நன்றி மிக்க நாய்கள் உள்ள நாடு
இதில் சொந்தமின்றி பந்தமின்றி
வந்த வழி நினைவுமின்றி
பிள்ளைகளும் பிறந்திருக்கும் வீடு

ராம நாடகத்தில் மூன்று தம்பிகளின் உள்ளம் கண்டேனே
நல்ல பாரதத்தில் நான்கு தம்பிகளை நானும் கண்டேனே
ராம நாடகத்தில் மூன்று தம்பிகளின் உள்ளம் கண்டேனே
நல்ல பாரதத்தில் நான்கு தம்பிகளை நானும் கண்டேனே
அது நாடகமாஇது நாடகமா
அது நாடகமாஇது நாடகமா
இங்கு நான் காணும் வேஷங்கள் கொஞ்சமல்லவே
நான் இது போன்ற வேஷத்தில் வந்ததில்லையே

அம்மம்மா
தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான்

தங்கை என்னும் இளைய கன்று
தாய் வீடு வந்ததென்று
என்னுடைய நாடகத்தில் காட்சி
அவள் கொண்டவனை பிரிந்து வந்து
கோலம் கொண்டு நிற்பதனை
கண்டதற்கு இன்னொருவன் சாட்சி

கண்ணில் நீர் பெருக சீதை நின்ற நிலை கண்ணில் தெரிகிறது
அண்ணன் கொண்ட துயர் தம்பி லட்சுமணன் நெஞ்சில் எழுகிறது
கண்ணில் நீர் பெருக சீதை நின்ற நிலை கண்ணில் தெரிகிறது
அண்ணன் கொண்ட துயர் தம்பி லட்சுமணன் நெஞ்சில் எழுகிறது
அது பாசமன்றோஇது வேஷமன்றோ
அது பாசமன்றோஇது வேஷமன்றோ
அவன் ராஜாதி ராஜனுக்கு பிள்ளை அல்லவோ
இந்த ராஜபார்ட் ரங்கதுரை ஏழை அல்லவா

அம்மம்மா
தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான்
தாய் என்றும் தந்தை என்றும் தன்னை நினைத்தான்
அது உனக்காக வாழ்ந்த உள்ளம் அல்லவோ
அம்மம்மா
தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான்


திரைப்படம்: ராஜபார்ட் ரங்கதுரை
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: டி.எம்.சௌந்தர்ராஜன்
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்

- அன்புடன்
****தினேஷ்மாயா****

0 Comments: