ரூ.10 ஆயிரம் !

Tuesday, August 24, 2010



ரூ.10 ஆயிரம் !


எம்.பி.,க்களுக்கான சம்பளம் மற்றும் அலவன்ஸ்கள் கடந்த வாரம் அதிகரிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு மீண்டும், "ஜாக்பாட்' அடித்துள்ளது. எம்.பி.,க்களுக்கான மாதாந்திர அலவன்ஸ்களை 10 ஆயிரம் ரூபாய் உயர்த்த, மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த அலவன்ஸ்களுக்கு வருமான வரிச் சலுகையும் உண்டு.

எம்.பி.,க்கள் தற்போது மாதம் 16 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுகின்றனர். "இந்த சம்பளத்தை 80 ஆயிரத்து ஒரு ரூபாயாக உயர்த்த வேண்டும்' என, பார்லிமென்ட் கூட்டுக் குழு பரிந்துரை செய்தது. ஆனால், அந்த அளவுக்கு உயர்த்தினால், மக்களிடையே பெரும் அதிருப்தி உருவாகும் என்பதால், தற்போது வாங்குவதை மூன்று மடங்கு அதிகமாக உயர்த்தி, மாதம் 50 ஆயிரம் ரூபாய் என சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரவையும் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. அத்துடன், தொகுதி மற்றும் அலுவலக அலவன்ஸ்கள் மாதம் தலா 20 ஆயிரம் ரூபாய் என்பது 40 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. இருந்தாலும், "இந்த சம்பள உயர்வு போதாது, பார்லிமென்ட் கூட்டுக் குழு பரிந்துரைத்தபடி, 80 ஆயிரத்து ஒரு ரூபாயாக எம்.பி.,க்களின் சம்பளத்தை நிர்ணயிக்க வேண்டும்' என வலியுறுத்தி, கடந்த வாரம் ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் எம்.பி.,க்கள் பார்லிமென்டில் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அந்த கட்சிகளின் தலைவர்களுடன் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆலோசனை நடத்தினார். பின்னர், சம்பள உயர்வு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், எம்.பி.,க்களின் தொகுதி அலவன்ஸ் மற்றும் அலுவலக அலவன்ஸ்களை மாதம் ஒன்றுக்கு தலா 5 ஆயிரம், அதாவது இரண்டும் சேர்த்து 10 ஆயிரம் ரூபாய் அதிகரிக்க வகை செய்யும் முன்மொழிவை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார். இதற்கு அமைச்சரவையும் உடனடியாக ஒப்புதல் அளித்தது. இந்த அலவன்ஸ்களுக்கு வருமான வரிச் சலுகையுண்டு. இதனால், எம்.பி.,க்கள் இனி மாதம் ஒன்றுக்கு தொகுதி அலவன்சாக 45 ஆயிரம் ரூபாயும், அலுவலக அலவன்சாக 45 ஆயிரம் ரூபாயும் சேர்த்து 90 ஆயிரம் ரூபாய் அலவன்சாக பெறுவர். சம்பளம் 50 ஆயிரம் ரூபாயையும் சேர்த்தால், மாதம் ஒன்றுக்கு 1.40 லட்சம் ரூபாய் பெறுவர். இதுதவிர, வேறு பல சலுகைகளும் உண்டு.



நன்றி : தினமலர்


இனியாவது யோசியுங்கள். இவர்கள் நமக்கு எதையும் செய்ய மாட்டார்கள். நாம் தான் மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்பதை..

அன்புடன் -




தினேஷ்மாயா  

0 Comments: