பயம்...

Monday, August 23, 2010



வாழ்க்கையில் பயம் இல்லா மனிதரே இருக்க முடியாது. பயம் என்பது இருக்கும் வரை நம்மிடம் உயிர் என்பது இருக்கும்.

இருட்டை கண்டு பயந்ததால் தான் வெளிச்சத்தை செயற்கையாக கண்டுபிடித்தோம்.தூரத்தைக் கண்டு பயந்ததால் வாகனங்களை கண்டுபிடித்தோம். தோல்வியை கண்டு பயந்ததால் வெற்றியை நோக்கி பயணிக்கிறோம். மரணத்தைக் கண்டு பயப்படுவதால் தான் இன்னமும் உயிருடன் இருக்கிறோம். 

அனைவரும் சொல்வார்கள். வீரனுக்கு பயம் என்பதே கிடையாது என்று. இவ்வுலகில் பயப்படாத மனிதரே இருக்க முடியாது. வீரனுக்கும் பயம் வரும். அதை வெளிக்காட்டிக்கொள்ளாதவனே உண்மையான வீரன்.

அனைவரும் பயப்படுங்கள். ஆனால் அந்த பயம் உங்களை முன்னேற்றப்பாதையை நோக்கி அழைத்து செல்லட்டும்...


அன்புடன் -
தினேஷ்மாயா 

0 Comments: